search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Moped"

    • இரண்டு பெயர்களுக்கு அந்நிறுவனம் காப்புரிமை கோரியுள்ளது.
    • அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்று டி.வி.எஸ். XL100.

    டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது பிரபலமான XL100 மொபெட் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனில் பயன்படுத்துவதற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. முதற்கட்டமாக டி.வி.எஸ். XL எலெக்ட்ரிக் வெர்ஷனில் பயன்படுத்துவதற்காக E-XL மற்றும் XL EV என இரண்டு பெயர்களுக்கு அந்நிறுவனம் காப்புரிமை கோரியுள்ளது.

    காப்புரிமை கோரியிருப்பதை அடுத்து, டி.வி.எஸ். நிறுவனம் தனது XL மொபெட் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக டி.வி.எஸ். XL100 விளங்குகிறது.

     


    ஐகியூப் மாடலின் வெற்றியை தொடர்ந்து டி.வி.எஸ். நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் E-XL மற்றும் XL EV மாடல்களை பயன்படுத்த டி.வி.எஸ். நிறுவனம் காப்புரிமை கோரியிருக்கிறது.

    எனினும், இதுபற்றி அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தற்போது டி.வி.எஸ். XL100 பெட்ரோல் மாடலின் விலை ரூ. 44 ஆயிரத்து 999 என துவங்கி அதிகபட்சம் ரூ. 59 ஆயிரத்து 695, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் மொபெட் பிரிவில் விற்பனை செய்யப்படும் ஒற்றை மாடலாக கைனடிக் E லூனா விளங்குகிறது. இதன் விலை ரூ. 64 ஆயிரத்து 990 என துவங்கி அதிகபட்சம் ரூ. 74 ஆயிரத்து 990, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை.
    • 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது.

    ஆறுமுகநேரி:

    தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை பெறக்கூடிய 10-ம் வகுப்பு மாணவர்தான் அவர். ஆனால் தனது திறமையினால் சாதாரண சைக்கிள் ஒன்றை அதிக விலை மதிப்புள்ள சைக்கிளாக மாற்றி அசத்தியது தான் இங்கு ஆச்சரியமானது.

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் குத்துக்கல் தெருவை சேர்ந்த காதர் ஷாமுனா என்பவரின் மகன் சுல்தான் அப்துல்காதர் (வயது16). இவர் காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சிறு வயது முதலே பொம்மை கார்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களையும், சிறு சிறு மின் கருவிகளையும் 'அக்கு வேறு ஆணி வேறாக' பிரித்துப் போட்டு ஆராய்ந்து மீண்டும் அதனை பொருத்தி வைத்து இயக்கி பார்ப்பதில் அலாதி ஆனந்தம் காண்பவராக இருந்துள்ளார்.

    இந்த வகையில்தான் சுல்தான் அப்துல்காதரின் கவனம் தனது சைக்கிள் மீதும் ஏற்பட்டுள்ளது. குறைந்த செலவில் அந்த சைக்கிளை பேட்டரியில் இயங்கும் மொபட் போல மாற்ற வேண்டும் என்ற ஆசை அவருக்கு தோன்றியுள்ளது. அவ்வப்போது தனது பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் பணத்தை சேமித்து தனது கனவு சைக்கிளுக்காக தேவைப்படும் பேட்டரி, மோட்டார் மற்றும் உதிரி பாகங்களை வாங்கி சேர்த்துள்ளார். பின்னர் அவற்றையெல்லாம் சைக்கிளில் பொருத்திப் பார்த்து அவ்வப்போது பரிசோதனையை நிகழ்த்தி வந்துள்ளார்.

    இந்த முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை. இப்போது இலகுவான சைக்கிள் பேட்டரி மொபட் காயல்பட்டினத்தில் பலராலும் பாராட்டப்படும் வாகனமாக மாறி உள்ளது. பட்டனை அழுத்தி 'ஸ்டார்ட்' செய்து திருகினால் 'ரெக்க கட்டி பறக்குதய்யா சுல்தானோட சைக்கிள்'. 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது. மணிக்கு 40 கிலோமீட்டர் தூர வேகம்.

