என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது போதை தகராறு"

    • இருசக்கர வாகனத்தை காணவில்லை என வீரமணி வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.
    • சந்தோஷ் குமாருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் தேர் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.

    இந்த நிலையில் லால்குடி அருகே கே வி பேட்டை-செங்கரையூர் நடுப் பகுதியை சேர்ந்த பாண்டி துரை, நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகிய இரண்டு பேருடன் அன்பில் மாரியம்மன் கோவிலுக்கு மது போதையில் சென்று உள்ளனர்.

    பின்னர் கோவிலில் அன்பில் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார், ஆனந்த், ஜெகன் ஆகிய 3 பேரும் அந்தக் குழுவில் சேர்ந்து கொண்டனர்.

    இதில் போதை தலைக்கேறிய பாண்டி துரை தான் வந்த இருசக்கர வாகனத்தை அங்கே விட்டு விட்டு நடந்து வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என வீரமணி வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.

    வீரமணி, உடனே அன்பில் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார், ஆனந்த், ஜெகன் முன்று பேரிடமும் இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தர சொல்லி உள்ளார். வாகனம் அன்பில் பகுதியில் இருந்து உள்ளது. அதனை எடுத்துக் கொண்டு பாண்டிதுரை வீட்டிற்கு கொடுப்பதற்காக சென்றனர்.

    அப்போது போதையில் இருந்த பாண்டி, சந்தோஷ் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இதில் ஆத்திரமடைந்த பாண்டித்துரை விலங்குகளை வேட்டை ஆடுவதற்காக வைத்திருந்த ஏர்கன் நாட்டு துப்பாக்கியால் சுட்டு விட்டார். இதில் சந்தோஷ்குமார் வயிற்றில் ஏர்கன் துப்பாக்கியின் குண்டு பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே சந்தோஷ் குமார் மயங்கி சுருண்டு விழுந்தார்.

    உடனே அவரை அவரது நண்பர்கள் லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மது போதையில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தற்போது சந்தோஷ் குமாருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் பாண்டித்துரை வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். பின்னர் தலைமறைவாக உள்ள பாண்டித்துரையை தேடி வருகின்றனர்.

    • மாற்றுத்திறனாளி மணி (38) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருப்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    காங்கயம் :

    தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது 30). திருப்பூர் வேலம்பாளையம், படையப்பா நகரில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்ல கடந்த12-ந் தேதி நள்ளிரவு 12 மணியளவில் கோவில்வழி பஸ் நிலையம் வந்தார். அப்போது மது குடித்து இருந்ததாக கூறப்படுகிறது.

    அப்–போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அருண்பாண்டியை தாராபுரத்தில் இறக்கி விடுவதாக கூறி உள்ளார். இதையடுத்து இருவரும் ஸ்கூட்டரில் திருப்பூர் - தாராபுரம் சாலையில் தாராபுரம் நோக்கி வந்துள்ளனர். கொடுவாய் அருகே வந்த போது காட்டில் நிறுத்தி இருவரும் மது அருந்தியுள்ளார்கள். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் அருண்பாண்டியின் மர்ம உறுப்பை அறுத்து விட்டு தப்பி சென்றார். இதையடுத்து அருண்பாண்டியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருப்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரை தொடர்ந்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியின் மர்ம உறுப்பை அறுத்து விட்டு தப்பி ஓடிய நபரை வலைவீசி தேடி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி தேடி வந்தனர். இந்தநிலையில் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்துவரும் சேலம் மாவட்டம் அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மணி (38) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அருண்பாண்டியின் மர்ம உறுப்பை மணி அறுத்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து ஊதியூர் போலீசார் மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×