search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman protest"

    • குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகளை விரைந்து கட்டி முடிக்க கோரி அங்கு வசித்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே சூரிய நாராயணன் தெருவில் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. துறைமுகத்துக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் கண்டெய்னர் லாரிகள் அணிவகுத்து நின்றன.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் 520 குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகள் இருந்தது. அவை மிகவும் பழுதடைந்து சிதிலமடைந்து இருந்ததால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவை முற்றிலுமாக இடிக்கப்பட்டு புதிய வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் 3 ஆண்டுகளாகியும் இன்னும் வீடுகள் கட்டும் பணி முழுவதும் முடியவில்லை. தற்போது 70 சதவீத பணிகள் முடிந்து உள்ளன.

    இந்த நிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகளை விரைந்து கட்டி முடிக்க கோரி அங்கு வசித்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே சூரிய நாராயணன் தெருவில் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. துறைமுகத்துக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் கண்டெய்னர் லாரிகள் அணிவகுத்து நின்றன.

    தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.எபினேசர், ராயபுரம் உதவி கமிஷனர் லட்சுமணன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி விரைவில் முடிக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது, குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் இடிக்கப்படும் போது 18 மாதத்தில் கட்டி முடித்து விடுவதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை. நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம் என்றனர்.

    வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் செய்தனர்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே உள்ள மரிமாணிக்குப்பம் ஊராட்சி ஓம குப்பம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபட வில்லை என்று கூறபடுகிறது.

    இதனால் ஆததிரமடைந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆலங்காயம் -திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாசில்தார் முருகன், குருசிலாபட்டு மற்றும் ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது உங்கள பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்து.

    விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மண்எண்ணை கேனுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடைக்கு அந்த கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த குடி பிரியர்கள் வந்து மது வாங்கி குடித்துவிட்டு கிராம பகுதிகளில் ஆங்காங்கே மது மயக்கத்தில் கிடப்பதும் அப்பகுதி வழியாக செல்லக்கூடிய பெண்கள் மாணவிகளை கிண்டல்-கேலி செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

    இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கபடவில்லை.

    இதனால் அப்பகுதியில் இருந்த பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து கோபுராபுரம் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் மண்எண்ணை கேனுடன் வந்து தீக்குளிக்கப் போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடன் விரைந்து வந்த போலீசார் மண்எண்ணை கேனை பறிமுதல் செய்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். உயர் அதிகாரிகளிடம் சென்று மனு கொடுங்கள், நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்கள். அதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சபரிமலை கோவிலில் அனுமதிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டதை மறுபரீசலனை செய்ய கோரி தேனியில் பெண்கள் விளக்குகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #Sabarimala #Womendemonstrated

    தேனி:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு பலமான ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பெண்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தங்கள் கைகளில் விளக்குகள் ஏந்தி கோர்ட்டு உத்தரவிற்கு எதிராக கோ‌ஷமிட்டனர்.

    அதன்பிறகு தங்கள் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை குடியரசு தலைவருக்கு வழங்கும் வகையில் கலெக்டரிடம் அளித்தனர். அந்த கடிதத்தில் மத வழிபாட்டு பிரச்சினையில் கோர்ட்டு தலையிடக்கூடாது.

    பல ஆண்டுகளாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆகம விதிகளின்படி 5 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதில்லை. தற்போது அனைத்து வயதினரும் கோவிலுக்கு செல்லலாம் என கோர்ட்டு உத்தரவிட்டிருப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். #Sabarimala #Womendemonstrated

    குடிநீரில் சாக்கடை கலந்து வருவதை கண்டித்து சிதம்பரத்தில் பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டில் கொத்தங்குடிதெரு, குமரன்தெரு போன்ற பகுதிகள் உள்ளன. இந்த பகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் சாக்கடை கலந்து வந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 

    எனவே சுத்தமான குடிநீர் வழங்கக்கோரியும், சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் தொடர்ந்து சாக்கடை கலந்து வந்தது. 

    இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதி பெண்கள் இன்று காலை சிதம்பரம் பஸ்நிலையம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள முதல்வர் அறையை மகளிர் குழுவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    தஞ்சாவூர்:

    நீலகிரி ஊராட்சி குழு கூட்டமைப்பில் சுமார் 40 மகளிர் குழுக்கள் இயங்கி வருகிறது. அரசு மருத்துவ மனைகளில் கழிவறை சுத்தம் செய்யும் பணிக்கு இந்த குழுவிற்கு டெண்டர் விடப்பட்டு மகளிர் குழு சார்பில் பெண்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது திடிரென்று பெண்கள் பணியில் இருந்து நிறுத்தப்பட்டு தனியாருக்கு இந்த டெண்டர் வழங்கபட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

    எனவே தனியாருக்கு விடப்பட்டுள்ள டெண்டரை மகளிர் குழுக்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை நீலகிரி ஊராட்சி குழு கூட்டமைப்பு சார்பில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி  மருத்துவ மனையில் உள்ள முதல்வர் அறையை முற்றுகையிட்டனர்.

    இதற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நிர்மலா தேவி தலைமை தாங்கினார். இதில் துணைத் தலைவர் சந்திரா, பொருளாளர் ஸ்டில்லா மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர். பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ×