search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people injured"

    பு.புளியம்பட்டி அருகே அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    கோவையில் இருந்து சத்தியமங்கலத்துக்கு ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி குளம் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக கார்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு செல்வதற்காக ஒரு கார் புங்கம்பள்ளி அருகே வந்தது. அப்போது புங்கம்பள்ளி குளம் அருகே வந்த போது அரசு பஸ் மற்றும் கார் எதிர் பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. அப்போது பஸ்சில் வந்த பயணிகள் அலறினர்.

    இதில் கார் அப்பளம் போல் நொருங்கியது. பஸ்சின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 3 பேர் மற்றும் காரில் பயணம் செய்த 2 பேர் என மொத்தம் 5 பேர் படுகாயம் அடைந் தனர்.

    அவர்கள் 108 ஆம்புலன்சு மற்றும் தனியார் ஆம்புலன்சுகள் மூலம் உடனடியாக மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சுங்குவார்சத்திரம் அருகே பஸ்-லாரி மோதலில் 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் தனியார் கனரக வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதில் வேலை செய்யும் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு கம்பெனி பஸ் சுங்குவார்சத்திரம் நோக்கி வந்து கொண்டு இருந்தது.

    சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்தபோது சுங்குவார் சத்திரம் கூட்டு சாலையில் சென்னை நோக்கி வந்த லாரி பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த தொழிலாளர்கள் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    தமிழகத்தில் இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மலத்தான்குளத்தில் இன்று தொடங்கியது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள் 10 பேர் காயமடைந்தனர். #Jallikattu

    ஆர்.எஸ்.மாத்தூர்:

    தமிழக பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டு தனித்துவம் பெற்று விளங்குகிறது. காளைகளுக்கு நன்றி தெரிவிக்கவும், அவற்றிற்கு பெருமை சேர்க்கவும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டி தென் மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு மேல் நடைபெறும். இதில் வீரர்களுக்கு அடங்காத காளைகளுக்கு பலவித பரிசுகள் வழங்கப்படும்.

    இந்தநிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் இன்று தொடங்கியது. இதில் அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    போட்டி தொடங்கியதும் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். இதில் சீறி பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற போது 10 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், பண பரிசுகள், தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆம்பூர் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்ததில் ரஜினி பட டெக்னீசியன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். #Accident

    ஆம்பூர்:

    சென்னை பட்டாபிராம் அண்ணா நகரை சேர்ந்தவர் சுந்தர் (வயது 34). இவர் ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான 2.0 படத்தில் கிராபிக்ஸ் டெக்னீசியனாக பணியாற்றி உள்ளார். இவரது மனைவி மாயா (25). இவர்களது குழந்தை கீர்த்தி (2).

    சுந்தர் தனது குடும்பத்துடன் இன்று காலை பெங்களூருக்கு காரில் புறப்பட்டு சென்றார். ஆம்பூர் அடுத்த மின்னூர் என்ற இடத்தில் கார் சென்ற போது நிலை தடுமாறி சாலை ஓரம் இருந்த தரைமட்ட கிணற்றில் கார் கவிழ்ந்தது. இதில் சுந்தர், மாயா, குழந்தை கீர்த்தி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    கிணற்றுக்குள் கிடந்ததால் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பது தெரியாமல் 3 பேரும் தவித்தனர். அங்கிருந்து கத்தி கூச்சலிட்டனர். யாரும் காப்பாற்ற வரவில்லை. சுந்தர் தனது செல்போன் மூலம் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து காருடன் விபத்துக்குள்ளாகி கிணற்றில் கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் போலீசார் உதவியுடன் வந்த அங்கு தேடி பார்த்தனர். அவர்களுக்கும் காயமடைந்த 3 பேரும் இருந்த இடம் உடனடியாக தெரியவில்லை. தற்சமயமாக விபத்து நடந்த கிணற்றில் எற்றி பார்த்த போது அவர்கள் அங்கு இருப்பது தெரியந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடனடியாக அவர்களை மீட்டனர். சுந்தர் அவரது குடும்பத்துடன் 1½ மணி நேரம் கிணற்றுக்குள் தவித்தனர். கிணற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால் அவர்கள் உயிர் தப்பித்தனர்.

