search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் - டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாக்களித்தார்
    X

    பாராளுமன்ற தேர்தல் - டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாக்களித்தார்

    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. 5 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்று 6-வது கட்டமாக, 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.



    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
    Next Story
    ×