search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mirchi Siva"

    • அந்தோணிதாசன் மற்றும் எட்வின் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்
    • சூது கவ்வும் 2 படத்தின் முதல் பாடலான 'வீ ஆர் நாட் தி சேம்' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

    சூது கவ்வும் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார்.

    இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார்.

    இந்நிலையில், சூது கவ்வும் 2 படத்தின் முதல் பாடலான 'வீ ஆர் நாட் தி சேம்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. பாடலின் வரிகள் காமெடியாகவும் அதே சமயம் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கிறது. அந்தோணிதாசன் மற்றும் எட்வின் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். லா. வரதன் இப்பாடலிற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். எட்வின் லூவிஸ் விஸ்வனாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    . சூது கவ்வும் முதல் பாகத்தின் பாடல்கள் ஹிட்டானது போல் இப்படத்தின் பாடல்களும் ஹிட்டாகும் என மக்களிடம் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார்.
    • இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார்.

    சூது கவ்வும் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார்.

    இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார்.

    இந்நிலையில், சூது கவ்வும் 2 படத்தின் முதல் பாடலான வீ ஆர் நாட் தி சேம் என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது. சூது கவ்வும் முதல் பாகத்தின் பாடல்கள் ஹிட்டானது போல் இப்படத்தின் பாடல்களும் ஹிட்டாகும் என மக்களிடம் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

    இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் சூது கவ்வும்
    • இப்படத்தில் நடிகர் மிர்சி சிவா, கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

    இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் சூது கவ்வும். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன் மற்றும் சஞ்சிதா செட்டி முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்து இருந்தனர். நலன் குமாரசாமி இப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    தமிழின் சிறந்த ப்ளாக் க்யூமர் திரைப்படங்களில் ஒன்றாக சூது கவ்வும் இன்றும் கருதப்படுகிறது.

    இதில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் இப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சூது கவ்வும் படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக கடந்த ஆண்டு  படக்குழுவினர் அறிவித்தனர். இரண்டாம் பாகத்தை இயக்குனர் எம். எஸ் அர்ஜூன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் மிர்சி சிவா, கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நேற்று ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜில் 10000 மாணவர்கள் முன்னிலையில் வெளியிட்டனர். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மற்றும் படக்குழுவினரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தை தங்கம் சினிமாஸ் எஸ்.தங்கராஜுடன் இணைந்து சி.வி.குமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார். படம் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என தெரிவித்தார் சி.வி.குமார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

    'சென்னை 28', 'தமிழ் படம்', 'கலகலப்பு' போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர் மிர்சி சிவா. இவர் சமீபத்தில் நடித்த 'காசேதான் கடவுளடா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இதைத்தொடர்ந்து இவர் தற்போது 'கன்னிராசி', 'தர்மபிரபு' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் முத்து குமரன் இயக்கத்தில் 'சலூன் - எல்லா மயிரும் ஒன்னுதான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 

    இப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரேதன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். அழர் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில், சலூன் படத்தின் "மயிர்" என்கிற பாடல் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

    இந்த பாடலை, இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டு பகிர்ந்துள்ளார்.

    • 'சூது கவ்வும் -2 நாடும் நாட்டு மக்களும்' படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார்.
    • இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி' சிவா நடிக்கிறார்.

    கடந்த 2013-ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் 'சூது கவ்வும்'. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக்செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    இதனைத் தொடர்ந்து 'சூது கவ்வும் -2 நாடும் நாட்டு மக்களும்' படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி' சிவா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார். திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.


    சூது கவ்வும் 2 போஸ்டர்

    இந்நிலையில், 'சூது கவ்வும் -2 நாடும் நாட்டு மக்களும்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகர் ராதா ரவி இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், இந்த வருஷம் எலெக்ஷன் இருக்குப்பா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


    • அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என். இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'
    • இப்படம் நாளை (பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என் எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடித்திருக்கிறார்கள்.

    மேலும், பாடகர் மனோ, மா.கா.பா. ஆனந்த், ஷா ரா, திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் கே.குமார் தயாரித்துள்ளார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.


    சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பாடகர் மனோ பேசியதாவது, '' இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குனர், தயாரிப்பாளர், மிர்ச்சி சிவா ஆகியோருக்கு நன்றி. 'சிங்காரவேலன்' படத்தில் நடித்த பிறகு இசைஞானி இளையராஜா என்னை அழைத்து, 'மீண்டும் நடிக்கச் சென்றால், உனக்காக பாட்டு காத்துக்கொண்டிருக்காது' என சொன்னார். இதற்குப் பிறகு நடிப்பின் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

    ஏனெனில் எந்த பாடல் வெற்றி பெறும் என்று தெரியாது. அதன் பிறகு தயாரிப்பாளர் குமாரிடமும், இயக்குனரிடமும் எப்போது நடிக்க முடியும் என்பதனை தெரிவித்து விடுவேன். அதற்கு ஏற்ப சமரசம் செய்து கொண்டு. என்னை நடிக்க வைத்தனர். கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு இப்போது தான் மேடைக் கச்சேரிகளுக்கு வாய்ப்பு வருகிறது. அதனை தவறவிட மாட்டேன் என்று சொன்னவுடன், அதனையும் படக் குழுவினர் புரிந்து கொண்டு, எனக்கு கிடைத்த ஓய்வில் பயன்படுத்திக் கொண்டனர்.


    சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படக்குழு

    'சிங்காரவேலன்' படப்பிடிப்பின் போது ஒரு முறை ஆறு மணி அளவில் கமல்ஹாசன் படப்பிடிப்பிற்கு வருகை தந்திருந்தார். இந்த தகவலை இயக்குனர் உதயகுமார் எனக்கு தெரிவிக்கவில்லை. நான் அதன் போது 15 நிமிடம் தாமதமாக படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றேன். அந்த படப்பிடிப்பு தளத்திலிருந்த அனைவரும் 'வணக்கம்' வைத்தனர். அதற்கு அடுத்த நாளிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்றேன். அதேபோல் இந்தப் படத்திலும் குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்று விடுவேன். இதே பாணியை படத்தின் நாயகனான மிர்ச்சி சிவாவும் பின்பற்றினார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்." என்றார்.

    • நடிகர் சிவா தற்போது 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

    அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என் எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடித்திருக்கிறார்கள்.


    சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

    மேலும், பாடகர் மனோ, மா.கா.பா.ஆனந்த், பக்ஸ், ஷா.ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, கே.பி.ஒய்.பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் கே.குமார் தயாரித்துள்ளார்.


    சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

    ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், நடிகர் சிவாவை ரோகித் சர்மா உடன் ஒப்பிட்டு பலவிதமான மீம்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

    இது குறித்து சிவா கூறியதாவது, "என்னையும் ரோஹித் சர்மாவையும் ஒப்பிட்டு நிறைய மீம்ஸ்கள் போடுகிறார்கள். என்னால் ரோஹித் சர்மா போல் கிரிக்கெட் ஆட முடியாது. அதேபோல என்னைப்போல அவரால் டான்ஸ் ஆட முடியாது' என்று கலகலப்பாக பேசினார்.

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேன்ன நடிப்பில் வெளியாகி திரையரங்குளில் ஓடிக் கொண்டிருக்கும் `தமிழ்ப்படம் 2' படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #TP2 #Tamizhpadam2
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேன்ன நடிப்பில் நேற்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் `தமிழ்ப்படம் 2'. தமிழ்ப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த பாகம் போலீஸ் அத்தியாயமாக உருவாகி இருக்கிறது. முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

    படத்தில் நடிகர் சிவா போலீஸ் அதிகாரியாக வந்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார். ரஜினி, கமல், அஜித், விஜய், விஷால் என பிரபல நடிகர்களின் படங்களை கலாய்த்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள சதீஷுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
    படம் ரிலீசாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #TP2 #Tamizhpadam2

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தமிழ்ப்படம் 2' படத்தின் விமர்சனம். #TP2 #Tamizhpadam2
    தமிழ்ப்படம் முதல் பாகத்தில் `டி' என்ற வில்லனை கண்டுபிடிக்க போலீசாக வரும் சிவாவுக்கு, தனது பாட்டியை கைது செய்ய வேண்டிய நிலை வர தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்வார். அதன் தொர்ச்சியாக இந்த படம் உருவாகி இருக்கிறது. 

