search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் திருட்டு
    X

    கோப்பு படம்.

    மோட்டார் சைக்கிள் திருட்டு

    • வீட்டுமுன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருடு போனது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அம்மாபட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துபாரதி (வயது 32). இவர் மதுரை பைனான்ஸ் நிறுவனத்தில் கார் லோன் பிரிவில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். மறு நாள் காலையில் வந்து பார்த்தபோது அது திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இது குறித்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×