என் மலர்
நீங்கள் தேடியது "injure"
- மணப்பாறை மெயின் ரோட்டில் சென்ற போது சம்பவம்
- மோட்டார் சைக்கிள் மோதி தாய், மகன் படுகாயம் அடைந்தனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கு பட்டி காலனியை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 32). இவர் தனது தாயார் வளர்மதியுடன் (52) மோட்டார் சைக்கிளில் தோகைமலை- மணப்பாறை மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பொன்னம்பட்டியை சேர்ந்த தீபன் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சத்யராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சத்யராஜ், வளர்மதி ஆகியோரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட மாடசாமி கடந்த 7-ந் தேதி பரோல் விடுமுறையில் ஊருக்கு சென்றுள்ளார்.
- சிறைக்கு திரும்பி செல்ல இருந்த நிலையில் நேற்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கினார்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாறைக்குட்டம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 42).
இவர் பாளை அருகே உள்ள சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 7-ந் தேதி பரோல் விடுமுறையில் ஊருக்கு சென்றுள்ளார். இதையடுத்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மத்திய சிறைச்சாலைக்கு திரும்பி செல்ல இருந்த நிலையில் நேற்று அங்கு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கினார்.
படுகாயமடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூரில் இருந்து மன்னார்குடி நோக்கி நேற்று ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. கூத்தாநல்லூர் அருகே உள்ள கோரையாறு என்ற இடத்தில் சென்றபோது எதிரே மன்னார்குடியில் இருந்து கூத்தாநல்லூர் நோக்கி வந்த சரக்கு வேனும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. அதன் டிரைவர் பூதமங்கலம் கீழகண்ணுச்சாங்குடியை சேர்ந்த தினேஷ் (வயது24), முருகையன் (40), சிவகுமார்(40) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கவிழ்ந்த சரக்கு வேனில் சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை மாவட்ட அதிகாரி முருகேசன், கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பிவேந்திரன், நிலைய போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம், தீயணைப்பு படை வீரர்கள் சம்பத்குமார், செல்வராஜுலு ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று சரக்கு வேனில் சிக்கிய தினேஷ், முருகையன், சிவகுமார் ஆகிய 3 பேரையும் மீட்டனர்.
இதையடுத்து 3 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல அதே பகுதியில் வெண்ணாற்றின் கரையோரத்தில் கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்தது. அதில் காருக்குள் சிக்கிய 8 பேரையும் தீயணைப்பு வீரர்கள் காயமின்றி மீட்டனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ளது செட்டிபட்டி கிராமம். இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராளி கிராமத்தில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர். துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர்கள் இரவு வேனில் ஊருக்கு புறப்பட்டனர். வேனை பந்தல்குடியை சேர்ந்த மகேந்திர பாண்டியன் என்பவர் ஓட்டி வந்தார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமிபுரம் விலக்கு 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது வேனின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் தாறுமாறாக ஓடிய வேன் சென்டர் மீடியனில் மோதி எதிர்புறம் வாகனங்கள் செல்லும் சாலையில் நின்றது.
அப்போது தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதியது. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. டிரைவர் மகேந்திரபாண்டியனில் 2 கால்களும் முறிந்தன. மேலும் வேனில் இருந்த ராஜலட்சுமி, சுப்பையா, பாப்பாத்தி, ருக்குமணி, ஜெயமணி, அரசு பஸ் டிரைவர் முத்து உள்பட 20 பேர் காயமடைந்தனர். இவர்களில் டிரைவர் மகேந்திரன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர் கிழக்கு பங்களாத்தெருவை சேர்ந்த ஜான்பிரான்சிஸ் கென்னடி. இவரது மகன் ஆர்த்தர்வில்சன் (வயது 18). இவர்கள் 2 பேரும் நேற்றுமுன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் கரூரில் இருந்து குளித்தலை வழியாக திருச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். குளித்தலை அருகே குறப்பாளையம் பிரிவு சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது, இவர்களுக்கு முன்னால் சென்ற லாரி டிரைவர் எந்தவித முன்னெச்சரிக்கையும் செய்யாமல் லாரியை பிரிவு சாலையில் திருப்பியுள்ளார்.
