என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருட்கள் வரி குறைப்பு"

    • நாளை பிரதமர்மோடியுடன் உச்சி மாநாட்டு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
    • வோக்ஸ்வாகன், மெர்சி டிஸ்-பென்ஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ. போன்ற நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய நன்மையாக இருக்கும்.

    ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கார்களுக்கான இறக்குமதி வரியை 110 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகக் குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

    இது புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இந்த ஒப்பந்தம் நாளை (செவ்வாய்க்கிழமை) இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த ஒப்பந்தத்தின்படி, குறிப்பிட்ட விலைக்கு மேல் (சுமார் ரூ. 16.3 லட்சம் ) இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு உடனடியாக வரிகள் குறைக்கப்படும்.

    காலப்போக்கில், இந்த கார்களுக்கான வரி 10 சதவீதமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளால் ஏற்படும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு இடையூறுகள் குறித்த உலகளாவிய கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இது இந்தியாவின் வாகனச் சந்தையைத் திறப்பதில் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய வாகன உற்பத்தியாளர்களான வோக்ஸ்வாகன், மெர்சி டிஸ்-பென்ஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ. போன்ற நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய நன்மையாக இருக்கும்.

    ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் 4 நாள் இந்தியப் பயணத்தில் இருக்கும்போதே இந்த தகவல் வந்துள்ளது.

    இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான பல முக்கிய முயற்சிகளை உறுதிப்படுத்துவதாகும்.

    வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகவும், வர்த்தக பேச்சுவார்த்தைக ளுக்காகவும் இந்தியாவில் உள்ளனர். அவர்கள் நாளை பிரதமர்மோடியுடன் உச்சி மாநாட்டு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப் பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நட்பு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீதான வரி விதிப்பின் அளவை குறைப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #China #ImportTax
    பீஜிங்:

    வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டுள்ளது. இதன் காரணமாக சீனப்பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

    சீனாவின் 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) பொருட்கள் மீது சமீபத்தில் அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பை அறிவித்தது. உடனே சீனாவும் தன் பங்குக்கு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 60 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் கோடி) பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

    இந்த நிலையில், நட்பு நாடுகளுக்கு சலுகை காட்டி அவர்களின் அரவணைப்பை பெற சீனா முடிவு செய்துள்ளது.

    அந்த வகையில், நட்பு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீதான வரி விதிப்பின் அளவை குறைப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளதாக ‘புளும்பெர்க் நியூஸ்’ கூறுகிறது.

    அதே நேரத்தில் சீனாவின் வரி குறைப்பு நடவடிக்கையால் எந்தெந்த நாடுகள் பலன் பெறும் என்பதை ‘புளும்பெர்க் நியூஸ்’ வெளியிடவில்லை.

    வரி குறைப்பு நடவடிக்கை பற்றி டியான்ஜின் நகரில் உலக பொருளாதார மன்றத்தில் பேசுகையில் சீன பிரதமர் லீ கெகியான் குறிப்பிட்டார். அப்போது அவர் கூறும்போது, “சில பொருட்கள் மீதான இறக்குமதி வரியை சீனா தொடர்ந்து குறைக்கும்” என்றார். ஆனால் எந்தெந்த பொருட்கள் என்று அவர் கூறவில்லை.  #China #ImportTax

    ×