search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளத்தில் ரத்த தானம், பொது மருத்துவ முகாம்- சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்
    X

    பொது மருத்துவ முகாம் நடந்த போது எடுத்த படம்.

    ஆலங்குளத்தில் ரத்த தானம், பொது மருத்துவ முகாம்- சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்

    • உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ரத்த தான முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் முகாமை தொடங்கி வைத்துப் பேசினார்.

    ஆலங்குளம்:

    தி.மு.க. மாநில இளை ஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின், 45ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஆலங்குளத்தில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம், நெல்லை மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் ரத்த தான முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

    ஆலங்குளம் தெற்கு ஒன்றியத் தலைவர் அரவிந்த்ராஜ் திலக் தலைமை தாங்கினார். உதயநிதி மன்ற ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர் செல்லத்துரை, பொரு ளாளர் திராவிடமணி, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பொருளாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சிவ அருணன் வரவேற்றார்.

    தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்துப் பேசினார்.

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திவ்யா மணிகண்டன், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ராஜதுரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    மருத்துவர்கள் சரண்யா அருணாச்சலம், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். நெல்லை தனியார் ரத்த வங்கி சார்பில் மன்ற உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்களிடம் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

    விழாவில் ஆலங்குளம் பேரூராட்சித் தலைவர் எம்.சுதா மோகன்லால், மாநில பொதுக்குழு உறுப்பினர் சமுத்திரபாண்டியன், மாவட்ட பிரதிநிதி தனுஷ்கோடிஅன்பழகன்.தொழிலதிபர்கள.மணிகண்டன், மோகன்லால், செல்வன், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தரம், மாவட்ட பிரதிநிதிகள்அன்பழகன், சாமுவேல்ராஜா, முன்னாள் மாவட்ட பிரதிநிதி அண்ணாவி காசிலிங்கம், நகர பொருளாளர் சுதந்திரராஜன், புதுப்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் மாரியப்பன், ஆலங்குளம் நகர துணை செயலாளர் சரஸ்வதி, உதயநிதி மன்ற ஆலங்குளம் வடக்கு ஒன்றியத் தலைவர் அருணா பாண்டியன், ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர்.மகேஷ், துணைத் தலைவர் ஹரிகரசுதன், பாப்பாக்குடி ஒன்றியத் தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலாளர் சந்தண சுப்பிரமணியன், பொருளாளர் சதீஷ்குமார், ஐடி பிரிவு விக்னேஷ், கீழப்பாவூர் திமுக நகரச் செயலாளர் ஜெகதீஷன், ராமகிருஷ்ணன், துரை, நகரப் பிரதிநிதி ஆதிவிநாயகம் ஆசிர்வாதம்.டிரைவர் சாலமோன் பொன் மோகன்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    நகர செயலாளர் எஸ்.பி.டி.நெல்சன் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை, உதயநிதி மன்ற ஒருங்கிணைந்த மாவட்ட துணை செயலாளர் சிவ அருணன் செய்திருந்தார்.

    Next Story
    ×