search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public road blockage"

    உளுந்தூர்பேட்டை அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புதுக்கேணி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களுக்கு கடந்த 1 மாதமாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் தங்களது அன்றாட தேவைக்குகூட தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த அவதி அடைந்தனர்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த புதுக்கேணி பகுதி பொதுமக்கள் இன்று காலை அந்த பகுதியில் உள்ள திருச்சி-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் காலி குடங்களுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது உங்கள் பிரச்சினையை விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் கூறி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன், உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    உடையார்பாளையம்: 

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு கோனார் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு 3-வது வார்டில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக கோனார் தெருவிற்கு சரிவர குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இது குறித்து அந்தப்பகுதி பொதுமக்கள் உடையார்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும், அதிகாரிகளால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், உடனே குடிநீர் வினியோகம் செய்யக்கேட்டும் கோனார் தெரு மக்கள் கையில் காலிக்குடங்களுடன் நேற்று திடீரென்று திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த உடையார்பாளையம் போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தரப்பில் எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும், புதிதாக போர்வெல் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு அதிகாரிகள், பேரூராட்சி நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வெண்ணாம்பட்டி அருகே குடிநீர் கேட்டு இன்று காலை பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தருமபுரி:

    தருமபுரி அடுத்துள்ள வெண்ணாம்பட்டி அருகே ராஜாஜி நகர், காமராஜர்நகர், முல்லைநகர் ஆகிய பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக இந்த பகுதி தெருக்குழாய்களில் தண்ணீர் முறையாக வரவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். 

    இது குறித்து அந்த பகுதிமக்கள் சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய கோரி இலக்கியம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் இன்று காலை வெண்ணாம்பட்டி- தருமபுரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சேந்தமங்கலம் அருகே கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக கூறி காலிக்குடங்களுடன், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சேந்தமங்கலம்:

    சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் துத்திகுளம் ஊராட்சியில் ரெட்டிபுதூர் காலனி உள்ளது. இந்த பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாயில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு சென்று அப்பகுதியில் வினியோகம் நடக்கிறது.

    இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் முழுமையாக ஏற்றப்படாமல் குறைவான தண்ணீர் ஏற்றி வந்ததால் பற்றாக்குறை ஏற்பட்டு அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். மேலும் குடிநீர் பற்றாக்குறையால், கேன்களில் விற்கப்படும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வந்ததாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் இருந்து காலனிக்கு வரும் வழியில் சிலர் முறைகேடாக தண்ணீரை எடுத்துக்கொள்வதால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

    எனவே இங்கு முறைகேடாக தண்ணீர் எடுப்பதை தடுக்க வலியுறுத்தி, நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பட்டத்தையன்குட்டை ராசிபுரம் சாலைக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன் செல்வராஜ், காளப்பநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி, துத்திகுளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சின்னுசாமி, கிராம நிர்வாக அலுவலர் யுவராணி ஆகியோர் சாலைமறியல் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    வேட்டவலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வேட்டவலம்:

    வேட்டவலத்தை அடுத்த வைப்பூர் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள சிறிய குடிநீர் தொட்டிகளின் மோட்டார்கள் பழுதடைந்து உள்ளன. பல மாதங்களாகியும் இதனை சீரமைக்கவில்லை. மேலும் தென்பெண்ணை ஆற்றில் இருந்து வரும் குடிநீர் குழாயும் பழுதடைந்துள்ளதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    இதுபற்றி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை 7 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள சாலையில் காலிக்குடங்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, சப்–இன்ஸ்பெக்டர்கள் அலெக்ஸ், கருணாநிதி, முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குடிநீர் தொட்டியின் மோட்டார்கள் சரி செய்யப்படும் என்றும் கூறினர்.

    அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் கீழவண்ணம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு அதன் மூலம் கீழவண்ணம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனே குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி நேற்று கீழப்பழுவூர்- ஏலாக் குறிச்சி சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் தொலை தூரம் சென்று விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் பிடித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியில் வேலைக்காக செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து விரைவில் நட வடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பல்வேறு போராட்டங்கள் நடத்துவோம் என்று கூறினர். 

    இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைத்து விரைவில் கீழவண்ணம் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கீழப்பழுவூர்- ஏலாக் குறிச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஆரணி அருகே மணல் திருட்டை தடுக்க கோரி டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

    ஆரணி:

    ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தையொட்டி உள்ள செய்யாற்றில் லாரி, டிராக்டர் மற்றும் மாட்டுவண்டுகளில் மணல் கொள்ளை சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் தச்சூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 21). இவர் இன்று காலை தச்சூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது மணல் கடத்தி கொண்டு வேகமாக வந்த டிராக்டர் ஏழுமலை மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டிராக்டரை சிறைபிடித்து ஆரணி தேவிகாபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. செந்தில், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் தச்சூர் பாலாற்றில் தொடர் மணல் கொள்ளை சம்பவம் அதிகம் நடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மணல் திருட்டை தடுத்து விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஆலங்குடியில் சீரான குடிநீர் வழங்ககோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஆலங்குடி:

    ஆலங்குடி வன்னியன் விடுதி அருகே வன்னியன் விடுதிதெரு, தொண்டைமான் குடியிருப்பு, மற்றும் காட்டுப்பகுதியில் 3 மின்சார டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. இவைகளிலிருந்து பொது குடிநீர் திட்டத்திற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தொண்டைமான் குடியிருப்பில் உள்ள மின் மாற்றி பழுதானது. இதனால் மின்சாரம் இல்லாமல கிராம மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த வன்னியன் விடுதி பொதுமக்கள் மின்சாரடிரான்ஸ் பார்மரை பழுது நீக்கி தராமல் புதிய மின்டிரான்ஸ் பார்மர்களை அமைத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆலங்குடி- அறந் தாங்கி சாலையில் திடீர் சாலை மறியல் செய்தனர். மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குடிபோலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்திய நாதன், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜானகிராமன்,மற்றும் ஆலங் குடி மேற்கு மின் வாரிய பொறியாளர் ஞானசேகரன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.

    2 நாட்களில் புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைத்து சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    செந்துறை அருகே 5 மாதங்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் இதனை கண்டித்து பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரியாக்குறிச்சி கீழத்தெரு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, நீரேற்று குழாய் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீர் ஏற்றப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

    இந்த நிலையில் நீரேற்று குழாய் மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் , நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கீழத் தெரு பகுதியில் கடந்த  5 மாதங்களாக  சரியாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை.   மின்மோட்டாரும் பழுது செய்யப்படவில்லை. 

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பெரியாக்குறிச்சி 4ரோடு சந்திப்பு பெண்ணாடம் சாலையில்  காலி குடங்களுடன்  ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள்  சாலையின் நடுவே அமர்ந்து , சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று கோரி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

    இது குறித்த தகவல் அறிந்ததும் செந்துறை போலீசார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    தஞ்சையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 15 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்பட வில்லை. இதனை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, விளார் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த 15 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்பட வில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மிகுந்த சிரதத்திற்கு உள்ளான பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

    இன்று காலை விளார் கண்டிதம்பட்டு பிரிவு சாலையில் ஒன்று திரண்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தஞ்சை தாலுகா போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் குழாயை சரி செய்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று பொதுமக்கள் உறுதியாக கூறினர். இதனால் உடனடியாக தொழிலார்களை வரவழைத்து குடிநீர் குழாயை சீரமைக்கும் பணிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கந்தர்வக்கோட்டை ஒன்றியம் காட்டுநாவல் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வரவில்லை. குடிநீர் விநியோகம் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை ஒன்றியம் காட்டுநாவல் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வரவில்லை. அப்பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள வயல்பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    எனவே குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் காட்டுநாவல் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனே சம்பவ இடத்திற்கு கந்தர்வக்கோட்டை போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 
    கந்தர்வக்கோட்டை அருகே கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை ஒன்றியம் காட்டுநாவல் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வரவில்லை. அப்பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள வயல்பகுதிக்கு சென்று  குடிநீர் எடுத்து வருகின்றனர். இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் காட்டுநாவல் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனே சம்பவ இடத்திற்கு கந்தர்வக்கோட்டை போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    ×