search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EVMS"

    • நாம் மீண்டும் பழைய நடைமுறையான வாக்குச்சீட்டு முறைக்கு செல்ல முடியும்.
    • இல்லையெனில் விவிபாட்டின் ரசீது வாக்காளர்களின் கைக்கு கிடைக்கப் பெற வேண்டும்.

    இந்தியாவில் EVMs மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள விவிபாட் முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விவிபாட் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை காட்டும். ஆனால் ரசீது வாக்காளரிடம் வழங்கப்படாது. பெட்டிக்குள் சேகரிக்கப்படும்.

    EVMs மீது சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சியினர் விவிபாட்டில் உள்ள அனைத்து ரசீதுகளையும் எண்ண வேண்டும் எனத் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து விவிபாட் என்ற வகையில் எண்ணப்படுகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் அனைத்து விவிபாட்டையும் எண்ண முடியாது எனத் தெரிவித்தது.

    இந்த நிலையில் வாக்காளர்களுக்கு வாக்களித்ததற்கான ரசீது வழங்க வேண்டும். பின்னர் அந்த ரசீது ஒரு பெட்டியில் சேரிக்கப்பட்டு அது எண்ணப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    ஜனநாயக சீரமைப்புக்கான சங்கத்தின் சார்பில் ஆஜரான பிரஷாந்த் பூஷன் "நாம் மீண்டும் பழைய நடைமுறையான வாக்குச்சீட்டு முறைக்கு செல்ல முடியும். இல்லையெனில் விவிபாட்டின் ரசீது வாக்காளர்களின் கைக்கு கிடைக்கப் பெற வேண்டும். அதை அவர்கள் வாக்குப்பெட்டியில் செலுத்த வேண்டும். விவிபாட் டிசைன் மாற்றப்பட்டுள்ளது" என்றார். அத்துடன் ஜெர்மனியில் நடைபெறும் தேர்தல் நடைமுறையை உதாரணத்திற்கு கூறினார்.

    அதற்கு நீதிபதி திபன்கார் தத்தா, ஜெர்மனியின் மக்கள் தொகை எவ்வளவு என கேட்க, பிரஷாந்த் பூஷன் சுமார் 6 கோடி இருக்கும் என்றார்.

    அதற்கு நீதிபதி திபன்கர் தத்தா "வெளிநாட்டு தேர்தலை நம்முடைய தேர்தலுடன் ஒப்பிடக் கூடாது. என்னுடைய வீடு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது. ஜெர்மனியை விட மேற்கு வங்காளத்தில் மக்கள் தொகை அதிகம். நாம் ஒன்றின் மீது நம்பிக்கை வைப்பது அவசியம். இதுபோன்ற சிஸ்டத்தை வீழ்த்த முயற்சிக்கக் கூடாது. இதுபோன்ற உதாரணங்களை தெரிவிக்கக் கூடாது. ஐரோப்பிய நாடுகளின் உதாரணங்கள் இங்கு சரிபட்டு வராது" என்றார்.

    • 10 சதவீத வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கூட ஒட்டுமொத்த நடைமுறையையும் நிறுத்த வேண்டும். இது நியாயமா?
    • இதுபோன்ற சிஸ்டத்தை வீழ்த்த முயற்சிக்கக் கூடாது. ஐரோப்பிய நாடுகளின் உதாரணங்கள் இங்கு சரிபட்டு வராது.

    இந்தியாவில் EVMs மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள விவிபாட் முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விவிபாட் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை காட்டும். ஆனால் ரசீது வாக்காளரிடம் வழங்கப்படாது. பெட்டிக்குள் சேகரிக்கப்படும்.

    EVMs மீது சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சியினர் விவிபாட்டில் உள்ள அனைத்து ரசீதுகளையும் எண்ண வேண்டும் எனத் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து விவிபாட் என்ற வகையில் எண்ணப்படுகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் அனைத்து விவிபாட்டையும் எண்ண முடியாது எனத் தெரிவித்தது.

    இந்த நிலையில் வாக்காளர்களுக்கு வாக்களித்ததற்கான ரசீது வழங்க வேண்டும். பின்னர் அந்த ரசீது ஒரு பெட்டியில் சேரிக்கப்பட்டு அது எண்ணப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    ஜனநாயக சீரமைப்பு சங்கத்தின் சார்பில் ஆஜரான பிரஷாந்த் பூஷன் "நாம் மீண்டும் பழைய நடைமுறையான வாக்குச்சீட்டு முறைக்கு செல்ல முடியும். இல்லையெனில் விவிபாட்டின் ரசீது வாக்காளர்களின் கைக்கு கிடைக்கப் பெற வேண்டும். அதை அவர்கள் வாக்குப்பெட்டியில் செலுத்த வேண்டும். விவிபாட் டிசைன் மாற்றப்பட்டுள்ளது" என்றார். அத்துடன் ஜெர்மனியில் நடைபெறும் தேர்தல் நடைமுறையை உதாரணத்திற்கு கூறினார்.

