என் மலர்
நீங்கள் தேடியது "tag 223919"
- அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
- இதுகுறித்து அம்மாபேட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் அடுத்துள்ள சாணத்திகல்மேட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி சிவகாமி (50). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். சிவகாமி இரவு தனது வீட்டின் அருகே ரோட்டை கடந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் எதிர்பாராத விதமாக சிவகாமி மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. அருகில் இருந்தவர்கள் சிவகாமியை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவகாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- அம்மாபேட்டை அருகே பஸ் மீது சுற்றுலா வேன் மோதி சென்னை வாலிபர் பலி, 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
- இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்மாபேட்டை:
சென்னை மணலி ஆண்டாள் குப்பம் பகுதி யை சேர்ந்தவர்கள் ராஜேஸ்குமார் (வயது 26), பிரபு, ரூபன் குமார், சந்தோஷ் உள்பட 14 பேர் ஒரு சுற்றுலா வேனில் வெள்ளியங்கிரிக்கு வந்தனர். வேனை சென்னையை சேர்ந்த சந்திர சேகர் ஓட்டி வந்தார்.
அவர்கள் வெள்ளி யங்கிரி சென்று விட்டு நேற்று இரவு வேனில் சென்னைக்கு சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் பவானி அருகே அம்மாபேட்டை அடுத்த குதிரைக்கல் மேடு என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராதவி தமாக அந்த வழியாக வந்த அரசு பஸ் மற்றும் சுற்றுலா வேன் மோதி கொண்டது. இதில் ராஜேஸ்குமார், பிரபு, ரூபன் குமார், சந்தோஷ் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருந்து மேல் சிகிச்சைக்கு பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்குமார் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
பலியான ராஜேஸ்குமார் என்ஜினீயரிங் படித்து விட்டு விவசாயம் பார்த்து வந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தனது மோட்டார் சைக்கிளில் சேலம் கோவை புறவழிச்சாலை எக்ஸல் கல்லூரி அருகே வந்துகொண்டிருந்தார்.
- எதிரில் வேகமாக வந்த டெம்போ வாகனம் அவர் மீது மோதியது.
குமாரபாளையம்:
சேலம் மாவட்டம், வெள்ளரிவெள்ளி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது31), தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சேலம் கோவை புறவழிச்சாலை எக்ஸல் கல்லூரி அருகே வந்துகொண்டிருந்தார்.
ரங்கனூர் பிரிவில் இருந்து வலது பக்கமாக திரும்பும் போது, எதிரில் வேகமாக வந்த டெம்போ வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த அடிபட்ட அவர்,சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து டெம்போ டிரைவர் விழுப்புரத்தை சேர்ந்த இருதயராஜ்(45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- வாழப்பாடி அடுத்த கோணஞ்செட்டியூர் அருகே வாழப்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
- அவ்வழியாக அதிவேகமாக வந்த ஜேசிபி வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னம நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் ஹரிகிருஷ்ணன்,(30). இவரது தம்பி கவுதம், (29). கூலித் தொழிலாளியான இவர்கள் வாழப்பாடி அடுத்த கோணஞ்செட்டியூர் அருகே வாழப்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த ஜேசிபி வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஹரிகி ருஷ்ணன், கவுதம் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஹரிகிருஷ்ணன் நேற்று சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இவரது தம்பி கவுதம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் நிறுவன பஸ் ஒன்று பணியாட்களை அழைத்துக் கொண்டு கே.ஒ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது.
- எதிர்பாராதவிதமாக இந்த பஸ் மொபட் மீது மோதியதில் மொபட்டில் வந்த 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பள்ளிப்பாளையம் சாலை, குமரன் மருத்துவமனை பின்புறம் வசிப்பவர் கலைமணி(வயது 34.). இவர் தனது குழந்தைகள் ரினிதாஸ்ரீ,( 6,) சிவஸ்ரீ, (3,) ஆகிய இருவரையும் மொபட்டில் பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்றார். அப்போது தனியார் நிறுவன பஸ் ஒன்று பணியாட்களை அழைத்துக் கொண்டு கே.ஒ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது.
