search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman strike"

    துறையூரில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் பேரூராட்சியில் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த பல நாட்களாக காவேரி குடிநீர் முறையாக வரவில்லை. ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரும் கோடையால் வறண்டு போய் விட்டது.

    இதனால் இங்குள்ள பெண்கள் குடிநீருக்காக சுமார் 2 கிலோ மீட்டர் தூர முள்ள வயல் வெளிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    இது குறித்து பொதுமக்கள் உப்பிலியபுரம் பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் துறையூர்- சேலம் நெடுஞ்சாலையில் உப்பிலியபுரம் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினால் தான் கலைந்து செல்வோம் என்று கூறி விட்டனர். இதனால் தொடர்ந்து அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். தண்ணீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி கூறினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    மன்னார்குடி அருகே கஜா புயல் பாதிப்பால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமம் உள்ளது. இங்கு கடந்த 16-ந்தேதி வீசிய கஜா புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புயலால் இந்த கிராமத்தில் மின்சாரம் இல்லாததால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் புயல் வீசி 20 நாட்களுக்கு மேல் ஆகியும் எந்த அதிகாரிகளும் துளசேந்திர புரம் பகுதிக்கு வரவில்லை. மேலும் இந்த பகுதிக்கு முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மன்னார்குடி - பட்டுக் கோட்டை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனே இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது இந்த பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பொதுமக்களின் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பட்டுக்கோட்டை அருகே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து பெண்கள் ஒப்பாரி வைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பட்டுக்கோட்டை:

    டெல்டா பாசனத்திற்கு மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு 28 நாட்களாகியும் இன்னும் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை வடகாடு வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை.

    தம்பிக்கோட்டை வடகாடு வாய்க்கால் மூலம் தாமரங்கோட்டை தெற்கு, வடக்கு, பரக்கலக்கோட்டை, தம்பிக்கோட்டை மறவக்காடு, வடகாடு உள்ளிட்ட 5 கிராமங்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.

    இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மேற்கண்ட 5 கிராமங்களை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாமரங்கோட்டையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் தண்ணீர்விடக் கோரி முழக்கங்களை எழுப்பினர். அப்போது 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த ஆர்.டி.ஓ. மகாலெட்சுமி, டி.எஸ்.பி செங்கமலக்கண்ணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வரும் 25-ம் தேதிக்குள் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் பட்டுக்கோட்டை- முத்துப்பேட்டை மெயின் ரோட்டில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவள்ளூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையை அடுத்த ஒதப்பை கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பூதூர் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் ஒதப்பை கிராமத்துக்கு குடிநீர் சப்ளை செய்வது பாதிக்கப்பட்டது. குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.இந்த நிலையில் ஒதப்பை, புல்லரம்பாக்கம் உள்ளிட்ட 5 கிராம மக்கள் தேவைக்காக திருவள்ளூரை அடுத்த காந்திநகர் பகுதியில் புதிதாக ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

    இதனால் பூண்டி ஏரிக்கரை சேதம் அடையும் என்று கூறி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

    இதற்கிடையே ஒதப்பை கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவள்ளூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காந்தி நகரில் நிறுத்தப்பட்ட ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஊத்துக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன், டி.எஸ்.பி.சந்திரதாசன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    கிராம மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருக்குவளை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருக்குவளை அருகே உள்ள மேலவாக்கரையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள மக்கள் அங்குள்ள போர்வெல் மூலமாக குடிநீர் பெற்று பயன்படுத்தி வந்தனர். தற்போது போர்வெல் பழுது ஏற்பட்டதாலும், நிலத்தடி நீர் குறைந்து விட்டதாலும், சுமார் 2 மாதமாக அந்த பகுதிக்கு குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள் பக்கத்து ஊருக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

    குடிநீர் பற்றாக்குறை குறித்து பல முறை அதிகாரிகளிடம் அந்த பகுதியில் உள்ளவர்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மேலவாக்கரை மெயின் ரோட்டில் இன்று காலை காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். 

    தகவலறிந்து அங்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி மற்றும் திருக்குவளை போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 1 வாரத்திற்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சையில் குடிநீர் வழங்ககோரி காலி குடங்களுடன் பெண்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    டெல்டாவில் சமிபகாலமாக குடிநீர் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தஞ்சை கரந்தை பகுதியில் உள்ள பூக்கொல்லை, இரட்டை பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை. இந்த பகுதிக்கு குடி தண்ணீர் வராததை கண்டித்து இப்பகுதி மக்கள் கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இருந்த போதிலும் இந்த பகுதிக்கு தண்ணீர் வரவில்லை.

    இந்த நிலை தொடர்ந்து நீடித்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை தஞ்சை - கும்பகோணம் செல்லும் சாலையில் கரந்தை பகுதியில் திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள், சிறுவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனே இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் அதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். தொடர்ந்து வல்லம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், மற்றும் ஆர்.டி.ஓ. சுரேஷ் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இன்று மாலைக்குள் உங்கள் பகுதிக்கு தண்ணீர் விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.அதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சில வாகனங்கள் வேறு பாதையில் மாற்றி விடப்பட்டது.

    ×