search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜமாபந்தியில் ஊழியரிடம் மனிதநேயத்துடன் நடந்து கொண்ட ஆர்.டி.ஓ
    X

    ஜமாபந்தியில் பொதுமக்களிடம் மனுக்களை நின்றுகொண்டே பெற்ற ஆர்.டி.ஓ.பெளலின்.

    ஜமாபந்தியில் ஊழியரிடம் மனிதநேயத்துடன் நடந்து கொண்ட ஆர்.டி.ஓ

    • வேதாரண்யம் ஆர்.டி.ஓ பெளலின் நாற்காலியில் அமராமல் பொதுமக்களுக்கு மதிப்பளித்து அவர்களிடம் இருந்து மனுக்களை நின்று கொண்டு பெற்றுக்கொண்டார்.
    • ஊழியர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் சக ஊழியர்களுக்கு தகுந்த மரியாதை அளித்து அவரின்உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில்கடந்த 7ஆம் தேதி முதல்வேதாரண்யம் ஆர்.டி.ஓ. பெளலின் தலைமையில்ஜமாபந்தி துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஜமாபந்தியில் நேற்று வரை 244மனுக்கள் பெறப்பட்டு அதற்கான உடனடி திர்வும் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று தகட்டூர் தாணிக்கோட்டகம் ,வாய்மேடு, தென்னடார் பஞ்சநதிக்குளம் மேற்கு ஆகிய வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நடைபெற்றது இதில் 55 மனுக்கள் பெறப்பட்டு 6 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுமுதியோர் உதவித்தொகை வழங்க ப்பட்டது.வழக்கமாக கோட்டாட்சி யர்கள் பொதுமக்களிடம் மனுக்களை நாற்காலியில் அமர்ந்தபடி தான் வாங்கி வருவது வழக்கம் ஆனால் வேதாரணியம் கோட்டாட்சியர் பெளலின் நாற்காலியில் அமராமல் பொதுமக்களுக்கு மதிப்ப ளித்து அவர்களிடம் இருந்து மனுக்களை நின்று

    கொண்டு பெற்றுக் கொண்டு இருக்கும் போது தென்னடார் ஊராட்சி மனுக்கள் பெறும் நேரம் வந்தது அப்போது அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் உடல்நிலை சரி இல்லாமல் நடந்து வந்தார்இதை பார்த்த கோட்டாட்சியர் பெளலின் உடனடியாக அவரை நாற்காலியில் அமரச் செய்தார்.அதற்கு கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் அமர மறுத்து விட்டார் பிறகுகோட்டாட்சியர் பெளலின் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் உடல் நிலையை கருத்தில் கொண்டுவற்புறுத்தி அவரை தனது அருகே நாற்காலியில் அமரச் செய்தார்.

    பிறகுதான் தான் நின்று கொண்டே பொது மக்களிடம் மனுக்களை வாங்கினார் ஊழியர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் சக ஊழியர்களுக்கு தகுந்த மரியாதை அளித்து அவரின்உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக மனுக்களை பெற்றுகிராம நிர்வாக அலுவலரைவீட்டுக்கு செல்ல அறிவுறுத்தினார் இந்த மனிதாபிமான செயலை வருவாய்த்துறை ஊழியர்கள் வெகுவாக பாராட்டினர்ஜமாபந்தி முகாமில் தாசில்தார் ரவிச்ச ந்திரன் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வேதையன் மண்டலதுணை வட்டாட்சியர் ரமேஷ் தேர்தல் துணை வட்டாட்சியர் ராஜா வேதாரண்யம் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் உள்ளிட்ட வருவாய்துறையினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×