    அதற்கு நீதிபதி திபன்கார் தத்தா, ஜெர்மனியின் மக்கள் தொகை எவ்வளவு என கேட்க, பிரஷாந்த் பூஷன் சுமார் 6 கோடி இருக்கும் என்றார்.

    அப்போது நீதிபதி கண்ணா "நமது நாட்டில் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட்டபோது என்ன நடந்தது என்பது நாம் எல்லோருக்குத் தெரியும்." என்றார்.

    அப்போது மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே "EVMs விவிபாட் ரசீதுடன் ஒப்பிட்டு சரியாக இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும்" என்றார்.

    உடனே நீதிபதி கண்ணா "60 கோடி விவிபாட் ரசீதுகள் எண்ணப்பட வேண்டும். சரிதானே?" என்றார்.

    மேலும், "இயந்திரம் வழக்கமாக மனிதன் குறிக்கீடு இல்லாமல் சரியான முடிவுகளை கொடுக்கும். மனிதன் குறுக்கிடும்போது அல்லது அங்கீகரிக்கப்படாத மாற்றங்களை (மென்பொருள் மற்றும் இயந்திரம்) செய்யும்போது பிரச்சனை எழுப்பப்படுகிறது. இதை தவிர்க்க ஏதாவது ஆலோசனை இருந்தால் தெரிவிக்கலாம்" என்றார்.

    பிரஷாந்த பூசன் "ஒரே சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து பிவிபாட் இயந்திரத்தில் உள்ள ரசீதுகள் எண்ணப்படுகின்றன. 200 இயந்திரங்களில் இது வெறும் ஐந்து சதம் வீதம்தான். இது நியாயமாக இருக்க முடியாது. ஏழு வினாடி லைட் தவறாக வழி நடத்தப்படலாம். வாக்காளர் விவிபாட் ரசீதை பெற்று, அதை வாக்குப்பெட்டியில் செலுத்த அனுமதிக்க வேண்டும்."

    சீனியர் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயன் "பிராசந்த் பூஷன் தெரிவிக்கும் அனைத்தும் நான் ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் கெட்ட எண்ணத்தில் கூறவில்லை. தன்னுடைய வாக்கு போடப்பட்டது என்ற நம்பிக்கை வாக்காளருக்கு ஏற்பட வேண்டும். இது ஒன்றுதான்" என்றார்.

    உடனே, உச்சநீதிமன்றம் வாக்களிக்கும் நடைமுறை, EVMs-ன் சேமிப்பு மற்றும் வாக்கு எண்ணப்படுதல் உள்ளிட்ட அனைத்தை தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டது.

    நீதிபதி கண்ணா "EVMs இயந்திரத்தை டேம்பரிங் செய்யப்படும் நபருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வாய்ப்பு இல்லை. இது முக்கியமான விசயம். பயப்படும் வகையில் தண்டனை இருக்க வேண்டும்." என்றார்.

    வழக்கறிஞர் சங்கரநாராயணன் "வாக்காளர்கள் ரசீதை பெற்று வாக்குப்பெட்டியில் செலுத்த அனுமதிக்க வேண்டும்" என்றார.

    அதற்கு நீதிமன்றம் "10 சதவீத வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கூட ஒட்டுமொத்த நடைமுறையையும் நிறுத்த வேண்டும். இது நியாயமா?." என்றது. அதற்கு வழக்கறிஞர் சங்கரநாராயணன் "ஆம், அதைக் கேட்க எனக்கு உரிமை உண்டு. நான் ஒரு வாக்காளர், வேண்டுமென்றே செயல்முறையை நிறுத்துவதால் எனக்கு என்ன லாபம்?" என்றார்.

    நீதிபதி திபன்கர் தத்தா வெளிநாட்டை நம்முடைய தேர்தலுடன் ஒப்பிடக் கூடாது என்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "என்னுடைய வீடு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது. ஜெர்மனியை விட மேற்கு வங்காளத்தில் மக்கள் தொகை அதிகம். நாம் ஒன்றின் மீது நம்பிக்கை வைப்பது அவசியம். இதுபோன்ற சிஸ்டத்தை வீழ்த்த முயற்சிக்கக் கூடாது. இதுபோன்ற உதாரணங்களை தெரிவிக்கக் கூடாது. ஐரோப்பிய நாடுகளின் உதாரணங்கள் இங்கு சரிபட்டு வராது" என்றார்.

