search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirukkuvalai"

    கஜா புயல் சீரமைப்பு பணி நடைபெறுவதால் நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Nagai
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

    இந்நிலையில், கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூர் தாலுகாக்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Nagai
    திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலைக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மீதான பற்று காரணமாக 85 வயதான பாட்டி திருக்குவளையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார்.
    சென்னை:

    சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று நலிவுற்று இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனால், தமிழகம் முழுவதும் ஒருவித பதற்றநிலை தொற்றிக்கொண்டது. மருத்துவர்களின் கண்காணிப்பில் கருணாநிதி இருந்து வருவதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று, விடிய விடிய கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் வெளியே தொண்டர்கள் கூடி நின்று கொண்டு ‘தலைவர் வாழ்க’ என கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். பல்வேறு கட்சியின் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் விசாரித்து சென்றனர்.

    கோபாலபுரத்தில் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள தெருவில் போலீசார் தடுப்புகள் அமைத்து கூட்டம் கூடுவதை தடுத்து வருகின்றனர். எனினும், பலர் அங்கு காத்துக்கொண்டு இருக்கின்றனர். காலை 11 மணி அளவில் கூட்டத்தின் நடுவே இருந்த 85 வயது மூதாட்டி ஒருவர் திருக்குவளையில் இருந்து வருவதாகவும் தனது பெயர் ரத்தினாம்பாள் என்றும் கருணாநிதியை பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.

    இதனை அடுத்து, அங்கு கூடியிருந்த திமுகவினர் பாட்டி வந்த தகவலை சென்னை மாவட்ட செயலாளர் சேகர் பாபுவிடம் தெரிவித்தனர். கருணாநிதியை சந்திப்பதற்காகவே திருக்குவளையில் இருந்து சென்னைக்கு தனியாக வந்ததாக சேகர்பாபு எம்எல்ஏ.விடம் பாட்டி தெரிவித்தார்.



    ‘தலைவர பார்க்கனும்பா டீவியில ராத்திரி பார்த்தேன், ஏதேதோ சொன்னாங்க, மனசு தாங்கல கிளம்பி வந்துட்டேன்… காலையில 10.30 இறக்கி விட்டாங்க அங்கிருந்து கேட்டு கேட்டு பஸ் ஏறி இங்க வந்துட்டேன்’ என்றார் ரத்தினாம்பாள்.

    ‘தலைவரை பாக்கனும்… ஒரு ஓரமா நின்னு பாத்துட்டு போய்டுறேன்… எனக்கு கல்யாணம் பண்ணி வச்சதே தலைவர்தான்பா’ என்று கண்ணீரோடு நின்றவரை கண்ட சேகர்பாபு அவரிடம் விசாரித்து உள்ளே அழைத்து சென்று ஸ்டாலினை சந்திக்க வைத்து வெளியே கொண்டு வந்தார்

    ‘தலைவரை பார்க்க முடியல டாக்டர் பார்கறாங்களாம்’ என்று சோகத்தில் வெளியே வந்த ரத்தினாம்பாளுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து சேகர்பாபு ஊருக்கு அனுப்பி வைத்தார்.
    திருக்குவளை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருக்குவளை அருகே உள்ள மேலவாக்கரையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள மக்கள் அங்குள்ள போர்வெல் மூலமாக குடிநீர் பெற்று பயன்படுத்தி வந்தனர். தற்போது போர்வெல் பழுது ஏற்பட்டதாலும், நிலத்தடி நீர் குறைந்து விட்டதாலும், சுமார் 2 மாதமாக அந்த பகுதிக்கு குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள் பக்கத்து ஊருக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

    குடிநீர் பற்றாக்குறை குறித்து பல முறை அதிகாரிகளிடம் அந்த பகுதியில் உள்ளவர்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மேலவாக்கரை மெயின் ரோட்டில் இன்று காலை காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். 

    தகவலறிந்து அங்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி மற்றும் திருக்குவளை போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 1 வாரத்திற்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×