search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூரமங்கலத்தில் ஸ்டவ் வெடித்ததால் உடல் கருகிய தம்பதி
    X

    சூரமங்கலத்தில் ஸ்டவ் வெடித்ததால் உடல் கருகிய தம்பதி

    சூரமங்கலத்தில் ஸ்டவ் வெடித்து உடல் கருகிய 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 42). இவரது மனைவி கவுரி (35).

    நேற்றிரவு கவுரி பால் காய்ப்பதற்காக மண்எண்ணை ஸ்டவ்வை பற்ற வைத்தார். அப்போது திடீரென ஸ்டவ் வெடித்து கவுரியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

    இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்த சுப்பிரமணி அங்கு ஓடி வந்தார்.

    பின்னர் கவுரியின் உடலில் எரிந்த தீயை அணைக்க முயன்றார். அப்போது சுப்பிரமணியின் உடலிலும் தீப்பிடித்தது.இதில் உடல் கருகிய 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×