search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Castration"

    • மஞ்சுவிரட்டு போட்டிக்கு தடைகேட்ட வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
    • அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு வழக்கி னை முடித்து வைத்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த முரு கேசன் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தி ருந்தார். அதில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் உள்ள கம்பளிப்பட்டி, நாகப்பன் சீவல்பட்டி, கந்துகப்பட்டி, தாயம்பட்டி ஆகிய கிராமங் களை உள்ளடக்கியது நெல்லுக்குண்டுபட்டி கிராமமாகும்.இந்த கிராமத்தில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு நாளை முதல் 9-ந் தேதி வரை கோயில் திருவிழாவை நடத்த கிராம மக்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளோம்.

    மேலும் கோயில் திருவிழாவின் கடைசி நாளில் மஞ்சுவிரட்டு மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    கடந்த ஆண்டு சிறுவன் ஒருவன் ஆடல் பாடல் நிகழ்ச்சியின்போது படுகொலை செய்யப்பட்ட காரணத்தால் கிராமத்தில் பெரும் பதற்றம் உருவாகி சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது.

    அதனால், இந்த ஆண்டு கோயில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என கிராம மக்கள் அனைவரும் முடிவு செய்துள்ளோம்.

    இந்நிலையில் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் 5 கிராம மக்களின் முடிவுக்கு எதிராக மஞ்சு விரட்டு நடத்த அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். அப்படி, மஞ்சுவிரட்டு நடத்தினால் கிராமத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே, மதுரை, மேலூர், நெல்லுக்குண்டு பட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்த தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசுத் தரப்பில், மனுதாரர் கூறியது போன்று மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி கோரி எந்த மனுவும் மாவட்ட நிர்வாகத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதிகள், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு வழக்கி னை முடித்து வைத்தனர்.

    • மஞ்சுவிரட்டு போட்டியில் 300 காளைகள் பங்கேற்றன.
    • மாடுகளை பிடிக்க இளைஞர்கள் பட்டாளம் குழுமி இருந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது வெள்ளலூர் நாடு. இதனை சார்ந்தது ஒத்தப்பட்டி. இங்குள்ள மந்தை கருப்பணசாமி மற்றும் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள கண்மாய் பகுதியில் தொழு அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் மேலூர், வெள்ள லூர், உறங்கான்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தது. இதையொட்டி கிராமத்தின் சார்பில் ஜவுளி பொட்டலங்கள் கொண்டு வந்து காளைகளுக்கு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாடுகளை அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்து மாடுகளை பிடிக்க இளைஞர்கள் பட்டாளம் குழுமி இருந்தது. இதில் ஏராளமான மாடுகளை வீரர்கள் பிடித்தனர். மாடுகளை பிடிக்கும்போது 20-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    இதில் காயமடைந்த வீரர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மேலூர் மற்றும் வெள்ளலூர் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியை காண சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கீழவளவு போலீசார் செய்திருந்தனர்.

    ×