search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BMW Car"

    • ஐதராபாத் அணி 1937-38 மற்றும் 1986-87 பதிப்புகளில் ரஞ்சி கோப்பையை வென்றது.
    • மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றதன் மூலம் ரஞ்சி கோப்பையின் எலைட் குரூப் போட்டிக்கு நுழைந்தது.

    ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ரஞ்சி கோப்பையை வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசும், பிஎம்டபிள்யூ காரும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.

    மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ரஞ்சி கோப்பையின் எலைட் குரூப் போட்டிக்கு நுழைந்தது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் திலக் வர்மா மற்றும் கஹ்லாட் ராகுல் சிங் ஆகியோர் தலா அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.

    ஐதராபாத் அணியின் வெற்றிக்கு மாநில கிரிக்கெட் சங்கம் வெகுமதிகளை அறிவித்தது. பிளேட் குரூப் சாம்பியன்களுக்கு ரூ. 10 லட்சமும், சிறந்து விளங்குபவர்களுக்கு ரூ. 50,000 பரிசும் வழங்குவதாக உறுதியளித்தது. இதுமட்டுமல்லாமல் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரஞ்சி கோப்பையை வென்றால், ஒவ்வொரு வீரருக்கும் BMW கார் வழங்கப்படும் என்று சங்கத்தின் தலைவர் ஜெகன் மோகன் ராவ் அர்சினப்பள்ளி உறுதியளித்துள்ளார்.

    மேலும் ஒட்டுமொத்த அணிக்கும் 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    ஐதராபாத் அணி 1937-38 மற்றும் 1986-87 பதிப்புகளில் ரஞ்சி கோப்பையை வென்றது. ஆனால் கடந்த பதிப்பில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் பிடித்த ஐதராபாத் அணி ஏழு லீக் ஆட்டங்களில் ஒரே ஒரு வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தபோது பிளேட் பிரிவுக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    • வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சாலை ஒன்றில் கருப்பு நிறத்தில் பிஎம்டபுள்யூ சொகுசு கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    அப்போது, அந்த கார் அருகே மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவரில் ஒருவர் ஆயுதத்தை கொண்டு கார் ஜன்னலை உடைத்து உள்ளே இறங்கி பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

    இரு சக்கர வாகனத்தில் தயார் நிலையில் இருந்த அவனது கூட்டாளியாக மற்றொரு நபருடன் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவானது. பணத்தை தொலைத்தவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

    பிரபல கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ-க்கு ரூ.99 லட்சம் டாலர்களை அபராதமாக விதிக்க தென்கொரிய அரசு முடிவு செய்துள்ளது. #BMW



    தென்கொரியாவில் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் சுமார் 40 கார்களில் தீப்பிடித்து எரிந்தது. இந்த ஆண்டு முழுக்க பி.எம்.டபுள்யூ. விற்பனை செய்த கார்களில் கோளாறு இருந்து வந்தது.

    இது தொடர்பாக தென்கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் ஆய்வு நடத்த முடிவு செய்தது. ஆய்வில் காரில் உள்ள இ.ஜி.ஆர். எனும் பாகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாகனங்களில் தீபிடித்து எரிந்ததும், பிரச்சனையை மூடி மறைக்க பி.எம்.டபுள்யூ. நிறுவனம் முயற்சித்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.


    பி.எம்.டபுள்யூ. கார்களின் இ.ஜி.ஆர். (எக்சாஸ்ட் கியாஸ் ரீசர்குலேஷன்) பாகத்தில் கண்டறியப்பட்ட கோளாறு, கார் தொடர்ச்சியாக அதிவேகத்தில் இயக்கப்படும் போது, தீப்பிடிக்க காரணமாக அமைந்தது.

    கார்களில் ஏற்பட்ட கோளாறை விரைந்து சரி செய்யாத காரணத்தால் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்திற்கு சுமார் ரூ.99 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக பி.எம்.டபுள்யூ. கொரியாவின் அதிகாரி கூறியதாவது:-

    போக்குவரத்து அமைச்சகம் தங்கள் நிறுவனம் மீது நேரடியாக குற்றம் சாட்டவில்லை என்றும் இது தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.  #BMW
    கோவையில் தொழில் அதிபரின் சொகுசு காரில் பதுங்கியிருந்த 5 அடி நீள நாக பாம்பை 1 மணி நேரம் போராடி வெளியில் எடுத்தனர். #Snake #Car
    வெள்ளகோவில்:

    திருப்பூரை சேர்ந்தவர் விக்னேஷ் ராஜா. பனியன் நிறுவன உரிமையாளர்.

    சம்பவத்தன்று இரவு இவர் தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தனது சொகுசு காரில் சென்றார்.

    முத்தூர் அருகே வரட்டுக்கரை என்ற இடத்தில் வரும்போது, பாம்பு ஒன்று காரின் முன்பக்க கண்ணாடியில் படம் எடுத்து ஆடியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனடியாக சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஆய்வு செய்த போது பாம்பை காணவில்லை.

    எனினும் கார் உரிமையாளருக்கு சந்தேகம் இருந்தது. இதையடுத்து கோவையில் உள்ள கார் நிறுவனத்துக்கு தகவல் கூறி நிறுவனத்தின் பணிமனைக்கு காரை கொண்டு சென்று பார்த்தபோது, காரின் என்ஜின் பகுதியில் 5 அடி நீள நாக பாம்பு சுருண்டு பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து பாம்பு பிடிக்கும் வீரரான சஞ்சய் அழைக்கப்பட்டார். அவர் காரில் சுருண்டு படுத்து இருந்த பாம்பை 1 மணி நேரம் போராடி லாவகமாக பிடித்து வெளியில் எடுத்தார். பின் அந்த பாம்பானது பத்திரமாக மதுக்கரை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

    உயர் ரக சொகுசு காரில் 5 அடி நீள நாகப்பாம்பு பதுங்கி இருந்தது கார் உரிமையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #Snake #Car





    ரூ.50 லட்சம் கொடுத்து வாங்கிய புத்தம் புது பி.எம்.டபிள்யூ கார் ஊதுபத்தி கொளுத்தியதால் எரிந்து எலும்புக்கூடான சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
    பீஜிங்:

    சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யங்சோய் நகரத்தை சேர்ந்த நபர் இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ காரை வாங்கியுள்ளார். புதிதாக கார் வாங்கியுள்ளதால் மத சம்பிரதாயப்படி காரின் முன்னால் ஊதுபத்தி கொளுத்தி வழிபட முடிவு செய்து காரின் முன் ஊதுபத்தியை வைத்துள்ளார்.

    சீனா உள்ளிட்ட புத்த வழிபாடு உள்ள சில நாடுகளில் ஊதுபத்திகள் பெரிதான ஒன்றாக இருக்கும். காரின் முன் ஊதுபத்தியை வைத்துவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட, அங்குள்ள நான்கு சிறுவர்கள் ஊதுபத்தியை கொளுத்தியுள்ளனர். திடீரென அணல் கங்குகள் காரின் மீது விழ, யாரும் எதிர்பாராத வகையில் கார் தீப்பிடிக்க தொடங்கியது.

    என்ன நடக்கிறது என அனைவரும் உணர்வதற்கு உள்ளாகவே கார் நன்றாக எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பலரும் கிண்டலாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். வீடியோவை கீழே காணலாம், 

    ×