என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செந்துறை அருகே இன்று குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
Byமாலை மலர்15 Oct 2018 2:50 PM GMT (Updated: 15 Oct 2018 2:50 PM GMT)
செந்துறை அருகே 5 மாதங்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் இதனை கண்டித்து பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரியாக்குறிச்சி கீழத்தெரு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, நீரேற்று குழாய் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீர் ஏற்றப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நீரேற்று குழாய் மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் , நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கீழத் தெரு பகுதியில் கடந்த 5 மாதங்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. மின்மோட்டாரும் பழுது செய்யப்படவில்லை.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பெரியாக்குறிச்சி 4ரோடு சந்திப்பு பெண்ணாடம் சாலையில் காலி குடங்களுடன் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் சாலையின் நடுவே அமர்ந்து , சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று கோரி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் செந்துறை போலீசார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X