search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
    X

    கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

    • கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
    • போலீசார் விசாரணை

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் குறித்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    இந்த நிலையில் மனு கொடுக்க வந்த ஒரு பெண் கலெக்டர் அலுவலகம் முன்தனது உடலில் திடீரென மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் அவரை தனியாக அழைத்துச்சென்று விசா ரணை நடத்தினர்.

    இதில் அந்த பெண் சோழவந்தானை அடுத்த பொம்பன்பட்டியைச் சேர்ந்த மரியா என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் கூறியதா வது:-

    நான் எனது கணவர் ஜான் வெஸ்லி, நாத்தனார் கலா ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தேன்.எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து என்னை வீட்டை விட்டு வெளியேறும்படி வற்புறுத் தினர். அப்போது நான், எனக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று தெரிவித்தேன். இதனால் ஆத்திரமடைந்த கலா உள்ளிட்ட 6 பேர் என்னை தாக்கினர். இது பற்றி சோழவந்தான் போலீஸ் நிலையத்திலும், எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் செய்தேன். இருந்த போதிலும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வாழ்க்கையில் வெறுப்ப டைந்து கலெக்டர் அலுவ லகம் முன்பு தீக்குளிக்க முடிவு செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×