search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருப்பம்புலத்தில் ரத்ததான முகாம்
    X

    ரத்ததான முகாம்

    கருப்பம்புலத்தில் ரத்ததான முகாம்

    • முகாமில் மாணவ- மாணவிகளுக்கு ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் 51 யூனிட் ரத்தம் பெறப்பட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா, கருப்பம்புலம் அரசு மருத்துவமனை, கருப்பம்புலம் ஊராட்சி மன்றம், வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர்.

    முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் ரத்தம் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நிலவழகி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் பிரபாகரன், பேராசிரியர் ராஜா, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மாரிமுத்து, மாணவ- மாணவிகள் மற்றும் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் 51 யூனிட் ரத்தம் பெறப்பட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முகாமில் மாணவ- மாணவிகளுக்கு ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    Next Story
    ×