    மதுரையில் கலவரம் நடக்க, அதை கட்டுப்படுத்த சிவாவால் தான் முடியும் என்று, காவல்துறை சிவாவின் உதவியை நாடுகிறது. சமூக நலனை கருத்தில் கொண்டு சிவா கலவரக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பேசியே அந்த பிரச்சனையை தீர்த்தும் வைக்கிறார். அவரது இந்த அசாத்திய திறமையை பார்த்து வியக்கும் காவல்துறை, அவரை மீண்டும் பணியில் சேர அழைக்க, சிவா மறுத்துவிடுகிறார். 



    இந்த நிலையில், சிவாவின் வீட்டிற்கு ஒரு பார்சல் வருகிறது. அதை அவரது மனைவி திஷா பாண்டே வாங்கி திறக்கும் போது குண்டுவெடித்து இறந்துவிடுகிறார். சிவாவின் பாட்டி நமது குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்று சிவாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார். இதற்கிடையே ஐஸ்வர்யா மேனனையும் சந்திக்கிறார். இருப்பினும் தனது மனைவியை கொன்றவனை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக கண்ணீர் மல்க மீண்டும் போலீஸ் வேலையில் சேர்கிறார். 

    மீண்டும் போலீசில் சேரும் சிவா, அந்த பார்சலை அனுப்பியது `பி' என்று அழைக்கப்படும் சதீஷ் என்பது தெரிய வருகிறது. சிவாவை மீண்டும் போலீஸ் வேலையில் சேர வைத்து சிவாவை பழிவாங்க வேண்டும் என்பதே சதீஷின் நோக்கம். 



    கடைசியில், தனது மனைவியை கொன்ற சதீஷை சிவா பழிவாங்கினாரா? இரண்டாவது திருமணம் செய்தாரா? ஐஸ்வர்யா மேனனுடன் இணைந்தாரா? சிவாவின் போலீஸ் அத்தியாயம் எப்படி முடிந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் சிவா முதல் பாகத்தை போலவே, இந்த பாகத்திலும் தனக்கே உண்டான தனித்துவமான நடிப்புடன், நடனத்துடன், பேச்சுடன், அன்புடன், அடக்கத்துடன், பணிவுடன், கோபத்துடன், சிரிப்புடன், கவலையுடன், காதலுடன், பிரம்மாண்டத்துடன் கலக்கியிருக்கிறார். இந்த பாகத்திலும் சிவாவின் போட்டி நடனம் பிரளயத்தை உண்டுபண்ணும்படியாக இருக்கிறது. அகில உலக சூப்பர் ஸ்டாராகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 



    ஐஸ்வர்யா மேனன் அவருக்கு கொடுத்த கதபாத்திரத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக `எவடா உன்ன பெத்தா' பாடலில் அவரது நடனம் ரசிக்கும்படியாக இருக்கிறது. வில்லனாக சதீஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். தசாவதாரம் கமலை விட இந்த படத்தில் சதீஷுக்கு கெட்அப்புகள் அதிகம். அதிலும் அவர் கவர்ந்திருக்கிறார். தொடக்கம் முதல் இறுதி வரை சிவா - சதீஷ் இடையே நடக்கும் அதி தீவிர மோதல் அனைவரையும் கவரும்படியாக இருக்கிறது. 

    திஷா பாண்டே குடும்ப பெண்ணாக சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார். சேத்தன், கலைராணி கதாபாத்திரங்கள் ரசிகர்களை கவர்கிறது. நிழல்கள் ரவி, மனோபாலா, சந்தான பாரதி, ஜார்ஜ் படத்தின் ஓட்டத்துக்கு உதவியாக இருந்துள்ளனர். 



    தமிழ்ப்படம் முதல் பாகத்தில் நடிகர் சிவா போலீசாக வருவார். அதன் தொடர்ச்சியாக, போலீஸ் அத்தியாயமாக இந்த பாகத்தை உருவாக்கி இருக்கிறார் சி.எஸ்.அமுதன். முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் தனது அட்ராசிட்டியை உச்ச நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார் அமுதன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால் என பிரபல நடிகர்கள் ஒருத்தரைது படத்தையும் விட்டுவைக்கவில்லை. படத்தில் முடிவில் முன்னணி நாயகிகளை வைத்து உருவாக்கி இருக்கும் காட்சிகளும் ரசிகர்களை கவரும்படியாகவே இருக்கிறது. 

