search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gurdaspur"

    • பலதரப்பட்ட மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் உதவுவதிலும் மட்டுமே எனது ஆர்வம் உள்ளது.
    • எனது அறக்கட்டளை YOUWECAN மூலம் அதைத் தொடர்ந்து செய்ய நினைக்கிறேன்.

    முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பாஜகவில் இணைந்து, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக தான் யுவராஜ் சிங், அண்மையில் மாநில பாஜக தலைவர் சோம்தேவ் சர்மா மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

    இது தொடர்பான செய்திகளுக்கு தற்போது யுவராஜ் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். தான் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை என்று கூறி, வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "பலதரப்பட்ட மக்களுக்கு ஆதரவு கொடுப்பதிலும் உதவுவதிலும் மட்டுமே எனது ஆர்வம் உள்ளது. எனது அறக்கட்டளை YOUWECAN மூலம் அதைத் தொடர்ந்து செய்ய நினைக்கிறேன். எங்களின் சிறந்த திறன்களை ஒன்றாக வெளிப்படுத்தி மாற்றத்தை உருவாக்குவோம்" என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    பா.ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த நடிகர் சன்னி டியோல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SunnyDeol
    புதுடெல்லி:

    பிரபல இந்தி நடிகர் சன்னி டியோல் கடந்த 23-ந்தேதி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.

    இதையடுத்து குர்தாஸ்பூர் தொகுதியில் நடிகர் சன்னி டியோல் பா.ஜனதா சார்பில் போட்டியிடக்கூடும் என்று தகவல்கள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் குர்தாஸ்பூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இதற்காக நேற்று பிரதமர் மோடியை சந்தித்து சன்னி டியோல் நன்றி தெரிவித்தார். முன்னதாக அவர் கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் செய்தார்.

    இன்று நடிகர் சன்னி டியோல் குர்தாஸ்பூர் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார். அவருடன் மறைந்த நடிகர் வினோத்கன்னாவின் மனைவி கவிதாகன்னா, மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் ஆகியோர் உடன் சென்றனர்.

    முன்னதாக நடிகர் சன்னி டியோல் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றார். அங்கு தேர்தல் வெற்றிக்காக சிறப்பு வழிபாடுகள் செய்தார். வேட்பு மனுதாக்கல் செய்ததை தொடர்ந்து நாளை முதல் குர்தாஸ்பூர் தொகுதியில் தீவிர பிரசாரத்தை தொடங்க சன்னி டியோல் திட்டமிட்டுள்ளார்.



    குர்தாஸ்பூர் தொகுதி பா.ஜனதா கட்சியின் கோட்டையாக கருதப்படும் தொகுதியாகும். பிரபல மறைந்த நடிகர் வினோத் கன்னா இந்த தொகுதியில் 1998, 1999, 2004, 2014-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

    வாஜ்பாய் அமைச்சரவையில் மந்திரியாகவும் வினோத் கன்னா இருந்தார். இதனால் இந்த தொகுதி பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக நீடிக்கிறது.

    இந்த தொகுதியை பா.ஜனதாவிடம் கைப்பற்றுவதற்காக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் தானே அந்த தொகுதியில் களம் இறங்கி உள்ளார். இதனால் அந்த தொகுதியில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    காங்கிரசின் தேர்தல் வியூகத்துக்கு பதிலடி கொடுப்பதற்காகவே நடிகர் சன்னி டியோலை பா.ஜனதா குர்தாஸ்பூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தி உள்ளது. பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் மகனான சன்னி டியோலுக்கு அந்த தொகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    வினோத் கன்னாவின் மனைவி கவிதா தீவிர பிரசாரம் செய்து சன்னி டியோலுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். ஹேமமாலினியும் சன்னி டியோலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார்.

    கதுவா கற்பழிப்பு வழக்கில் ஜம்மு காஷ்மீர் சிறையில் உள்ள குற்றவாளிகளை குர்தஸ்ப்பூர் சிறைக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #KathuaCase
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    சிறுமி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மன்னு என்பவரை போலீசார் துன்புறுத்துவதாக பதன்கோட் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு தொடர்பாக அம்மாநில டி.ஜி.பி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக பதிலளித்த டி.ஜி.பி இந்த குற்றச்சாட்டில் உண்மை ஏதும் இல்லை என பதிலளித்தார்.

    இதேபோல், சிறப்பு புலனாய்வுத்துறை அதிகாரிகளும் இந்த மனு பொய்யானது என தங்களது பதிலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதையடுத்து, சிறையில் இருக்கும் மன்னுவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, கதுவா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளை ஜம்மு காஷ்மீர் சிறையில் இருந்து பஞ்சாப்பில் உள்ள குர்தஸ்ப்பூர் சிறைக்கு மாற்றம் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

    மேலும், விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றால், பஞ்சாப் அல்லது அரியானா மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு இந்த வழக்கை மாற்றிக்கொள்ளலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, இந்த வழக்கினை விசாரித்து வரும் நீதிபதி மற்றும் சிறப்பு அரசு வக்கீல் ஆகியோருக்கு ஜம்மு காஷ்மீர் அரசு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெற்றோர்கள் அவர்களை சந்திக்க விரும்பினால் காஷ்மீர் மாநில அரசின் செலவில் அவர்களை பார்க்க அனுமதிக்குமாறும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. #KathuaCase
    ×