search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் மறியல்
    X

    வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் மறியல்

    வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் செய்தனர்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே உள்ள மரிமாணிக்குப்பம் ஊராட்சி ஓம குப்பம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபட வில்லை என்று கூறபடுகிறது.

    இதனால் ஆததிரமடைந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆலங்காயம் -திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாசில்தார் முருகன், குருசிலாபட்டு மற்றும் ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது உங்கள பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்து.

    Next Story
    ×