search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடி அருகே விபத்தில் கூலித் தொழிலாளி பலி
    X

    வாழப்பாடி அருகே விபத்தில் கூலித் தொழிலாளி பலி

    • வாழப்பாடி அடுத்த கோணஞ்செட்டியூர் அருகே வாழப்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
    • அவ்வழியாக அதிவேகமாக வந்த ஜேசிபி வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னம நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் ஹரிகிருஷ்ணன்,(30). இவரது தம்பி கவுதம், (29). கூலித் தொழிலாளியான இவர்கள் வாழப்பாடி அடுத்த கோணஞ்செட்டியூர் அருகே வாழப்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

    அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த ஜேசிபி வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஹரிகி ருஷ்ணன், கவுதம் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஹரிகிருஷ்ணன் நேற்று சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இவரது தம்பி கவுதம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×