search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vote at a polling booth"

    மக்களின் ஆத்திரம் ஓட்டுகளாக மாறி விழுந்து கொண்டிருப்பதால் இந்த தேர்தலில் பா.ஜ.க. அரசு வீழ்வது உறுதி என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு  நடைபெற்றுவரும் ஆறாம்கட்ட தேர்தலில் உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது கணவர் ராபர்ட் வதேராவுடன் டெல்லி லோடி எஸ்டேட் பகுதியில் உள்ள சர்தார் பட்டேல் வித்யாலயாவில் தனது வாக்குரிமையை இன்று நிலைநாட்டினார்.



    வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரியங்கா காந்தி, ‘உண்மையான விவகாரங்களை பற்றி பேசுவதை தவிர்த்துவிட்டு பிரதமர் மோடி தேவையில்லாத கதைகளை கூறி வருவதால் மத்தியில் நடைபெறும் ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகுந்த வேதனையும் ஆவேசமும் கொண்டுள்ளனர். 

    இப்போது அவர்கள் தங்களது ஆத்திரத்தை ஓட்டுகளாக பதிவு செய்து கொண்டிருப்பதால் இந்த தேர்தலில் பா.ஜ.க. அரசு வீழ்வது உறுதி என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
    தலைநகர் டெல்லியில் அவுரங்கசீப் லேனில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த தேர்தலில் அன்பு வெற்றி பெறும் என தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்டமாக இன்று 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

    இந்த தேர்தலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்பட முக்கிய பிரமுகர்கள் காலையில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லியின் அவுரங்கசீப் லேனில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாக்கை பதிவுசெய்தார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சனை, கப்பார் சிங் வரி (ஜி.எஸ்.டி.) மற்றும் ரபேல் ஊழல் என இந்த தேர்தலில் பல முக்கிய விவகாரங்கள் உள்ளன. தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி வெறுப்புணர்வை வெளிப்படுத்தினார். நாங்கள் அன்பை பயன்படுத்தினோம். இந்த மக்களவை தேர்தலில் அன்பு வெற்றி பெறும் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லியின் அவுரங்கசீப் லேனில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்களித்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்டமாக இன்று 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

    இந்த தேர்தலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லியின் அவுரங்கசீப் லேனில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாக்கை பதிவுசெய்தார்.
    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. 5 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்று 6-வது கட்டமாக, 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.



    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அரியானாவிலும், டெல்லியில் கவுதம் காம்பீரும் வாக்களித்தனர்.
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. 5 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்று 6-வது கட்டமாக, 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அரியானாவின் குருகிராம் பகுதியில் உள்ள பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

    இதேபோல், டெல்லி கிழக்கு தொகுதியின் பாஜக வேட்பாளரான கவுதம் காம்பீர், ராஜீந்தர் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
    ×