search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
    X

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் வழங்கிய போது எடுத்தபடம்.

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

    • தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 15குழந்தைகளுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் வழங்கினார்.
    • தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், மாநகர செயலாளர் சரவண குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் பிறந்த 15குழந்தைகளுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் வழங்கினார்.

    இதில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மண்டல தலைவர் அன்னலட்சுமி, அணி நிர்வாகிகள் ஆனந்த்கேப்ரியேல்ராஜ், ரமேஷ், சேசையா, ரவி, அருண்சுந்தர், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், ராம கிருஷ்ணன், கவுன்சி லர்கள் வைதேகி, இசக்கி ராஜா, விஜயலட்சுமி, சரவண குமார், பவானி மார்ஷெல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×