என் மலர்
நீங்கள் தேடியது "ஐரோப்பிய நாடு"
- நாளை பிரதமர்மோடியுடன் உச்சி மாநாட்டு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
- வோக்ஸ்வாகன், மெர்சி டிஸ்-பென்ஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ. போன்ற நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய நன்மையாக இருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கார்களுக்கான இறக்குமதி வரியை 110 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகக் குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இது புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இந்த ஒப்பந்தம் நாளை (செவ்வாய்க்கிழமை) இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின்படி, குறிப்பிட்ட விலைக்கு மேல் (சுமார் ரூ. 16.3 லட்சம் ) இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு உடனடியாக வரிகள் குறைக்கப்படும்.
காலப்போக்கில், இந்த கார்களுக்கான வரி 10 சதவீதமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளால் ஏற்படும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு இடையூறுகள் குறித்த உலகளாவிய கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது இந்தியாவின் வாகனச் சந்தையைத் திறப்பதில் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய வாகன உற்பத்தியாளர்களான வோக்ஸ்வாகன், மெர்சி டிஸ்-பென்ஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ. போன்ற நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய நன்மையாக இருக்கும்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் 4 நாள் இந்தியப் பயணத்தில் இருக்கும்போதே இந்த தகவல் வந்துள்ளது.
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான பல முக்கிய முயற்சிகளை உறுதிப்படுத்துவதாகும்.
வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகவும், வர்த்தக பேச்சுவார்த்தைக ளுக்காகவும் இந்தியாவில் உள்ளனர். அவர்கள் நாளை பிரதமர்மோடியுடன் உச்சி மாநாட்டு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப் பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- எண்ணிக்கையில் சுமார் 18,000 பேர் மட்டுமே உள்ளனர்
- 16லிருந்து 20 வயது முடிவதற்குள் மகளை திருமணம் செய்து கொடுக்கின்றனர்
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு பல்கேரியா. இதன் தலைநகர் சோஃபியா.
இந்நாட்டில் எண்ணிக்கையில் சுமார் 18 ஆயிரம் பேரை கொண்ட கலாய்ழி ரோமா (Kalaidzhi Roma) எனும் இனத்தவர் வசிக்கின்றனர்.
இவர்களிடையே ஒரு விசித்திரமான பழக்கம் நிலவுகிறது.
இந்த இனத்தவர்கள் தங்கள் இன இள வயது திருமணமாகாத பெண்கள், பிற ஆண்களுடன் 'டேட்டிங்' அல்லது காதல் போன்ற அந்த பருவத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஆதரிப்பதில்லை. மேலும் இவர்கள் இனத்தை சேர்ந்தவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் பலர் தங்களுடன் இணைத்து கொள்ள தயங்குகின்றனர். அதனால் இவர்கள் சமுதாயத்தில் அன்னியப்படுத்தப்பட்டு விட்டதாகவும் உணர்கிறார்கள்.
எனவே, இவர்கள் திருமண சம்பந்தத்தையும் பிற இனத்தவர்களுடன் செய்து கொள்வதில்லை.
தங்கள் இன பெண்களை 16லிருந்து 20 வயதிற்குள் தங்கள் இனத்திலேயே உள்ள ஆண் மணமகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட விரும்புகிறார்கள்.
இதற்காக வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட நாளில் ஸ்டாரா ஜகோரா (Stara Zagora) எனும் பகுதியில் அந்த பெண்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பெற்றோருடன் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களை தேர்வு செய்ய அங்கு அதே இனத்து ஆண்கள் தங்கள் பெற்றோருடன் வருகின்றனர்.
இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்தவுடன் அப்பெண்ணின் பெற்றோரின் சம்மதத்தை கேட்கின்ற சம்பிரதாயம் நடைபெறுகிறது.
தங்கள் பெண்ணை மணமுடித்து கொடுப்பதற்கு ஈடாக அப்பெண்ணின் பெற்றோர் கேட்கும் தொகையை அவர்களிடம் அந்த இளைஞன் கொடுத்து திருமண பந்தத்தை ஏற்படுத்தி கொள்கிறார். இதற்கென இந்த இளைஞர்கள் தங்களின் வாழ்வில் சிறு வயதிலிருந்தே சேமிக்க தொடங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மணப்பெண்ணின் தோற்றம், உருவம், மணமகனின் வளமை போன்ற அம்சங்களை பொறுத்து பெண்ணின் பெற்றோர் பெறும் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. அனேக பெண்கள் பள்ளி படிப்பை முடிப்பதற்கு கூட பெற்றோர் விடுவதில்லை.
"ஜிப்சி பிரைட் மார்கெட்" என வட்டார மொழியில் அழைக்கப்படும் இந்த பழக்கத்தை குறித்தும், அம்மக்களின் வாழ்வை குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.






