search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold Rings"

    • அ.தி.மு.க பொதுச்செயலாளர் பிறந்த நாளையொட்டி தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்த நாளையொட்டி திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஏற்பாட்டின் பேரில் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பழனிச்சாமி .முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்.என்.நடராஜன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதி செயலாளர் கே. பி.ஜி.மகேஷ்ராம், அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், திருப்பூர் மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிச்சாமி, இணைச் செயலாளர் விவேகானந்தன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், இணைச் செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்படநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 15குழந்தைகளுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் வழங்கினார்.
    • தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், மாநகர செயலாளர் சரவண குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் பிறந்த 15குழந்தைகளுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் வழங்கினார்.

    இதில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மண்டல தலைவர் அன்னலட்சுமி, அணி நிர்வாகிகள் ஆனந்த்கேப்ரியேல்ராஜ், ரமேஷ், சேசையா, ரவி, அருண்சுந்தர், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், ராம கிருஷ்ணன், கவுன்சி லர்கள் வைதேகி, இசக்கி ராஜா, விஜயலட்சுமி, சரவண குமார், பவானி மார்ஷெல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×