என் மலர்
நீங்கள் தேடியது "ராணுவ ஹெலிகாப்டர் விபத்து"
- குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
- ஈரானில் ஒரு வாரத்திற்குள் இது இரண்டாவது விபத்து ஆகும்.
மத்திய ஈரானில் உள்ள ஒரு பழம் மற்றும் காய்கறி சந்தையில் ஈரானிய இராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோர்ச்சே நகரில், நாட்டின் இஸ்பஹான் மாகாணத்தில் இந்த விபத்து நடந்ததாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் ஈரான்-இஸ்ரேல் போரின் போது அமெரிக்காவால் தாக்கப்பட்ட அணுசக்தி தளம் இஸ்பஹானில் உள்ளது.
ராணுவ ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்ததாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. விமானி மற்றும் துணை விமானி விபத்தில் இறந்தனர். விபத்து காரணமாக சந்தையில் இருந்த குப்பைகள் மற்றும் புகை எழும் காட்சிகளைக் காட்டும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், விபத்தில் சந்தையில் இருந்த இரண்டு பேர் விபத்தில் இறந்ததாக கூறியது. ஈரானில் ஒரு வாரத்திற்குள் இது இரண்டாவது விபத்து ஆகும். ஈரானின் மேற்கு நகரமான ஹமேடான் அருகே ஒரு F-4 போர் விமானம் விபத்துக்குள்ளானது, அந்த விபத்தின் போது விமானிகளில் ஒருவர் கொல்லப்பட்டார்.
- இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
- விமானியை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானியை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
- ஹெலிகாப்டரின் இருந்த 2 பைலட்டுகள் உள்ளிட்ட 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
- ஹெலிகாப்டரில் இருந்த நிவாரணப் பொருட்களை படகில் வந்து மக்கள் எடுத்துச் சென்றனர்.
பீகாரின் சீதாமர்ஹி என்ற பகுதியில் ராணுவத்தின் இலகு ரக ஹெலிகாப்டர் வெள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச்சென்றபோது ஹெலிகாப்டர் வெள்ளத்தில் இறங்கியது.
ஹெலிகாப்டரின் இருந்த 2 பைலட்டுகள் உள்ளிட்ட 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஹெலிகாப்டரில் இருந்த நிவாரணப் பொருட்களை படகில் வந்து மக்கள் எடுத்துச் சென்றனர்.
மேலும், மீட்பு பணி வராததால் பொது மக்கள் உதவியுடன் ஹெலிகாப்டரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.






