என் மலர்
நீங்கள் தேடியது "கார்கள்"
- இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
- கார்களுக்கான வரிகள், அதிகபட்சமான 110%-லிருந்து படிப்படியாக 10% வரை குறைக்கப்படும்.
நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இந்தியா - EU வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரிகள், தற்போதுள்ள அதிகபட்சமான 110%-லிருந்து படிப்படியாக 10% வரை குறைக்கப்படும்.
இதன்மூலம் BMW, BENZ, AUDI, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட கார்களின் விலை கணிசமாகக் குறையவுள்ளன
- நாளை பிரதமர்மோடியுடன் உச்சி மாநாட்டு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
- வோக்ஸ்வாகன், மெர்சி டிஸ்-பென்ஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ. போன்ற நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய நன்மையாக இருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கார்களுக்கான இறக்குமதி வரியை 110 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகக் குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இது புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இந்த ஒப்பந்தம் நாளை (செவ்வாய்க்கிழமை) இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின்படி, குறிப்பிட்ட விலைக்கு மேல் (சுமார் ரூ. 16.3 லட்சம் ) இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு உடனடியாக வரிகள் குறைக்கப்படும்.
காலப்போக்கில், இந்த கார்களுக்கான வரி 10 சதவீதமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளால் ஏற்படும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு இடையூறுகள் குறித்த உலகளாவிய கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது இந்தியாவின் வாகனச் சந்தையைத் திறப்பதில் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய வாகன உற்பத்தியாளர்களான வோக்ஸ்வாகன், மெர்சி டிஸ்-பென்ஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ. போன்ற நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய நன்மையாக இருக்கும்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் 4 நாள் இந்தியப் பயணத்தில் இருக்கும்போதே இந்த தகவல் வந்துள்ளது.
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான பல முக்கிய முயற்சிகளை உறுதிப்படுத்துவதாகும்.
வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகவும், வர்த்தக பேச்சுவார்த்தைக ளுக்காகவும் இந்தியாவில் உள்ளனர். அவர்கள் நாளை பிரதமர்மோடியுடன் உச்சி மாநாட்டு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப் பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 30 பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்து விட்டது.
- மீதமுள்ள பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
அதில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பும் ஒன்று. இந்தப் பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியை மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில் கார் எப்படி ஏற்பட்டு பார்க்கிங் செய்யப்படுகிறது என்பதை பார்வையிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பு நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட பணிகள் முடிவடைந்துள்ளது. 6 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன.
விரைவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங்கை திறந்து வைப்பார்.
இதில் 56 கார்கள் நிறுத்தி வைக்கலாம்.
இது தவிர வளாகத்தில் 10 கார்களை நிறுத்தி வைக்கலாம். கார்களை நிறுத்தி வைப்பதற்கு மிக குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 102 திட்டப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 30 பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்து விட்டது.
மீதமுள்ள பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்தப் பணிகளும் விரைவில் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி , செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- சரக்கு வேன் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
- பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை முன்னே சென்று கொண்டிருந்த கார் ஓன்று திடீரென பிரேக் போட்டதால், அதன் பின்னே வந்த மற்றொரு கார், மற்றும் சரக்கு வேன் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- சிறுவன் ஷிவாம்ஸ் ஒரே நேரத்தில் 200 கார்களின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளான்.
- சிறுவனின் சாதனை நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் ஷிவாம்ஸ். அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவரும் இந்த சிறுவன் ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது.
சிறுவனுக்கு கார்கள் மீதான மோகம் காரணமாக தனது 3 வயதில் ஏற்பட்டிருக்கிறது. அதில் இருந்து பல கார்களின் பெயரை லோகோவை பார்த்ததும் கூறிவிடுவான். இந்நிலையில் சிறுவன் ஷிவாம்ஸ் ஒரே நேரத்தில் 200 கார்களின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளான்.
சிறுவனின் சாதனை நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. அப்போது 33 வினாடிகளில் 50 கார்களின் பெயரையும், 1.57 நிமிடத்தில் 110 கார்களின் பெயரையும் லோகோவை பார்த்து சரியாக கூறினான். இதன் காரணமாக 'டைம் வோல்ட் ரெக்கார்ட்ஸ்' சார்பில் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.
- ஐதராபாத்தில் கன்டெய்னர் லாரியில் தீ விபத்து ஏற்பட்டது.
- இதில் 8 கார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
ஐதராபாத்:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தெலுங்கானாவின் ஐதராபாத் நோக்கி கன்டெய்னர் லாரி, புதிய கார்களை ஏற்றிக்கொண்டு நேற்று வந்தது.
அந்த லாரி தேசிய நெடுஞ்சாலை 65-ல் சென்று கொண்டிருந்தபோது ஜகீராபாத் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதில், அந்த லாரியில் இருந்த 8 கார்களும் எரிந்து நாசமடைந்தன. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் கார்கள் எரிந்து சாம்பலாகின.
விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சோதனையில், 55 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி கொண்டு சென்றது தெரியவந்தது.
- கார்களை ஓட்டி வந்த இசக்கிவேல், சவரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்தவழியாக வந்த 2 கார்களை மறித்து சோதனை செய்தனர். அதில் 55 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி கொண்டு சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார்களை ஓட்டி வந்த தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த இசக்கிவேல் (வயது47), மாப்பிள்ளையூரணி சவரிமுத்து ஆகியோரை கைது செய்து 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகளையும், கார்களையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
குமாரபாளையம்:
திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 48). மாவு மில் ெதாழில் நடத்தி வருகிறார். இவரது நண்பர் சதீஷ்குமாரின் தாயார் பார்வதிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அவரை, சுந்தரம் தனது ஆம்னி காரில் கோவைக்கு அழைத்து ெசன்றார்.
பின்னர் சிகிச்சை முடிந்து ஆம்னி காரில் வீடு திரும்பினார்.சுந்தரம் கார் ஓட்ட, அருகில் உறவினர் இளங்கோ அமர்ந்திருந்தார். சேலம் -கோவை புறவழிச்சாலை கல்லூரி அருகே வந்த போது, பல்லக்காபாளையம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற மற்றொரு ஆம்னி கார் சுந்தரம் ஓட்டி வந்த கார் மீது ேமாதியது.
இதில் சுந்தரம், பார்வதி இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து சுந்தரம் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியிலும், பார்வதி கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான ஆம்னி கார் டிரைவர் எடப்பாடியை சேர்ந்த மாதேஸ் ( 36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






