search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராம்பட்டினம் கோவில் விழாவில் வண்டியை பார்க்கிங் செய்வதில் மோதல்- வாலிபர் காயம்
    X

    வீராம்பட்டினம் கோவில் விழாவில் வண்டியை பார்க்கிங் செய்வதில் மோதல்- வாலிபர் காயம்

    வீராம்பட்டினம் கோவில் விழாவில் வண்டியை பார்க்கிங் செய்ததில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் ஒதியம்பட்டு அன்புநகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது30). இவர் நேற்று முன்தினம் வீராம்பட்டினம் கோவில் திருவிழாவுக்கு சென்றார். அங்குள்ள சுனாமி நகரில் பிரபாகரன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். அப்போது 2 பேர் வந்த மோட்டார் சைக்கிள் மீது பிரபாகரன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் உரசியது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரும் பிரபாகரனிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். மேலும் பீர்பாட்டிலால் குத்தினார். இதில் காயம் அடைந்த பிரபாகரன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரபாகரனை தாக்கியவர்கள் வீராம்பட்டினத்தை சேர்ந்த பிரேம் மற்றும் மதுரையை சேர்ந்த ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×