    தேவைப்பட்டால் சாதாரணமாக 'பெடல்' செய்தும் பயணிக்கலாம். கூடுதலாக பேட்டரி இணைப்புடன் கூடிய எல்.இ.டி. ஹெட்லைட் வசதியும், தானியங்கி லாக் சிஸ்டமும் உள்ளன. இவை தவிர இந்த வண்டி எங்கே செல்கிறது என்பதை காட்டுவதற்கான ஜி.பி.எஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நவீன சைக்கிளை ஓட்டுவதற்கு லைசன்ஸ் தேவையில்லை. எவ்விதத்திலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இந்த சைக்கிளைப் பற்றிய பரபரப்பான பேச்சு காயல்பட்டினம் பகுதியில் உலவி வருகிறது.

    இது பற்றி சுல்தான் அப்துல்காதர் பயின்று வரும் பள்ளியின் தலைமை ஆசிரியரான அப்துல்காதர் கூறியதாவது:-

    எங்கள் மாணவன் சுல்தான் அப்துல்காதரின் இந்த சாதனையை கண்டு வியந்தோம். பள்ளியின் நிர்வாகிகளான வாவு மஸ்னவி, வாவு நெய்னா ஆகியோர் இந்த முயற்சிக்கு பாராட்டுதலை தெரிவித்ததோடு, இந்த 'சைக்கிள் மொபட்' வாகனத்தை இன்னும் மேம்படுத்த என்னென்ன உபகரணங்கள் தேவையோ அவற்றை எல்லாம் வாங்கித் தந்து உதவுவதாக கூறியுள்ளனர். மாணவனின் தேர்வு காலம் முடிந்த பிறகு கூடுதலான சைக்கிள் மொபட்டுகளை தயாரிக்கலாமா என்பது பற்றியும் யோசித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆக ஒரு சாதாரண சைக்கிளை ரூ.10 ஆயிரம் செலவில் எளிய ரக மோட்டார் வாகனமாக மாற்றி காட்டி சாதனை புரிந்துள்ளார் பள்ளி மாணவரான சுல்தான் அப்துல்காதர். இவரை காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகம்மது உள்ளிட்ட பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர். காயல்பட்டினத்தில் அரசின் இலவச சைக்கிள்களை பெற்றுள்ள மாணவர்களுக்கும் இதுபோன்று தங்கள் சைக்கிளையும் மதிப்பு கூட்டி மொபட் போல் மாற்றி அதில் பயணிக்கும் ஆசை பெருகி வருகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளின் அதிகாரிகள் இந்த மாணவனின் சாதனை முயற்சியை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

    • சம்பவத்தன்று முருகேஷ், ஓலப்பாளையம் பொன்பரப்பி பிரிவு அருகே தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
    • வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த முத்தூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 66). சம்பவத்தன்று முருகேஷ், ஓலப்பாளையம் பொன்பரப்பி பிரிவு அருகே தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, முருகேஷ் சென்று கொண்டிருந்த மொபட் மீது மோதியதாக தெரிகிறது.

    இதில் மொபட்டில் இருந்து பலத்த காயத்துடன் முருகேஷ் கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை அங்கிருந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகேஷ் நேற்று (திங்கட்கிழமை) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று மணி பத்மநேரியில் உள்ள தனது வயலுக்கு மொபட்டில் சென்றார்.
    • வயல் அருகே மொபட்டை நிறுத்தி விட்டு, வயலுக்கு சென்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள நெடுவிளை வடக்குத் தெருவை சேர்ந்தவர் மணி (வயது70). விவசாயி. சம்பவத்தன்று இவர் பத்மநேரியில் உள்ள தனது வயலுக்கு மொபட்டில் சென்றார். வயல் அருகே மொபட்டை நிறுத்தி விட்டு, வயலுக்கு சென்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மொபட்டை காணவில்லை. மர்ம நபர்கள் மொபட்டை திருடி சென்று விட்டனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பபேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மொபட்டை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    • கீழே விழுந்ததில் காயம் அடைந்த தாயையும், மகளையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர்.
    • புஷ்பா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஜோதி நகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி புஷ்பா (வயது47). கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது மகளுடன் மொபட்டில் அங்குள்ள பேக்கரி அருகே சென்று கொண்டிருந்தார். இவர்களை பின்தொடர்ந்து வந்த ஆட்டோ மொபட் மீது மோaதியது.

