search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol dispute"

    • தேனி செல்வதற்காக நள்ளிரவு 12 மணியளவில் திருப்பூர் பழைய பஸ் நிலையம் வந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியனின் மர்ம உறுப்பை அறுத்த ஆசாமியை தேடி வருகிறார்கள்.

    காங்கயம் :

    தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது 30). இவர் திருப்பூர் வேலம்பாளையம் படையப்பா நகரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இவர் தேனி செல்வதற்காக நள்ளிரவு 12 மணியளவில் திருப்பூர் பழைய பஸ் நிலையம் வந்தார்.

    பின்னர் அங்கு மது குடித்துவிட்டு குடிபோதையில் கோவில்வழி பஸ் நிலையம் வந்து பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அருண்பாண்டி நின்று கொண்டிருந்ததை பார்த்து எங்கு போகிறீர்கள் என்று கேட்டார். அருண்பாண்டி தான் தேனிக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். அப்போது அந்த ஆசாமி நான் தாராபுரம் வரை செல்கிறேன், வாருங்கள் உங்களை தாராபுரத்தில் இறக்கி விடுகிறேன். அங்கிருந்து தேனி செல்லுங்கள் என்றார். இதனால் அருண்பாண்டியன் அந்த ஆசாமியின் மோட்டார்சைக்கிளில் ஏறி தாராபுரம் நோக்கி சென்றார்.

    இந்தநிைலயில் கொடுவாய் அருகே வந்த போது அவர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தினர். அப்போது மது போதையில் இருந்த அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த ஆசாமி, அருண்பாண்டியனின் மர்ம உறுப்பை ஏதோ ஒரு ஆயுதத்தால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். அந்த வழியாக வந்தவர்கள் அருண்பாண்டி ரத்தக்காயங்களுடன் கிடப்பதை பார்த்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அருண்பாண்டி நடந்த சம்பவம் குறித்து ஊதியூர் போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியனின் மர்ம உறுப்பை அறுத்த ஆசாமியை தேடி வருகிறார்கள்.

    அரக்கோணத்தில் மது போதை தகராறில் தம்பியை அண்ணன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் நேதாஜி நகரை சேர்ந்தவர் தைரியநாதன் இவரது மகன்கள் லால்ஆத்மநாதன் (வயது 36).டிவி மெக்கானிக் பிரபுநாதன் (30). கார் டிரைவர் இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த லால்அத்மநாதன் அவரது தம்பி பிரபுநாதனை கத்தியால் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் துடித்த பிரபுநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பிரபுநாதன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பின்னர் இது தொடர்பாக லால்ஆத்மநாதனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பெரியபாளையத்தில் மதுவை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்துக்கொலை செய்த நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கோகுல், அவரது நண்பர்களான முன்னூ, டெப்பாஜித், மொன்னா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் 4 பேரும் பெரியபாளையம்- யானம் பாக்கம் சாலையில் உள்ள மதுபானக் கடையில் மது அருந்தினர். அப்போது மதுவை பங்கு வைத்தபோது பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக திட்டிக் கொண்டனர். அப்போது நண்பர்கள் மூவரையும் கோகுல் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கோகுலை சரமாரியாக தாக்கினார்கள்.

    இதில், படுகாயமடைந்து காது, வாய், மூக்கில் ரத்தம் வந்து கோகுல் உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் கோகுலை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் அனுமதித்தனர்.

    கோகுலை தாக்கிய நண்பர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று கோகுல் பரிதாபமாக பலியானார்.

    எனவே, குற்றவாளிகள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    கோவை அருகே குடிபோதையில் தகராறு செய்த தம்பியை குழவி கல்லால் தாக்கி கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை தெலுங்குபாளையம் அருகே உள்ள பாரதி வீதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 36). கட்டிட தொழிலாளி. இவரது சகோதரர் சவுந்தர்ராஜன் (30). வேலைக்கு செல்லும் இவர் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தார். பலமுறை குடிபழக்கத்தை கைவிடுமாறு சுந்தர்ராஜன் கூறியும் சவுந்தர்ராஜன் கேட்கவில்லை.

