search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "empty pot"

    ஆலங்குடியில் சீரான குடிநீர் வழங்ககோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஆலங்குடி:

    ஆலங்குடி வன்னியன் விடுதி அருகே வன்னியன் விடுதிதெரு, தொண்டைமான் குடியிருப்பு, மற்றும் காட்டுப்பகுதியில் 3 மின்சார டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. இவைகளிலிருந்து பொது குடிநீர் திட்டத்திற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தொண்டைமான் குடியிருப்பில் உள்ள மின் மாற்றி பழுதானது. இதனால் மின்சாரம் இல்லாமல கிராம மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த வன்னியன் விடுதி பொதுமக்கள் மின்சாரடிரான்ஸ் பார்மரை பழுது நீக்கி தராமல் புதிய மின்டிரான்ஸ் பார்மர்களை அமைத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆலங்குடி- அறந் தாங்கி சாலையில் திடீர் சாலை மறியல் செய்தனர். மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குடிபோலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்திய நாதன், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜானகிராமன்,மற்றும் ஆலங் குடி மேற்கு மின் வாரிய பொறியாளர் ஞானசேகரன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.

    2 நாட்களில் புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைத்து சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தஞ்சையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 15 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்பட வில்லை. இதனை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, விளார் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த 15 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்பட வில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மிகுந்த சிரதத்திற்கு உள்ளான பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

    இன்று காலை விளார் கண்டிதம்பட்டு பிரிவு சாலையில் ஒன்று திரண்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தஞ்சை தாலுகா போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் குழாயை சரி செய்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று பொதுமக்கள் உறுதியாக கூறினர். இதனால் உடனடியாக தொழிலார்களை வரவழைத்து குடிநீர் குழாயை சீரமைக்கும் பணிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கோபி அருகே இன்று குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படாததை கண்டித்து ரோட்டில் காலி குடங்களுடன் பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கோபி:

    சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதி இண்டியம்பாளையம். இங்கு கடந்த சில நாட்களாகவே ஆற்று குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லையாம்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

    இந்த நிலையில் இண்டியம் பாளையம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள்- பெண்கள் அப்பகுதியில் உள்ள சத்தி- ஈரோடு மெயின் ரோட்டில் காலி குடங்களுடன் திரண்டனர்.

    திடீரென அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், கடத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காந்திமதி ஆகியோர் விரைந்து சென்றனர். பி.டி.ஓ.வும் சென்றார். அவர்கள் சாலைமறியல் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தான் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    விரைவில் அது சரி செய்யப்பட்டு சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். இதை தொடர்ந்து சாலைமறியல் நடத்திய பொதுமக்கள் சமாதானமாகி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குடிநீரில் சாக்கடை கலந்து வருவதை கண்டித்து சிதம்பரத்தில் பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டில் கொத்தங்குடிதெரு, குமரன்தெரு போன்ற பகுதிகள் உள்ளன. இந்த பகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் சாக்கடை கலந்து வந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 

    எனவே சுத்தமான குடிநீர் வழங்கக்கோரியும், சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் தொடர்ந்து சாக்கடை கலந்து வந்தது. 

    இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதி பெண்கள் இன்று காலை சிதம்பரம் பஸ்நிலையம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    சங்கராபுரம் நகரில் 10 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வராததால் இதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ரிஷிவந்தியம்:

    சங்கராபுரம் நகரில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யபடுகிறது. சங்கராபுரம் போலீஸ் லைன் தெருவில் 10 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வரவில்லை. இதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சங்கராபுரம் பேரூராட்சி முன்பு சங்கராபுரம்- கள்ளக்குறிச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவலறிந்த சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் வைத்திலிங்கம், போலீஸ்லைன் தெருவிற்கு உடனடியாக தண்ணீர் விடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதைத் தொடர்ந்து சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.
    குடிநீர் கலங்கலாக வருவதை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள வி.சாத்தப்பாடி கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக சாத்தப்பாடி ஊராட்சி சார்பில் ஆழ்துளை மோட்டாருடன் கூடிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆழ்துளை மோட்டார் பழுதானது. இதனால் புதிய ஆழ்துளை மோட்டார் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் விநியோகிக்கப்படும் குடிநீர் கடந்த சில வாரங்களாகவே மிகவும் கலங்கலாக வருகிறது. இந்த நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். இது குறித்து கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் செய்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த வி.சாத்தப்பாடி கிராம பெண்கள் இன்று காலை அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே விருத்தாசலம்-பரங்கிபேட்டை சாலையில் காலிக்குடங்களுடன் திரண்டனர். அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் கலங்கலாக வருவதை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    தகவல் அறிந்த தாசில்தார் ஸ்ரீதரன் மற்றும் கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதை ஏற்றுக்கொண்ட பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் பள்ளி, கல்லூரி வேன் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருக்குவளை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருக்குவளை அருகே உள்ள மேலவாக்கரையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள மக்கள் அங்குள்ள போர்வெல் மூலமாக குடிநீர் பெற்று பயன்படுத்தி வந்தனர். தற்போது போர்வெல் பழுது ஏற்பட்டதாலும், நிலத்தடி நீர் குறைந்து விட்டதாலும், சுமார் 2 மாதமாக அந்த பகுதிக்கு குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள் பக்கத்து ஊருக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

    குடிநீர் பற்றாக்குறை குறித்து பல முறை அதிகாரிகளிடம் அந்த பகுதியில் உள்ளவர்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மேலவாக்கரை மெயின் ரோட்டில் இன்று காலை காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். 

    தகவலறிந்து அங்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி மற்றும் திருக்குவளை போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 1 வாரத்திற்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சையில் குடிநீர் வழங்ககோரி காலி குடங்களுடன் பெண்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    டெல்டாவில் சமிபகாலமாக குடிநீர் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தஞ்சை கரந்தை பகுதியில் உள்ள பூக்கொல்லை, இரட்டை பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை. இந்த பகுதிக்கு குடி தண்ணீர் வராததை கண்டித்து இப்பகுதி மக்கள் கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இருந்த போதிலும் இந்த பகுதிக்கு தண்ணீர் வரவில்லை.

    இந்த நிலை தொடர்ந்து நீடித்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை தஞ்சை - கும்பகோணம் செல்லும் சாலையில் கரந்தை பகுதியில் திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள், சிறுவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனே இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் அதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். தொடர்ந்து வல்லம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், மற்றும் ஆர்.டி.ஓ. சுரேஷ் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இன்று மாலைக்குள் உங்கள் பகுதிக்கு தண்ணீர் விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.அதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சில வாகனங்கள் வேறு பாதையில் மாற்றி விடப்பட்டது.

    ×