    இதில் நிலைதடுமாறி புஷ்பாவும், அவரது மகளும் கீழே விழுந்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த 4 பேரில் ஒருவர் கீழே இறங்கி வந்து புஷ்பாவின் கைப்பையை பறித்து கொண்டு ஆட்டோவில் ஏறி தப்பினர்.

    கீழே விழுந்ததில் காயம் அடைந்த தாயையும், மகளையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர். இதற்கிடையே பணம் அதிகம் இருக்கும் என கைப்பையை பறித்த கும்பல் அதில் ரூ.500 மட்டும் இருந்ததால் ஏமாற்றம் அடைந்து பணத்தை எடுத்து விட்டு சிறிது தூரத்தில் கைப்பையை தூக்கி எறிந்து விட்டு சென்றனர்.

    இது குறித்து புஷ்பா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மொபட் மீது ஆட்டோவை மோத செய்து பணம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அப்துல் சமது பொருட்கள் வாங்குவதற்காக இன்று வண்ணார்பேட்டைக்கு தனது மொபட்டில் வந்தார்.
    • அப்போது மொபட்டின் பெட்டியினுள் ரூ.40 ஆயிரம், செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை வைத்து சென்றார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் காந்திமதி தெருவை சேர்ந்தவர் அப்துல் சமது (வயது60). அ.தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளரான இவர் டவுன் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    இதற்காக பொருட்கள் வாங்குவதற்காக இன்று வண்ணார்பேட்டைக்கு தனது மொபட்டில் வந்தார். அப்போது மொபட்டின் பெட்டியினுள் ரூ.40 ஆயிரம், செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை வைத்து சென்றார்.

    இவர் கொக்கிரகுளம் அறிவியல் மையம் அருகே சென்ற போது அப்பகுதியில் திடீரென காரில் வந்த 2 பேர் அவரது மொபட்டை வழிமறித்தனர்.

    பின்னர் அவரை கீழே தள்ளி விட்டு மொபட்டை எடுத்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல் சமது அவ்வழியாக சென்ற ரோந்து போலீசாரி டம் தகவல் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர்கள் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா மூலம் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • தாழையூத்து பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்த போது பின்னால் வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.
    • விபத்தில் படுகாயம் அடைந்த சண்முகவேலுக்கு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்தவர் அபுதாகீர் (வயது 49). இவர் இன்று காலை 10.30 மணியளவில் சங்கர் நகரில் இருந்து கே.டி.சி. நகர் நோக்கி தனது மொபட்டில் சென்றார்.

    கார் மோதல்

    அப்போது அதே பகுதியை சேர்ந்த சண்முகவேல் (50) என்பவர் மொபட்டில் அவருடன் பின்னால் அமர்ந்து சென்றார்.

    இவர்களது மொபட் தாழையூத்து பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்த போது பின்னால் வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.

    இதில் மொபட்டில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும் அபுதாகீரின் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். சண்முகவேலும் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தாழையூத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விசாரணை

    சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று அபுதாகீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சண்முகவேலுக்கு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிறுவன பஸ் ஒன்று பணியாட்களை அழைத்துக் கொண்டு கே.ஒ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது.
    • எதிர்பாராதவிதமாக இந்த பஸ் மொபட் மீது மோதியதில் மொபட்டில் வந்த 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பள்ளிப்பாளையம் சாலை, குமரன் மருத்துவமனை பின்புறம் வசிப்பவர் கலைமணி(வயது 34.). இவர் தனது குழந்தைகள் ரினிதாஸ்ரீ,( 6,) சிவஸ்ரீ, (3,) ஆகிய இருவரையும் மொபட்டில் பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்றார். அப்போது தனியார் நிறுவன பஸ் ஒன்று பணியாட்களை அழைத்துக் கொண்டு கே.ஒ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது.

    எதிர்பாராதவிதமாக இந்த பஸ் மொபட் மீது மோதியதில் மொபட்டில் வந்த 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து குமாரபா ளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்.சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.குமாரபாளையம் அருகே நேரு நகரில் வசிப்பவர் அஜித் குமார்(வயது 19.) கட்டுமான கூலி தொழிலாளி. இவர் தன் அண்ணனின் மொபட்டில் சேலம்-கோவை புறவழிச்சாலையில் நேரு நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த கார், மொபட் மீது மோதியதில் அஜித்குமார் படுகாயமடைந்தார்.