    அரசியல் பிரபலங்கள், தொலைக்காட்சி சேனல்கள் என அனைத்தையும் கலாய்த்துள்ளனர். கலாய்ப்பது மட்டுமின்றி, சமூகத்திற்கு தேவையானவற்றை வலியுறுத்துவதும், சமூகத்தில் நடக்கும் குற்றங்களை குத்திக்காட்டும்படியாகவும் சில காட்சிகளை ஆங்காங்கே வைத்திருப்பது சிறப்பு. இவ்வாறாக அனைத்தும் கலந்த கலவையாக, இளைஞர்களுக்கு ஏற்ற படமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். இருப்பினும் படத்தின் நீளத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் படம் சிறப்பாக இருக்கும். 



    கண்ணனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. கோபி அமர்நாத்தின் கேமராவில் காட்சிகள் பல இடங்களை ரம்மியமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. 

    மொத்தத்தில் `தமிழ்ப்படம் 2' வச்சி செஞ்ச படம். #TP2 #Tamizhpadam2 #Shiva #IshwaryaMenon

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் தமிழ்ப்படம் 2 நாளை வெளியாக இருக்கும் நிலையில், வெற்றி அடைந்த படங்களை தான் எடுத்து ஸ்பூப் பண்ண முடியும் என்று நடிகர் சிவா கூறினார். #Tamizhpadam2 #TP2 #Shiva
    போஸ்டர்கள் மூலமாகவே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது தமிழ்படம் 2. அதன் கதாநாயகன் சிவாவிடம் பேசினோம்.

    ஸ்பூப் பண்ணுவது எளிது அல்ல. எளிது என்றால் இந்நேரம் தமிழ்படம் பாணியில் 10 படங்களாவது வந்து இருக்கும். ஒரு படம் கூட வரவில்லையே? புதிதாக ஒரு கதையை உருவாக்குவது கூட எளிது. ஆனால் ஏற்கெனவே இருக்கும் காட்சிகளை வைத்து கதை எழுதுவது சிரமம். படம் தொடங்குவதற்கு 6 மாதங்கள் முன்பே தயாரிப்பாளர் சசிகாந்த் என்னை அழைத்து 2வது பாகம் உருவாக இருப்பதை கூறினார். கதை தயாரான பின் நான் பார்ட்டி, கலகலப்பு 2 படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால் தாமதம் ஆனது.

    உங்கள் கேரியரில் அடிக்கடி இடைவெளி விழுகிறதே?

    குவார்ட்டர் கட்டிங் தோல்விக்கு பிறகு நடிக்கவே வேண்டாம் என்று நினைத்தேன். ரேடியோவில் வேலை பார்க்கும்போது சுந்தர்.சி அழைத்ததால் கலகலப்பில் நடித்தேன். இடையில் படம் இயக்கும் எண்ணத்தில் கதைகள் எழுத தொடங்கினேன். சென்னை 28 பார்ட் 2, கலகலப்பு 2, பார்ட்டி, தமிழ்படம் 2 என்று போகிறது. நாம் ஒரு திட்டம் வைத்து இருந்தால், கடவுள் ஒரு திட்டம் வைத்து இருக்கிறார். பார்ப்போம்.



    தமிழ் சினிமாவில் உங்களுக்கு என்று ஒரு இடம் இல்லையே?

    நான் திரையில் தோன்றினால் சிரிப்பு வரும் என்று மக்கள் நம்புகிறார்கள். மக்களை திருப்திபடுத்தினால் போதும் என்று நினைக்கிறேன். இருக்கை நிரந்தரம் இல்லை என்று நினைப்பவர்கள் தான் இடம் பிடிக்க முயற்சிப்பார்கள். ஆனால் மக்கள் மனதில் இடம் இருக்கும்போது ஏன் மற்ற இடத்தை பற்றி கவலைப்பட வேண்டும்?

