search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dies after"

    • வீட்டிற்கு வரும் வழியில் தொழிலாளி அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார்.
    • இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள சீனாபுரம், சுள்ளி பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 42). இவரது மனைவி சவுந்தர பிரியா. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

    பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கார்டன் சூப்பர்வைசராக முருகேஷ் கடந்த 4 வருடங்களாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு குடிப்ப ழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வீட்டிற்கு வந்து ள்ளார்.

    அப்போது வீட்டிற்கு வரும் வழியில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். இவரது மனைவி தோட்டத்து வேலைக்கு காலையிலேயே சென்று விட்டார்.

    மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது முருகேஷ் வாந்தி எடுத்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார். அவரிடம் விசாரித்த போது கண் பார்வை சரியாக தெரியவில்லை என்றும் முதுகு வலிப்பதாகவும் கூறினார்.

    உடனடியாக அக்கம்ப க்கத்தினர் உதவியுடன் சவுந்தரபிரியா முருகேசனை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சையில் இருந்த முருகேஷ் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார்.
    • இது குறித்து பவானி ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    பவானி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் மேட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் நவீன் (19). 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு லேத் பட்டறையில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் பவானியில் இருந்து மேட்டூர் ரோட்டில் நேற்று மாலை நவீன் அவருடைய நண்பர் அருண் என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நவீனை அக்கம் பககத்தினர் மீட்டு ஆம்புலன்சு மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதில் அருண் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பவானி ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.
    • இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 68). இவர் ஈரோடு சத்தியமங்கலம் ரோடு கணபதிபாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக கிரே நகர் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிள் பின் பகுதியில் ரோகினி (25) என்பவர் அமர்ந்திருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத வித மாக அங்கம்மாள் மீது மோதியது. இதில் அங்க ம்மாள் மற்றும் ரோகினி ஆகியோர் படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழி யிலேயே அங்கம்மாள் பரிதாபமாக இறந்தார். ரோகினி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று அதிகாலை சரோஜா கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு அவர் எதிர்பாராத விதமாக வழுக்கி தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.
    • இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த பெரிய கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் மாரநாயக்கர். இவரது மனைவி சரோஜா (56). இவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது.

    இதனால் டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் பகுதியில் உள்ள அவரது அக்கா பாப்பாத்தி வீட்டில் சரோஜா தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை சரோஜா கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு அவர் எதிர்பாராத விதமாக வழுக்கி தவறி விழுந்தார்.

    இதில் அவருக்கு தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து அவரை மீட்டு கோபி செட்டிபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×