search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1988-ம்ஆண்டு பயிற்சியில் இணைந்தவர்கள்: காஞ்சிபுரத்தில் போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி
    X

    1988-ம்ஆண்டு பயிற்சியில் இணைந்தவர்கள்: காஞ்சிபுரத்தில் போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி

    • ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்ர் விஸ்வநாதன் மற்றும் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
    • திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வரவேற்றார்.

    1998-ம் ஆண்டு காவலர் பயிற்சியில் இணைந்த போலீசார் வாட்ஸ்-அப் குழு மூலம் மீண்டும் காஞ்சிபுரத்தில் சந்திக்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் அருகே உள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்ர் விஸ்வநாதன் மற்றும் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வரவேற்றார். சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன், ஜெயவேலு கணேசன்,செல்வராஜ்,அசோக் குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ராஜகோபால், நாகராஜன் நன்றி கூறினர்.

    Next Story
    ×