    சம்பவத்தன்றும் சவுதர் ராஜன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் தனது அண்ணனிடம் தகராறு செய்தார். இதனை அண்ணனின் மனைவி தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சவுந்தர்ராஜன் அவரை தரக்குறைவாக பேசினார். தனது மனைவியை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரம் அடைந்த சுந்தர்ராஜன் வீட்டில் இருந்த குழவி கல்லை எடுத்து சவுந்தர் ராஜனின் தலையில் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் சுந்தர்ராஜன் செல்வபுரம் போலீசில் சரணடைந்தார்.

    உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட சவுந்தர்ராஜனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பியை கொன்ற சுந்தர்ராஜனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம் அருகே மது குடித்துவிட்டு தகராறு செய்ததால் தொழிலாளியை அடித்துக்கொன்ற தாய் மற்றும் தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த தட்டார்மடம் அருகே உள்ள தச்சன்விளை பள்ளம்தட்டுவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 63). இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (58). இவர்களுக்கு 6 மகள்கள், 2 மகன்கள்.

    இதில் மூத்த மகன் முத்துகுமார் (34). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. மேலும் அவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் முத்துகுமார் சரியாக வேலைக்கு செல்லாமல், தினமும் மதுகுடித்து விட்டு, தன்னுடைய குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில்சம்பவத்தன்று முத்துகுமார் மதுகுடித்து விட்டு தனது வீட்டுக்கு சென்று, குடும்பத்தினரிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த முத்துகுமார் தன்னுடைய தாயார் கிருஷ்ணவேணியை அவதூறாக பேசி, அவரது கையில் கடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணவேணி அலறி துடித்தார்.

    உடனே அங்கு ஓடி வந்த இளைய மகன் சுயம்புலிங்கம் (24), மருமகன் மாரியப்பன் (35) மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய 3 பேரும் சேர்ந்து முத்துகுமாரை கையாலும், கம்பாலும் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த முத்துகுமார் மயங்கி கீழே விழுந்து உயிருக்கு போராடினார்.

    உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்துகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், விசாரணை நடத்தினார். முத்துக்குமாரை தாக்கிய அவரது தாய் கிருஷ்ணவேணி, தம்பி சுயம்புலிங்கம், அத்தான் மாரியப்பன் ஆகிய 3 பேர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டது. தலைமறைவாக இருந்த அவர்கள் 3 பேரையும் போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் கிருஷ்ணவேணி, சுயம்புலிங்கம், மாரியப்பன் ஆகிய 3 பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று முத்துகுமார் மதுகுடித்து விட்டு கிருஷ்ணவேணியை அவதூறாக பேசி தாக்கினார்.

    இதையடுத்து சுயம்புலிங்கம், மாரியப்பன், கிருஷ்ணவேணி ஆகிய 3 பேரும் சேர்ந்து முத்துகுமாரை கம்பால் தாக்கியதில் மயங்கினார். பின்னர் சிகிச்சை பலனில்லாமல் இறந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
    மகேந்திரமங்கலம் அருகே மதுகுடித்து விட்டு தகராறில் ஈடுபட்டதால் தந்தையை கொன்றதாக கைதான மகன் தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டான்.
    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே கொம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 54), பெயிண்டர். இவரது மகன் சூர்யா (33).

    துரைசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ள மகன் மற்றும் உறவினர்களிடம் தகராறு செய்வாராம்.

    சம்பவத்தன்று மீண்டும் குடித்துவிட்டு வந்து துரைசாமி தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சூர்யா இரும்பு கம்பியை எடுத்து அவரது தலையில் தாக்கினார். தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற துரைசாமி சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.

    இதுகுறித்து மகேந்திர மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையை கொன்ற மகன் சூர்யாவை கைது செய்து பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் தன் தந்தையை கொன்றதாக சூர்யா வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
    ×