என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தந்தை-மகன்கள் உள்பட 6 பேர் காயம்
Byமாலை மலர்2 Jun 2022 9:58 AM GMT (Updated: 2 Jun 2022 9:58 AM GMT)
வெவ்வேறு விபத்துக்களில் தந்தை-மகன்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை நகர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் குருசாமி மகன் பழனிவேல். இவர் தனது இரு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டார். அப்போது மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் ைசக்கிள் மீது மோதியது.
இதில் இரு சிறுவர்கள் உட்பட 3 பேர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரை சேர்ந்தவர் பூமி. லாரி டிரைவரான இவர் இளையான்குடி பகுதியில் லாரியை ஓட்டிச்சென்ற போது எதிரே மானகிரியை சேர்ந்த ரபீல் என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பூமி உட்பட அவரது லாரியில் பயணம் செய்த 3 பேர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X