search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confiscate"

    • இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது
    • பேச்சு வார்த்தை க்கு பிறகே பொருட்களை ஊழியர்கள் ஜப்தி செய்து எடுத்துச்செல்வார்களா? என்பது தெரியும்.

    கோவை, பிப். 7-

    சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது39). லேத் பட்டறை தொழிலாளி.

    இவர் கடந்த 5-8-2011-ம் ஆண்டு தனது சகோதரர் முரளி கிருஷ்ணன் (38) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வால்பாறையில் உள்ள சோலையார் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வனத்துறை வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதில் முரளி கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

    இந்த விபத்து வழக்கில் உரிய இழப்பீடு வழங்க கோரி சத்தியமூர்த்தி மனைவி சுகந்தி சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் சத்தியமூர்த்திக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.20 லட்சத்து 40 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன் ஒரு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

    இதேபோல் முரளி கிருஷ்ணனுக்கு ரூ.20 லட்சத்து 11 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என சேலம் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி அரசு தரப்பில் இருந்து 50 சதவீத இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

    மீதமுள்ள தொகையை வழங்க கோரி பாதிக்கப்ப ட்டவர்கள் சார்பில் கோவை மாவட்ட 4-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு 2020-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து ரூ 34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து கோவை கோர்ட்டு அமீனா மருதையன், சேலம் கோர்ட் அமீனா சண்முகம் ஆகியோர் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்தனர்.

    அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 1 கார், 3 ஜீப், 25 கம்ப்யூட்டர் போன்ற ரூ 34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்வ தற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். கோர்ட்டு ஊழி

    யர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடு

    பட்டனர். பேச்சு வார்த்தை க்கு பிறகே பொருட்களை ஊழியர்கள் ஜப்தி செய்து எடுத்துச்செல்வார்களா? என்பது தெரியும்.

    கோவில் திருவிழாவில் பெண்களை கிண்டல் செய்தனர். இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த செஞ்சி பனம்பாக்கம் கிராமத்தில் உள்ள கோவிலில் கடந்த வாரம் ஜாத்திரை திருவிழா நடந்தது.

    அப்போது கோவிலுக்கு வந்த பெண்களை செஞ்சி பனம்பாக்கம் காலனி பகுதியை சேர்ந்த பாலகுமார், நாகராஜ், அப்பாஸ், கார்த்திக் ஆகியோர் கிண்டல் செய்தனர்.

    இது தொடர்பாக செஞ்சி பனம்பாக்கத்தை சேர்ந்த குணசேகரன் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த செஞ்சி பனம்பாக்கம் காலனியை சேர்ந்த சிலர் நேற்று செஞ்சி பனம்பாக்கம் கிராமத்துக்குள் புகுந்து மோதலில் ஈடுபட்டனர்.

    திடீரென்று அவர்கள் அங்கிருந்த 4 வீடுகளை அடித்து நொறுக்கினார்கள். அப்போது செந்தில், சரவணன், அம்சம்மா, மாரி ஆகியோர் தடுக்க முயன்றனர்.

    அப்போது அவர்கள் தாக்கப்பட்டார்கள். படுகாயம் அடைந்த 4 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கள்.

    இது தொடர்பாக கடம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×