    யாரையும் கலாய்க்கவோ, கிண்டலடிக்கவோ இல்லை. வெற்றி அடைந்த படங்களை தான் எடுத்து ஸ்பூப் பண்ண முடியும். அப்போது தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இது ஒரு வகை சினிமா. இது யாரையும் புண்படுத்த செய்யவில்லை. ரசிக்க மட்டும்தான். ஏற்கனவே வந்த காட்சிகள் இப்படி இருந்தால் எப்படி இருந்து இருக்கும்? என்பதே ஸ்பூப். எனக்கு தெரிந்து யாரும் புண்பட்டதாக தெரியவில்லை. அப்படி புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    விடியற்காலை 5 மணி காட்சி அளவுக்கு வளர்ந்துவிட்டீர்கள். அகில உலக சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டீர்களா?

    அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? 5 மணிக்கு காட்சி திறக்க காரணம் மக்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு தான். இதை நான் மனதில் ஏற்றிக்கொண்டால் அடுத்த படத்துக்கு இது நடக்கவில்லையே என்று ஏமாற்றம் ஆவேன். நாம் எதையும் எதிர்பார்க்காமல் செய்தால் போதும். தானாக சில வி‌ஷயங்கள் நடக்கும்.



    சீரியஸ் வேடங்களில் நடிக்க விருப்பம் இல்லையா?

    காமெடி என்பதே சீரியசான வி‌ஷயம் தான். சீரியசான வேடங்களில் நடிப்பதைவிட காமெடி வேடம் தான் சிரமம்.

    கதைகள் தயாராகி இயக்கலாம் என்று முடிவெடுத்தால், யாராவது வந்து நடிக்க அழைத்து விடுகிறார்கள். நல்ல படம் கொடுக்க வேண்டும். எனவே காத்திருக்கிறேன்.

    எந்த திட்டமும் இல்லை. இனிமேல் தேர்ந்தெடுத்து தான் நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன் என்றார். #Tamizhpadam2 #TP2 #Shiva

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்ப்படம் 2' படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குநர் அமுதன் உறுதிப்படுத்தியிருக்கிறார். #Tamizhpadam2 #TP2
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தமிழ்படத்தின் இரண்டாவது பாகமாக `தமிழ்ப்படம் 2' உருவாகி இருக்கிறது. 

    சிவா நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் முதல் தற்போது வரை பல்வேறு திரைப்படங்களையும், அரசியல் சம்பந்தப்பட்ட சில நிகழ்ச்சிகளையும் கலாய்த்து போஸ்டர் வெளியிட்டு வரும் படக்குழு சமீபத்தில் பாகுபலி, நடிகையர் திலகம், டார்க் நைட், சின்னக்கவுண்டர் உள்ளிட்ட படங்களை சமீபத்தில் கலாய்த்து போஸ்டர் வெளியிட்டிருந்தது. படத்தின் டீசர் முதல் பாடல்கள் வரை நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படம் வருகிற 12-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக முன்னதாக தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், இயக்குநர் அமுதன் தற்போது அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். 
    படத்தின் ரிலீசுக்கு நடுவே ரசிகர்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்ட அமுதனிடம் ரசிகர்கள் படம் குறித்த பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதில் ரசிகர் ஒருவர் படத்தின் ரிலீஸ் எப்போது என கேட்க, 12 என்று அவர் பதிலளித்தார். இதன் மூலம் படத்தின் ரிலீஸை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். #Tamizhpadam2 #TP2

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2' படத்தை ரிலீஸ் செய்ய பயங்கரமான நாளை தேர்ந்தெடுத்திருப்பதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். #TamizhPadam2 #TP2
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் படம் `தமிழ்படம் 2'. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை ரிலீஸ் குறித்து படக்குழு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. 

    இந்த நிலையில், படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் அவரது டுவிட்டர் பக்கத்தில் `ஜூலை 13-ஆம் தேதி எனக்கு மிகவும் பயங்கரமானது, அந்த தேதியில் என்ன மறைந்திருக்கிறது என்று தெரியவில்லை, காத்திருங்கள்'. என்று குறிப்பிட்டிருக்கிறார். 



    இதில் இருந்து படத்தை ஜுலை 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் வெளியான படத்தில் டீசர், நேற்று வெளியான பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தில் சிவா ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #TamizhPadam2 #TP2

    ×