என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூரமங்கலத்தில் ஸ்டவ் வெடித்ததால் உடல் கருகிய தம்பதி
Byமாலை மலர்28 Aug 2018 10:27 AM GMT (Updated: 28 Aug 2018 10:27 AM GMT)
சூரமங்கலத்தில் ஸ்டவ் வெடித்து உடல் கருகிய 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 42). இவரது மனைவி கவுரி (35).
நேற்றிரவு கவுரி பால் காய்ப்பதற்காக மண்எண்ணை ஸ்டவ்வை பற்ற வைத்தார். அப்போது திடீரென ஸ்டவ் வெடித்து கவுரியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்த சுப்பிரமணி அங்கு ஓடி வந்தார்.
பின்னர் கவுரியின் உடலில் எரிந்த தீயை அணைக்க முயன்றார். அப்போது சுப்பிரமணியின் உடலிலும் தீப்பிடித்தது.இதில் உடல் கருகிய 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X