என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவந்திகா"

    • அவந்திகா சில மாதங்களுக்கு முன்பு நகைக்கடை விளம்பரத்தில் நடித்திருந்தார்.
    • மகள் நடித்ததை பற்றி குஷ்பு உணர்வுபூர்வமாக பதிவிட்டிருந்தார்.

    நட்சத்திர தம்பதிகளான சுந்தர்.சி- குஷ்பு தம்பதியரின் மகள் அவந்திகா சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். 'ஆரம்பம்' என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள அவந்திகா நடிக்கும் படத்தின் பூஜை திரிசூரில் நடந்தது.

    படத்தில் சரிதா, அல்தாப் சலீம், இந்திரன்ஸ் விஜயராகவன், கலாபவன் ஷாஜோன் உள்பட பலர் நடிக்கின்றனர். படத்தை சுஜேஷ் இயக்குகிறார். இந்த படம் தமிழிலும் வெளியாகிறது. அவந்திகா சில மாதங்களுக்கு முன்பு நகைக்கடை விளம்பரத்தில் நடித்திருந்தார்.

    மகள் நடித்ததை பற்றி குஷ்பு உணர்வுபூர்வமாக பதிவிட்டிருந்தார். தொடர்ந்து இப்போது அவந்திகா சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். குஷ்பு இளைய மகள் அவந்திகா மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

    பாலிவுட்டில் சில படங்களில் நடித்த நடிகை அவந்திகாவின் நிர்வாண புகைப்படத்தை இயக்குனர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். #AvantikaGaokar
    பட உலகில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி வீதிக்கு வந்து போராடியதால் இந்திய திரையுகமே பரபரப்பானது. ஸ்ரீரெட்டி சொல்வது உண்மைதான் என்று அவருக்கு சிலர் ஆதரவாகவும் பொய் சொல்கிறார் என்று சில நடிகைகள் எதிர்த்தும் குரல் கொடுத்தனர்.

    தெலுங்கு நடிகர் சங்கம் புதிய குழுவை நியமித்து நடிகைகள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க தொடங்கி உள்ளது. தமிழ் பட உலகிலும் நடிகைகள், பெண் இயக்குனர்கள் உள்ளிட்டோர் சேர்ந்து பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் ஒருவர் சினிமா வாய்ப்பு கேட்டு வந்த நடிகையை நிர்வாணமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம் இந்தி பட உலகில் நடந்துள்ளது.

    அந்த நடிகையின் பெயர் அவந்திகா. இவர் சில இந்தி படங்களில் நடித்துள்ளார். விளம்பரங்களில் மாடலாகவும் வருகிறார்.



    அவந்திகாவின் நிர்வாண படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது நிர்வாண படத்தை பார்த்து அவந்திகாவும் அதிர்ந்து போனார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    “என்னை ஒரு இணையதள தொடரில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தனர். அதன் இயக்குனர் நிர்வாணமாக என்னை போட்டோ எடுக்க வேண்டும் என்றார். நான் அதற்கு சம்மதித்து போஸ் கொடுத்தேன். அதன்பிறகு எனக்கு தெரியாமல் அந்த நிர்வாண படத்தை இணையதளத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். நான் தற்போது லக்னோவில் இந்தி படமொன்றில் நடித்து வருகிறேன். மும்பை திரும்பியதும் இயக்குனர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
    ×