எதிர்பாராதவிதமாக இந்த பஸ் மொபட் மீது மோதியதில் மொபட்டில் வந்த 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து குமாரபா ளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்.சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.குமாரபாளையம் அருகே நேரு நகரில் வசிப்பவர் அஜித் குமார்(வயது 19.) கட்டுமான கூலி தொழிலாளி. இவர் தன் அண்ணனின் மொபட்டில் சேலம்-கோவை புறவழிச்சாலையில் நேரு நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த கார், மொபட் மீது மோதியதில் அஜித்குமார் படுகாயமடைந்தார்.
குமாரபாளையம் போலீசார் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் கோவையை சேர்ந்த தீயணைப்பு படை வீரர் கணேஷ்பாபு, (36,) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவ்விபத்தில் கணேஷ்பாபுவிற்கும் காயமேற்பட்டதால் இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- கிரேன் வண்டியின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணசாமி இறந்து விட்டார்.
- மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய கிரேன் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே உள்ள நடுப்பாளையம் மெயின் வீதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணசாமி (91). இவர் கரூர்-ஈரோடு மெயின் ரோட்டில் வேலப்பம்பாளையத்தில் உள்ள கடையில் டீ குடித்துவிட்டு இடது புறம் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த கிரேன் வண்டி அவர் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்து விட்டார். அப்போது கிரேன் வண்டியின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணசாமி இறந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் இறந்த முதியவர் கிருஷ்ணசாமி உடலை கைப்பற்றி கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின் உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய கிரேன் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
பெருந்துறை:
திருப்பூர் மாவட்டம், முத்தூர், மங்கலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 50). இவர் பெருந்துறை வண்ணாம்பாறை பகுதியில் தங்கி பெருந்துறையில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் ஈரோடு ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடைக்கு வந்து பொருட்களை வாங்கி கொண்டு வீட்டி ற்கு செல்வதற்காக ரோட்டோரத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஆரோக்கியம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெரு ந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வரு கின்றனர்.
- கோபிசெட்டிபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.
- இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 68). இவர் ஈரோடு சத்தியமங்கலம் ரோடு கணபதிபாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக கிரே நகர் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிள் பின் பகுதியில் ரோகினி (25) என்பவர் அமர்ந்திருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத வித மாக அங்கம்மாள் மீது மோதியது. இதில் அங்க ம்மாள் மற்றும் ரோகினி ஆகியோர் படுகாயம் அடைந்தார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழி யிலேயே அங்கம்மாள் பரிதாபமாக இறந்தார். ரோகினி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நிலை தடுமாறி ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது வாலிபர்வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
- இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 27). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இவர் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியில் இரும்புகளை வாங்கி இரும்பு உருக்கு ஆலைக்கு அனுப்பும் வேலை செய்து வந்தார். இவர் கள்ளியம்புதூர் பகுதியில் தனியாக தங்கி விஜயமங்கலத்திற்கு வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு பல்லகவுண்ட ம்பாளையம் சென்று விட்டு இரவு கள்ளியம்புதூர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளியம்புதூர் அருகே வந்து கொண்டு இருந்த போது திடீரென நிலை தடுமாறி ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது அவர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக கூறினர். இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.
- இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
சென்னிமலை நாச்சி முத்து முதலியார் வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 65). இவர் சென்னிமலை பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் சென்னிமலையில் இருந்து பெருந்துறைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது பெருந்துறை சென்னிமலை ரோடு வேளாளர் தம்பிரான் கோவில் அருகே வந்த போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சக்திவேல் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- கூலித்தொழிலாளியை அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்து.
- ஓலப்பாளையம் அருகே வாகனம் மோதி பெண் பலியானார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஓலப்பாளையம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் எல்லைமேடு பகுதிக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு வேலை முடிந்து திரும்ப ஓலப்பாளையம் வீட்டிற்கு மோகனூர்- பரமத்திவேலூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. மாரியம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் மாமாங்கம் ஐடி பார்க் அருகில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார்சைக்கிள் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் முதியவர் பலத்த அடிபட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் மற்றும் போலீசார் சேர்ந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 7-ந்தேதி இரவு 9 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த முதியவர் பெயர் மற்றும் முகவரி குறித்து எதுவும் தெரியவில்லை. அவர் கிரே கலர் கட்டம் போட்ட சட்டை, ஊதா கலர் வேட்டி அணிந்திருந்தார். இவரை பற்றி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தால் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.