    பிரசாந்த் பூஷனிடம் நீதிபதி திபன்கர் தத்தா, மக்கள் EVMs மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதற்கு தரவுகள் உள்ளதா? என கேட்டார். அதற்கு பூஷன் ஆய்வுகளை குறிப்பிட்டார். அதற்கு நீதிபதி திபன்கர் தத்தா "நாங்கள் தனியார் தேர்தல் கணிப்பை நம்பவில்லை. எங்களுக்கு தரவுகள் வேண்டும். தரவுகள் அது உண்மையானதாக இருக்க வேண்டும், ஆனால் கருத்து அடிப்படையில் அல்ல. நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து தரவுகளை பெற இருக்கிறோம்." என்றார்.

    அத்துடன் இந்த மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

    • யாருக்கு வாக்களித்தோம் என்பதை விவிபாட் எந்திரம் மூலம் வாக்காளர்களுக்கு காட்டப்படும்.
    • இந்த ரசீது மக்களிடம் காண்பிக்கப்பட்டு, பின்னர் ஒரு பாக்சில் சேகரிக்கப்பட வேண்டும்.

    இந்திய கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் 28 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தின் பல்வேறு விசயங்களை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகளில் ஏராளமான சந்தேகம் இருக்கிறது. இதனால் புதிய நடைமுறையை தேவை. விவி பேட் (வாக்கு அளித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம்) ரசீது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும் ஆகிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    வாக்கு எந்திரம் அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்தே அதன் செயல்பாட்டில் சந்தேகம் இருந்து வருகிறது. வல்லுனர்கள் உள்ளிட்ட பலர் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். நாங்கள் பலமுறை தேர்தல் ஆணையத்திற்கு விரிவாக குறிப்புகளை கொடுத்துள்ளோம். ஆனால் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. பல கேள்விகளை எழுப்பி நாங்கள் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளோம். ஆனால் இந்தியா கூட்டணி பிரதிநிதிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது.

    எங்களுடைய பரிந்துரை எளிதானது. வாக்காளர்கள் வாக்கு அளிக்கும்போது விவிபாட் எந்திரத்தில் ஒரு ஸ்லிப் தோன்றி யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது காட்டுகிறது. ஆனால் அந்த ஸ்லிப் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு, பின்னர் ஒரு பாக்சில் சேகரிக்கப்பட வேண்டும். 100 சதவீதம் இந்த ஸ்லிப்களை எண்ண வேண்டும். இது வாக்காளர்களுக்கு தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என்ற நம்பிக்கை கொடுக்கும் இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஒரு தொகுதியின் முடிவு வெளியிடுவதற்கு முன்பாக, ஐந்து வாக்கு மையத்தில் உள்ள விவிபாட் எந்திரத்தில் உள்ள ரசீதுகள் எடுத்து எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன், விவிபாட் எந்திரங்களின் அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் சரிபார்க்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    புதுடெல்லி:

    வாக்கு எண்ணிக்கையின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும், 100 சதவீதம் இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த ஒரு அமைப்பு பொதுநல மனுவாக தாக்கல் செய்தது.

    இந்த மனு, உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே போன்ற வழக்கு தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்து, அந்த வழக்கில் தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது எனகூறி மனுவை  விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.



    முன்னதாக, 50 சதவீத வாக்கு எண்ணும் இயந்திரங்களுடன் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் வாக்குகளையும் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், 21 எதிர்க்கட்சிகள்  மனு தாக்கல் செய்து இருந்தன.

    இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி ஒவ்வொன்றிலும், தலா 5 வாக்குச்சாவடிகளில்  ஒப்புகைச்சீட்டையும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை, கடந்த மே 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
    எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் 5 வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #LokSabhaElections2019 #SC #EVMs #VVPATcounting
    புதுடெல்லி:

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை  தேர்தல்களில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் சோதனை முயற்சியாக ஒரு வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரம் (VVPAT) அமைக்கப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    மின்னணு இயந்திரங்களில் வாக்கு எண்ணும் அதேவேளையில் வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களில் உள்ள 50 சதவீதம் ஒப்புகை சீட்டையும் எண்ணக்கோரி திமுக, காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.



    இந்த வழக்கில் முன்னர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், இது சாத்தியமில்லாதது என்றும், 50 சதவீத வி.வி.பாட் ஒப்புகை சீட்டுகளை எண்ணி பார்த்தால், 6 நாள் கழித்துதான் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியும் என்றும் தெரிவித்தது.

