என் மலர்
நீங்கள் தேடியது "Home Affairs Ministry"
- துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப்பெற்றனர்.'
- பாஜகவில் இருந்து 14 பேர், ஜேடியு விலிருந்து இருந்து 8 பேர் அமைசர்களாக பதவியேற்றனர்.
பீகார் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக-ஜேடியு என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது.
கடந்த வியாழக்கிழமை பீகார் முதல்வராக ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பதவியேற்றார்.
பாஜகவில் இருந்து 14 பேர், ஜேடியு விலிருந்து இருந்து 8 பேர், லோக் சக்தி (ராம்விலாஸ்) கட்சியில் இருந்து 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சாவில் இருந்து தலா ஒருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப்பெற்றனர்.'
இந்நிலையில் வியாழக்கிழமை பதவியேற்ற 26 அமைச்சர்களில் 18 பேருக்கு மட்டுமே இன்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பாஜகவை சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துறையின்கீழ் காவல்துறை, உளவுத்துறை, பொது சட்டம் மற்றும் ஒழுங்கு போன்ற முக்கிய துறைகள் வருகின்றன.
கடந்த ௨௦ ஆண்டுகளாக தம்மிடமே வைத்திருந்த உள்துறையை முதல்முறையாக கூட்டணி கட்சியான பாஜவுக்கு நிதீஷ் குமார் விட்டுக் கொடுத்துள்ளார்.
முந்தைய ஆட்சியில் சாம்ராட் சவுத்ரி வகித்து வந்த நிதி மற்றும் வணிக வரி இலாகா, ஜே.டியுவின் பிரேந்திர பிரசாத் யாதவிடம் வழங்கப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் நில சீர்திருத்தங்கள், சுரங்கம் மற்றும் புவியியல் துறைக பாஜகவை சேர்ந்த மற்றொரு துணை முதல்வரான விஜய் சின்ஹாவுக்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல் விவசாயம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, தொழில்துறை பாஜக அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- இந்த அமைப்பு தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
- நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு மீதான தடையை உள்துறை அமைச்சகம் நீடித்தது.
புதுடெல்லி:
காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமைப்பு அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்களின்போது குரல் எழுப்பி வருகின்றனர்.
பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் செயல்படும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பை சட்டத்துக்குப் புறம்பான அமைப்பாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அத்துடன், தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதால் இந்த அமைப்புக்கு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் மீதான தடை வரும் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.
- இது நேரடியாக சக்சேனாவின் அலுவலகத்தின் அதிகார வரம்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.
- அனைத்து கோப்புகளும் முதலமைச்சர் அலுவலகத்தை புறக்கணித்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படுகின்றன
துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவின் வழிகாட்டுதலின்படி டெல்லியில் உள்ள பல்வேறு இந்து மற்றும் பௌத்த மதக் கோவில்கள் மற்றும் கட்டமைப்புகளை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளுநருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், நவம்பர் 22 ஆம் தேதி நடந்த மதக் குழு கூட்டத்தில் உங்கள் வழிகாட்டுதலின் பேரில் டெல்லி முழுவதும் உள்ள பல மதக் கட்டமைப்புகளை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு படேல் நகர், தில்ஷாத் கார்டன், சுந்தர் நாக்ரி, சீமா புரி, கோகல் பூரி மற்றும் உஸ்மான்பூர் போன்ற பகுதிகளில் உள்ள கட்டமைப்புகள் இடடிக்கப்பட உள்ளது என்று அதஷி பட்டியலிட்டார். இவற்றில் பல கோயில்கள் மற்றும் புத்த வழிபாட்டுத் தலங்கள் உள்ளடங்கும்,

டெல்லி மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற முறையில், எந்த மத உணர்வுகளும் புண்படாமல் இருப்பதை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மதக் கட்டமைப்புகளை இடிப்பது சட்டம் ஒழுங்கின் கீழ் வருகிறது என்று கூறி, இது நேரடியாக சக்சேனாவின் அலுவலகத்தின் அதிகார வரம்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.
மதக் குழுவின் பணியை நீங்கள் நேரடியாகக் கண்காணித்து வருகிறீர்கள். மதக் குழுவின் அனைத்து கோப்புகளும் முதலமைச்சர் அலுவலகத்தை புறக்கணித்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படுகின்றன என்று அதிஷி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த துணை நிலை ஆளுநர் சக்சேனா, தனது முன்னோடியான அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்ப மலிவான அரசியல் செய்து ஆட்டம் காட்டுகிறார் முதல்வர் அதிஷி. அரசியல் ஆதாயங்களுக்காக வேண்டுமென்றே நாசவேலையில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிராக கூடுதல் கண்காணிப்புடன் இருக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.






