search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி பெண் பலி
    X

    வாகனம் மோதி பெண் பலி

    • கூலித்தொழிலாளியை அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்து.
    • ஓலப்பாளையம் அருகே வாகனம் மோதி பெண் பலியானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஓலப்பாளையம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் எல்லைமேடு பகுதிக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு வேலை முடிந்து திரும்ப ஓலப்பாளையம் வீட்டிற்கு மோகனூர்- பரமத்திவேலூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. மாரியம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×