    குமாரபாளையம் போலீசார் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் கோவையை சேர்ந்த தீயணைப்பு படை வீரர் கணேஷ்பாபு, (36,) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவ்விபத்தில் கணேஷ்பாபுவிற்கும் காயமேற்பட்டதால் இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி கணவன்-மனைவி லாரி மோதியது விபத்தில் பெண் பலியானார்.
    • இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ராஜேஸ்வரி (57). இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சண்முகம் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று ராஜேஸ்வரிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை மருத்துவமனைக்கு கணவர் சண்முகம் தனது மொபட்டில் அழைத்து சென்றார். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று கணவன்-மனைவி இருவரும் மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

    சாந்தி தியேட்டர் பிரிவு அருகே ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக சண்முகம் மொபட் மீது மோதியது. இதில் சண்முகம், ராஜேஸ்வரி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    அப்ேபாது அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கணவன்-மனைவி இருவரையும் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் கோவை அரசு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். சண்முகம் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெருந்துறை அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் தலையில் பலத்த அடிபட்டு பலியானார்.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    சித்தோடு ராயபாளையம்புதூர் கோர்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 52). இவர் நேற்று மாலை பெருந்துறை வந்துவிட்டு சித்தோடு செல்வதற்காக தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    பவானி ரோடு எருகாட்டுவலசு அருகே சென்று கொண்டிருந்த போது மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூச்சு பேச்சின்றி கிடந்தார்.

    உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • வீரவநல்லூரில் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற அவர் கடைக்கு சென்ற சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை.
    • வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    அம்பை புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்துரை(வயது 31). தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் வீரவநல்லூர் அருகே உள்ள தெற்கு வீரவநல்லூரில் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.

    அங்கு தனது மொபட்டை நிறுத்திவிட்டு கடைக்கு சென்ற பால்துரை சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை.

    இது தொடர்பாக அவர் வீரவநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் தனது XL மொபெட் மாடலை பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப அப்டேட் செய்ய இருக்கிறது. #TVS



    அரசின் புதிய விதிமுறைகளுக்கேற்ப வாகனங்களை தயாரிக்கும் சவாலான பணிகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. 

    அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வர இருக்கும் பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப இப்போதிலிருந்தே தனது வாகனங்களைத் தயாரிக்கத் தொடங்கி விட்டது டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம். இந்நிறுவனத்தின் பிரபல மாடலான டி.வி.எஸ். XL புதிய விதிமுறைகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருகிறது.

    இந்தியாவில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் மொபெட்களின் பங்கு 4 சதவீதமாக உள்ளது. மொபெட் உற்பத்தியில் டி.வி.எஸ்., ஹீரோ மற்றும் கைனெடிக் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தன. இதில் ஹீரோ மற்றும் கைனெடிக் நிறுவனங்கள் மொபெட் உற்பத்தியிலிருந்து வெளியேறிய நிலையில் இப்போது மொபெட் உலகின் முன்னோடி நிறுவனமாக டி.வி.எஸ். திகழ்கிறது. 



    தங்களது ஆரம்ப கால வாகனமான மொபெட்டை காலத்திற்கேற்றவாறு மாற்றியமைத்துள்ளது இந்நிறுவனம். பாரத் புகை 6 விதிக்கேற்ப வாகனங்களை வடிவமைத்து மாற்றுகிறது இதன் காரணமாக மொபெட்டின் விலை ரூ.29 ஆயிரத்திலிருந்து ரூ.38 ஆயிரம் வரை இருக்கும் என்று தெரிகிறது. 

    புதிய டி.வி.எஸ். XL மாடலில் 4-ஸ்டிரோக் என்ஜின், 100 சி.சி. திறன் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி ஆகியவை சேர்க்கப்படுவதால் இதன் விலை அதிகரிப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மொபெட் பிரியர்களுக்காக தொடர்ந்து நவீன வசதிகளை இதில் புகுத்தி வருவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
    ×