search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிரேன் மோதி முதியவர் பலி
    X

    கிரேன் மோதி முதியவர் பலி

    • கிரேன் வண்டியின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணசாமி இறந்து விட்டார்.
    • மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய கிரேன் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள நடுப்பாளையம் மெயின் வீதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணசாமி (91). இவர் கரூர்-ஈரோடு மெயின் ரோட்டில் வேலப்பம்பாளையத்தில் உள்ள கடையில் டீ குடித்துவிட்டு இடது புறம் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த கிரேன் வண்டி அவர் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்து விட்டார். அப்போது கிரேன் வண்டியின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணசாமி இறந்து விட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் இறந்த முதியவர் கிருஷ்ணசாமி உடலை கைப்பற்றி கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனைக்கு பின் உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய கிரேன் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×