இதனால் எதிர்பாராதவிதமாத மோட்டார் சைக்கிள் லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜான்பிரான்சிஸ்கென்னடி, ஆர்த்தர்வில்சன் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 2 பேரும் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை அருகே உள்ள சங்காயிபட்டியை சேர்ந்தவர்கள் வையாபுரி, சவரிமுத்து. இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் குளித்தலை - மணப்பாறை சாலையில் சென்றுகொண்டிருந்தனர். ஆலமரத்துபட்டி ஒத்தக்கடை அருகே சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி ஒன்றில் கட்டப்பட்டிருந்த கயிறு திடீரென மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த வையாபுரியின் கழுத்தி மாட்டியுள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வையாபுரி, சவரிமுத்து 2 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர் தாலுகா தாளூரில் இருந்து தேவாலா வழியாக கூடலூருக்கு நேற்று காலை 11 மணிக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 85 பயணிகள் இருந்தனர். டிரைவர் ஜெகநாதன் பஸ்சை ஓட்டினார். நாடுகாணி பஜாரை கடந்து தடுப்பணை அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது கூடலூரில் இருந்து நாடுகாணியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் திருப்பியதாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக சென்று 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதைகண்ட அப்பகுதி மக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங் தலைமையிலான போலீசார், நிலைய அலுவலர் அனில்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் பொதுமக்கள் உதவியுடன் பஸ்சுக்குள் சிக்கி தவித்த பயணிகளை மீட்டனர். உடனடியாக அனைவரும் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். படுகாயம் அடைந்தவர்கள் விவரம் வருமாறு:-
நாடுகாணியை சேர்ந்த லாவண்யா (வயது 18), பாக்கியலட்சுமி (55), சேரம்பாடி பானுமதி (48), நாயக்கன்சோலை வனசுந்தரி (58), ஊட்டி குழிசோலை வாலாமணி (63), பாண்டியாறு பாலசந்திரன் (59), சேரம்பாடி திவ்யபிரபா (28), மனோகரி (30), அபிநயா, சேரங்கோடு ஷீலாவதி (40), கீழ்நாடுகாணி பவித்ரா (13) உள்பட 46 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதில் பலர் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று விட்டனர். மேலும் 9 பேர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி, கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கூடலூர் பகுதியில் மிகவும் பழுதடைந்த பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பின்றி பயணம் செய்யும் நிலை தொடர்கிறது. எனவே நல்ல நிலையில் இயங்கக்கூடிய பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை திராவிடமணி எம்.எல்.ஏ. மற்றும் அரசியல் கட்சியினர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
இந்த விபத்து குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடியிலிருந்து, காரைக்காலுக்கு கிரானைட் கல் ஏற்றிக்கொண்டு நேற்று கன்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை முரளிதரன் என்பவர் ஓட்டி வந்தார். அந்த லாரி மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தது.
அப்போது காரக்கோட்டை பாலம் அருகே வளைவில் திரும்பும்போது, குறுக்கே மாடு ஒன்று சென்றது. இதனால் மாடு மீது லாரி மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பிரேக் பிடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியின் இடிபாடுகளில் சிக்கி, டிரைவர் முரளிதரன் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் மணமேல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரியின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த முரளிதரனை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்திற்குள்ளான லாரியில் இருந்த கிரானைட் கற்கள் அனைத்தும் மாற்று லாரி மூலம் காரைக் காலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளது கருக்கனஹள்ளி. இங்கிருந்து மின் கம்பங்களை ஏற்றிக் கொண்டு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சிலர் பிள்ளாரி அக்ரஹாரம் நோக்கி டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். அந்த டிராக்டர் பிள்ளாரி அக்ரஹாரம் பக்கமாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நடுரோட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த தர்மபுரி மாவட்டம் கும்மனூர் அருகே உள்ள காந்திபுரத்தை சேர்ந்த முனியப்பன், பாலக்கோடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த தனபால் (42), சிதம்பரம் (24), சென்னப்பன் (25), சைமன் (25), ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டிநாயக்கனஅள்ளியை சேர்ந்த சுரேஷ் (22), முகலூரை சேர்ந்த மூர்த்தி (25) ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான டிராக்டரை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரையில் இருந்து மசாலா பாக்கெட் பண்டல் லோடு ஏற்றிய மினி வேன் நேற்று காலையில் நெல்லைக்கு புறப்பட்டு வந்தது. 9.30 மணியளவில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் இசக்கி அம்மன் கோவில் அருகில் உள்ள வளைவில் நாற்கர சாலையில் வந்தபோது, லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மினி வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
அப்போது மினி வேனின் பின்னால் அரசு விரைவு பஸ் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை நெல்லையை சேர்ந்த சுப்பையா (வயது 52) ஓட்டி வந்தார். மினி வேன் கவிழ்ந்ததை பார்த்ததும், டிரைவர் சுப்பையா பஸ்சை உடனே நிறுத்தினார்.

அப்போது அந்த அரசு விரைவு பஸ்சின் பின்னால் மதுரையில் இருந்து நெல்லைக்கு மற்றொரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை டிரைவர் அமர்நாத் (48) ஓட்டி வந்தார். அந்த பஸ்சில் கண்டக்டராக பரமசிவம் (43) இருந்தார். அரசு விரைவு பஸ் திடீரென்று நின்றதும், டிரைவர் அமர்நாத் ஓட்டி வந்த பஸ்சை உடனே நிறுத்த முயன்றார். ஆனால் அரசு விரைவு பஸ்சின் பின்புறமாக அந்த பஸ் பயங்கரமாக மோதியது.
இதற்கிடையே விபத்துக்குள்ளான பஸ்களை பின்தொடர்ந்து மற்றொரு கார் வந்தது. அந்த காரை விருதுநகரை சேர்ந்த பாண்டி மகன் சுந்தர் (29) ஓட்டி வந்தார். அவர் விபத்துக்குள்ளான பஸ்களின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை இடதுபுறமாக திருப்பினார். இதில் நிலைதடுமாறிய கார், நாற்கர சாலையோர தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு பாய்ந்து நின்றது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் மதுரையில் இருந்து வந்த பஸ்சின் டிரைவர் அமர்நாத், கண்டக்டர் பரமசிவம் மற்றும் அந்த பஸ்சில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த பழனிவேல், நவநீதகிருஷ்ணன், மோகன், கோவில்பட்டியை சேர்ந்த ஸ்ரீதேவி உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும், கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 20 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் மினி வேன், கார், அரசு விரைவு பஸ்சில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.