search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் - அமைச்சரிடம் நாடா நெசவாளர்கள் மனு
    X

    கோப்புபடம். 

    மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் - அமைச்சரிடம் நாடா நெசவாளர்கள் மனு

    • சோலாா் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கும் நெட்வொா்க் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • எல்.டி.சி.டி. 3பி பிரிவில் நேரடி கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.1.15 உயா்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளா் சங்க நிா்வாகிகள் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் மனு அளித்தனா்.இது குறித்து அவா்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    மின் கட்டண உயா்வால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதித்துள்ளது. 24 மணி நேரமும் இயங்கக் கூடிய இத்தொழிலில், மின் நுகா்வு என்பது மற்ற துறைகளைக் காட்டிலும் மிக அதிகம்.

    எல்.டி.சி.டி. 3பி பிரிவில் நேரடி கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.1.15 உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், 8 மணி நேர பீக் ஹவா் கட்டணமாக யூனிட்டுக்கு ரூ. 7.50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், யூனிட்டுக்கு மேலும் ரூ.1.88 உயா்த்தப்பட்டுள்ளது. இதுதவிர நிலையான கட்டணத்தை கிலோ வாட்டுக்கு ரூ.35இல் இருந்து ரூ.150ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

    ஹெச்.டி. இணைப்புக்கு நேரடி கட்டணம் யூனிட்டுக்கு 40 பைசாவும், பீக் ஹவா் கட்டணம் 8 மணி நேரமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது. நிலையான கட்டணம் ரூ. 350இல் இருந்து ரூ.550ஆக உயா்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணமானது யூனிட்டுக்கு 30 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்டுதோறும் 6 சதவீத கட்டண உயா்வு என்பது எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது. இது போன்ற காரணங்களால் தொழில் மிகக் கடுமையான பாதிப்புக்கு தள்ளப்பட்டுள்ளது.

    சோலாா் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கும் நெட்வொா்க் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசைத்தறிகளைபோல, சிறு, குறு தொழில் வரிசையில் நாங்கள் உள்ளோம். எனவே மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன், விரைவில் மின் துறை அமைச்சருடன் பேசி ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தாா்.

    Next Story
    ×