என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியமங்கலத்தில் வெறிநாய் கடித்து குதறியதில் 15 பேர் படுகாயம்
Byமாலை மலர்27 Nov 2018 6:12 PM GMT (Updated: 27 Nov 2018 6:12 PM GMT)
திருச்சி அரியமங்கலத்தில் வெறிநாய் கடித்து குதறியதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
பொன்மலைப்பட்டி:
திருச்சி அரியமங்கலம் காமராஜ்நகரில் அண்ணாதெரு, சவுக்கத்அலிதெரு, முத்துராமலிங்கதெரு, ஜீவானந்தம்தெரு உள்பட பல்வேறு தெருக்கள் உள்ளன. அங்கு அதிக எண்ணிக்கையில் நாய்கள் சுற்றி திரிகின்றன. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சுற்றி திரிந்த ஒரு நாய்க்கு திடீரென வெறி பிடித்தது. உடனடியாக அந்த நாய் பாய்ந்து சென்று அதேபகுதியில் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த மூதாட்டியை கடித்து குதறியதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் வீடு முழுவதும் ரத்தம் சொட்டியது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து காமராஜ்நகரை சேர்ந்த காதர்(வயது 45), அண்ணாதெருவை சேர்ந்த முகமதுமைதீன்(47), கென்னடிதெருவை சேர்ந்த சுலையா(47), ஜின்னாதெருவை சேர்ந்த சகீலா(38) என அடுத்தடுத்து பலரை நாய் கடித்து குதறியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந் தனர். இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
தொடர்ந்து ஒரேநாளில் 15 பேரை கடித்து குதறியதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே நடமாடி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருச்சி அரியமங்கலம் காமராஜ்நகரில் அண்ணாதெரு, சவுக்கத்அலிதெரு, முத்துராமலிங்கதெரு, ஜீவானந்தம்தெரு உள்பட பல்வேறு தெருக்கள் உள்ளன. அங்கு அதிக எண்ணிக்கையில் நாய்கள் சுற்றி திரிகின்றன. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சுற்றி திரிந்த ஒரு நாய்க்கு திடீரென வெறி பிடித்தது. உடனடியாக அந்த நாய் பாய்ந்து சென்று அதேபகுதியில் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த மூதாட்டியை கடித்து குதறியதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் வீடு முழுவதும் ரத்தம் சொட்டியது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து காமராஜ்நகரை சேர்ந்த காதர்(வயது 45), அண்ணாதெருவை சேர்ந்த முகமதுமைதீன்(47), கென்னடிதெருவை சேர்ந்த சுலையா(47), ஜின்னாதெருவை சேர்ந்த சகீலா(38) என அடுத்தடுத்து பலரை நாய் கடித்து குதறியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந் தனர். இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
தொடர்ந்து ஒரேநாளில் 15 பேரை கடித்து குதறியதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே நடமாடி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X