என் மலர்tooltip icon

    உலகம்

    அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை!
    X

    அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை!

    • டொனால்டு டிரம்பின் மிரட்டலை சந்திக்க தயார் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
    • இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா உடன் ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.

    டொனால்டு டிரம்பின் மிரட்டலை சந்திக்க தயார் என்று ஈரான் தெரிவித்தபோதிலும், பேச்சுவார்த்தைக்கும் தயார் என்று தெரிவித்தது.

    இதனைத்தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் ஜெனீவாவில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்நிலையில், அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே ஜெனீவாவில் பிப்.26ம் தேதி 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

    பேச்சுவார்த்தைகளுக்கு இடையே ஈரான் மீது எந்நேரமும் அமெரிக்கா தாக்குதல் நடத்த தயாராக இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

    Next Story
    ×