    வி.வி.பாட் இயந்திர ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவது தொடர்பாக ஊழியர்களுக்கு எந்த பயிற்சியையும் அளிக்கவில்லை. இனி அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் சாத்தியமில்லை என்றும் தெரிவித்தது.

    இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் 5 வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அமைந்துள்ள 4 ஆயிரத்து 125 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் தலா ஒரு வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரத்தை முன்னர் அமைக்க வேண்டிய இடத்தில் தற்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தலா 5 இயந்திரங்களை அமைக்க நேரிட்டுள்ளதால் 20 ஆயிரத்து 625 வி.வி.பாட் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  #LokSabhaElections2019 #SC #EVMs #VVPATcounting 
    இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என சமீபத்தில் லண்டனில் நிரூபிக்கப்பட்டதாக வெளியாகும் தகவலுக்கு மத்திய மந்திரி பதிலளித்துள்ளார். #MANaqvi #EVMtampering
    புதுடெல்லி:

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் உவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்து விட்டதாக பிரபல மின்னணு தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    பின்னர், உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்த தில்லுமுல்லு தொடர்ந்ததாகவும் தெரிவித்தார்.

    ராணுவ தேவைக்காக பயன்படுத்தப்படும் அலைவரிசையை பா.ஜ.க. பயன்படுத்தி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குள் ஊடுருவி இந்த தில்லுமுல்லுவை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    2009-2014 ஆண்டுகளுக்கிடையில் ‘இ.சி.ஐ.எல்.’ எனப்படும் இந்திய மின்னணு கழகத்தில் (எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) பணியாற்றியவர் சையத் சுஜா. 

    வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான நான்  இந்த மோசடியை அம்பலப்படுத்தியதால் என்மீது தாக்குதல் நடத்தி பா.ஜ.கவினர் கொல்ல முயன்றனர் என்னும் ஒரு ‘பகீர்’ தகவலை சையத் சுஜா வெளியிட்டுள்ளார்.

    இந்த தில்லுமுல்லு தொடர்பாக விரிவாக ஆராய்ந்து கட்டுரை எழுத முயன்றதால்தான் கர்நாடக மாநிலத்தில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை தெரிந்து வைத்திருந்த மத்திய மந்திரி கோபிநாத் முன்டேவும் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    ஒரு கட்சி வேட்பாளருக்கு விழும் வாக்குகளை வேறொருவருக்கு விழுந்ததுபோல் பதிவாகச் செய்வது எப்படி? என்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி சமீபத்தில் லண்டனில் இருந்து வீடியோ கான்பிரசிங் மூலம் செயல்முறை விளக்கத்தையும் சையத் சுஜா செய்து காட்டினார். 

    இந்த செயல்முறை விளக்கத்தின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் கபில் சிபல் அருகில் இருந்ததால் இந்த விவகாரம் தற்போது இந்திய அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் பணியாற்றும் சையத் சுஜா அந்நாட்டு அரசிடம் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இதுதொடர்பாக இந்திய தேர்தல் கமிஷன் இன்று அளித்துள்ள விளக்கத்தில், ‘இந்த இயந்திரங்கள் அனைத்தும் மிகுந்த பாதுகாப்புடன் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன.

    புளூடூத் அல்லது வைஃபை மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குள் யாரும் ஊடுருவி தில்லுமுல்லு செய்ய முடியாது. வாக்குப்பதிவு இயந்திரங்களை திறந்துதான் எதையும் செய்ய முடியும். அப்படி திறக்கப்பட்டால் எங்கள் அதிகாரிகள் அதை கண்டுபிடித்து விடுவார்கள’ என தெரிவித்துள்ளது.

    லண்டனில் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவத்தில் எதிர்தரப்பாக மாறி விளக்கம் அளிக்க தேர்தல் கமிஷன் விரும்பவில்லை. எனினும், இவ்விவகாரம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது? என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த விவகாரம் தொடர்பான செய்திகள் வெளியானதும் டெல்லியில் இன்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, ‘காங்கிரஸ் கட்சியிடம் பத்திரிகை துறைசார்ந்த பலர் சிக்கியுள்ளனர். ஆட்சியில் இருந்து மோடியை அகற்ற வேண்டும் என்பதற்காக இந்த தன்னார்வலப் பத்திரிகையாளர்கள் பாகிஸ்தானின் உதவியைக்கூட நாடுவார்கள். 

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தங்களுக்கு தோல்வி நிச்சயம் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு என்ற பிரச்சனையை காங்கிரஸ் கட்சியினர் பூதாகரப்படுத்தி தேர்தல் ஆதாயம்பெற நினைக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    சமீபத்தில் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் மாநாட்டில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக பழையபடி வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும் என சில தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைப்பதற்காக எதிர்க்கட்சிகள் சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி  தெரிவித்தார்.

