என் மலர்
செய்திகள்

முசிறி அருகே விபத்தில் வாலிபர் காயம்
முசிறி அருகே விபத்தில் வாலிபர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முசிறி:
முசிறி செவந்தலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (35). இவர் திருச்சி-சேலம் சாலையில் செவந்தலிங்க புரம் காலனி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முசிறி வேதாத்திரி நகரை சேர்ந்த பத்தையக்கான் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர் பாராதவிதமாக பிரபு மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