    அவர்கள் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  #Accident

    திருச்சி அரியமங்கலத்தில் வெறிநாய் கடித்து குதறியதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
    பொன்மலைப்பட்டி:

    திருச்சி அரியமங்கலம் காமராஜ்நகரில் அண்ணாதெரு, சவுக்கத்அலிதெரு, முத்துராமலிங்கதெரு, ஜீவானந்தம்தெரு உள்பட பல்வேறு தெருக்கள் உள்ளன. அங்கு அதிக எண்ணிக்கையில் நாய்கள் சுற்றி திரிகின்றன. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சுற்றி திரிந்த ஒரு நாய்க்கு திடீரென வெறி பிடித்தது. உடனடியாக அந்த நாய் பாய்ந்து சென்று அதேபகுதியில் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த மூதாட்டியை கடித்து குதறியதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனால் வீடு முழுவதும் ரத்தம் சொட்டியது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து காமராஜ்நகரை சேர்ந்த காதர்(வயது 45), அண்ணாதெருவை சேர்ந்த முகமதுமைதீன்(47), கென்னடிதெருவை சேர்ந்த சுலையா(47), ஜின்னாதெருவை சேர்ந்த சகீலா(38) என அடுத்தடுத்து பலரை நாய் கடித்து குதறியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந் தனர். இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

    தொடர்ந்து ஒரேநாளில் 15 பேரை கடித்து குதறியதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே நடமாடி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    வேடசந்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உடல் நசுங்கினர்.

    வேடசந்தூர்:

    சேலத்தை சேர்ந்த 3 குடும்பத்தினர் நெல்லைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி ஒரு வேனில் நெல்லை, குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று விட்டு சேலம் திரும்பிக்கொண்டிருந்தனர்.

    திண்டுக்கல்- கரூர் 4 வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. செண்டர் மீடியனை தாண்டி எதிர்புற சாலையில் ஓடி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் வேனில் பயணம் செய்த 16 பேர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் மற்றும் கரூர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கூம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையில் விசாரித்து வருகின்றனர்.

    வேப்பூரில் இன்று காலை பஸ் கவிழ்ந்து பீகாரை சேர்ந்த 38 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    வேப்பூர்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்த சிலர் தமிழக பகுதியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆன்மிக சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் பீகார் மாநிலத்தில் இருந்து ஒரு பஸ்சில் ராமேசுவரம் நோக்கி புறப்பட்டனர். அந்த பஸ்சை பீகாரை சேர்ந்த முகமதுஅரிப் (வயது 50) என்பவர் ஓட்டினார்.

    அந்த பஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென தாறுமாறாக ஓடி சாலையின் குறுக்கே இருந்து தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி  38 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த 32 பேரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கும், 6 பேரை பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. விபத்தில் சிக்கி சாலையின் குறுக்கே கவிழ்ந்து கிடந்த  பஸ் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறபடுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. 

    விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூரமங்கலத்தில் ஸ்டவ் வெடித்து உடல் கருகிய 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 42). இவரது மனைவி கவுரி (35).

    நேற்றிரவு கவுரி பால் காய்ப்பதற்காக மண்எண்ணை ஸ்டவ்வை பற்ற வைத்தார். அப்போது திடீரென ஸ்டவ் வெடித்து கவுரியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

    இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்த சுப்பிரமணி அங்கு ஓடி வந்தார்.

    பின்னர் கவுரியின் உடலில் எரிந்த தீயை அணைக்க முயன்றார். அப்போது சுப்பிரமணியின் உடலிலும் தீப்பிடித்தது.இதில் உடல் கருகிய 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் அருகே 2 ஆட்டோக்கள் மோதிக் கொண்டதில் 7 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே உள்ள வண்ணம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 26). ஆட்டோ டிரைவர். நேற்று தனது ஆட்டோவில் அதே பகுதியைச் சேர்ந்த பவுனுத்தாய், கவுசல்யா, மகாலெட்சுமி ஆகியோரை ஏற்றிக் கொண்டு எரியோடு பகுதிக்கு விசே‌ஷத்திற்கு சென்றார்.

    எதிரே குளத்தூரைச் சேர்ந்த கண்ணன் (வயது 36). தனது ஷேர் ஆட்டோவில் பஞ்சவர்ணம், நந்தினி ஆகியோர்களை ஏற்றிக் கொண்டு திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார். தனியார் கல்லூரி அருகே 2 ஆட்டோக்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

    இதில் 2 ஆட்டோவிலும் வந்த 7 பேர் படுகாய மடைந்தனர். மேலும் ஆட்டோக்களும் பலத்த சேதமடைந்தது. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனைவரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    கண்ணன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×