search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hit by a motorcycle"

    • தனது வீட்டிற்கு செல்வதற்காக ரோட்டின் இடது புறம் இருந்து வலது புறமாக ரோட்டை கடக்க முயன்றார்.
    • அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அம்மாப்பேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள நெரஞ்சிப்பேட்டை இந்திரா வீதியைச் சேர்ந்தவர் மயிலியம்மாள்(87) இவர் நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் நெரிஞ்சிப் பேட்டையில் மேட்டூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    தனது வீட்டிற்கு செல்வதற்காக ரோட்டின் இடது புறம் இருந்து வலது புறமாக ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அம்மா–பேட்டை பகுதியில் இருந்து நெருஞ்சிப் பேட்டையை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத விதமாக மைலியம்மாள் மீது மோதியதில் பின்னந் தலையில் பலத்த அடிபட்டது உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூர் அரசு மருத்துவ–மனையில் சேர்த்தனர்.

    சிகிச்சை பலனின்றி இரவு 8.30 மணி அளவில் உயிரிழந்தார் இதுகுறித்து மயிலியம்மாளின் மகன் ஆடலரசன் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.
    • இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 68). இவர் ஈரோடு சத்தியமங்கலம் ரோடு கணபதிபாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக கிரே நகர் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிள் பின் பகுதியில் ரோகினி (25) என்பவர் அமர்ந்திருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத வித மாக அங்கம்மாள் மீது மோதியது. இதில் அங்க ம்மாள் மற்றும் ரோகினி ஆகியோர் படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழி யிலேயே அங்கம்மாள் பரிதாபமாக இறந்தார். ரோகினி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×