என் மலர்
இந்தியா

தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளை சந்திக்க ஆவலுடன் உள்ளேன்- பிரதமர் மோடி
- ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன்.
- ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்கிறேன்.
புனிதமான ராமநவமி நாளில் தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளை சந்திப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு தனது வருகை குறித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது:-
நாளை, ஏப்ரல் 6-ம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளை சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.
புதிய பாம்பன் ரெயில் பாலம் திறந்து வைக்க உள்ளேன். ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டவும் உள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