    இந்த குழுவில் காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் மனு சிங்வி, சமாஜ்வாடி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் சதீஷ் மிஷ்ரா, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #MANaqvi  #EVMtampering
    தேர்தல்களில் வெற்றிப்பெற பாரதிய ஜனதா வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்கிறது என சிவசேனா பகிரங்கமாக சாடிஉள்ளது. #ShivSena #BJP #EVMs
    மும்பை:

    தேர்தல் முடிந்ததும் வாக்குப்பதிவு இந்தியரங்களில் மோசடி செய்யப்படுகிறது, ஹேக்கிங் செய்யப்படுகிறது என அரசியல் கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது தொடர்கதையாகி வருகிறது. தேர்தல் நடைபெறுகையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் வாக்குப்பதிவானதை தெரிவிக்கும் விதமாக பா.ஜனதா சின்னத்தில் விளக்கு எரிகிறது என்ற குற்றச்சாட்டும் தேர்தல் நேரங்களில் முன்வைக்கப்பட்டது. இயந்திரத்தில் மோசடி என்பதை தேர்தல் ஆணையமும் மறுத்து வருகிறது.

    இந்நிலையில் தேர்தல்களில் வெற்றிப்பெற பாரதிய ஜனதா வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்கிறது என பா.ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனா பகிரங்கமாக சாடிஉள்ளது.

    கர்நாடகாவில் பெருமளவு போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது, கர்நாடகாவில் தேர்தல் செயல்முறைகள் எப்படி மோசமான நிலையை எட்டி உள்ளது என்பதை காட்டுகிறது எனவும் சிவசேனா விமர்சனம் செய்து உள்ளது.

    சிவசேனாவின் கட்சி பத்திரிக்கையான சாம்னாவின் தலையங்கத்தில், “காங்கிரஸ் இல்லாத பாரதம் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். காங்கிரசும் முடிவுக்கு சென்றுக்கொண்டு இருந்தாலும், அதனுடைய சிந்தனைகள் இறக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் குணங்களை கொண்டு அக்கட்சியை முடிவுக்கு கொண்டுவர பா.ஜனதா முயற்சி செய்கிறது,” என குறிப்பிடப்பட்டு உள்ளது.


    “தேர்தல்களில் அதிகமான அளவு பணம் செலவு செய்யப்படும் என்பது வழக்கமானதாக இருக்கிறது. பாரதிய ஜனதாவிற்கு எங்கிருந்து இவ்வளவு பணம் கிடைக்கிறது இனியும் ரசியமாக இருக்காது, அது எல்லோருக்கும் தெரிந்தது. பஞ்சாயத்து தேர்தலாக இருந்தாலும், பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் பணம் புரளுவது வழக்கமானது. பணம் வழங்குவதை காங்கிரஸ் தொடங்கியது, இப்போது பா.ஜனதா பின்பற்றுகிறது.

    பாரதிய ஜனதா எங்களுடைய தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துவிட்டது என ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார். ஏமாற்றியோ, தவறான வழியிலோ தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கொள்கையை பாரதிய ஜனதா கையில் எடுத்து உள்ளது. பாரதிய ஜனதா தன்னுடைய கொள்கையை முன்னெடுத்து செல்கிறது என்பது காங்கிரஸ் பெருமைப்பட வேண்டும்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தேர்தலில் பெருமளவு வெற்றியை தனதாக்கிய போது, சிவசேனா தலைவர் பால் தாக்கரே அவருடைய வெற்றி குறித்து கேள்வியை எழுப்பினார். இந்திராவால் பெற்ற வெற்றி கிடையாது, மையால் கிடைத்த வெற்றி என்றார். இப்போது மையை பயன்படுத்தும் முறையானது கிடையாது. ஆனால் பாரதிய ஜனதா தேர்தல்களில் வெற்றிப்பெற வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்கிறது, இப்போது உள்ள தேர்தல் முறையில் இனியும் மக்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். ஆட்சியில் இருப்பவர்களுடைய முகமூடிதான் மாறிஉள்ளது, ஆனால் அதற்கு பின்னால் இருப்பவர்களின் முகமானது அப்படியே இருக்கிறது.

    காங்கிரஸை பாரதிய ஜனதா தோற்கடிக்கவில்லை, ஆனால் மோசடியில் அதனுடன் இணைந்து உள்ளது,” என சிவசேனா தெரிவித்து உள்ளது. #ShivSena #BJP #EVMs
    ×