search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "labour"

    • மாசானம் வெளிநாட்டில் பணி புரிந்து விட்டு, தற்போது ஊரில் கூலி தொழில் செய்து வருகிறார்.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பும் மாசானம் அந்த பெண்ணுடன் பேசியதாக தெரிகிறது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுடலையாண்டி மகன் மாசானம் (வயது 23). இவர் வெளிநாட்டில் பணி புரிந்து விட்டு, தற்போது ஊரில் கூலி தொழில் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் வள்ளியூரில் உள்ள ஒரு பள்ளி யில் படித்த போது, அதே பள்ளியில் படித்த பட்டர்புரத்தை சேர்ந்த மாணவியிடம் பேசி பழகி வந்துள்ளார். இதனை அறிந்த அந்த மாணவி யின் தந்தை கண்டித்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் மாசானம் அந்த பெண்ணுடன் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து பெண்ணின் தந்தை, அவரது சகோதரர்கள் என 4 பேர் சேர்ந்து, மாசானத்தின் வீட்டிற்குள் புகுந்து, அவரை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 4 பேரை தேடி வருகின்றனர்.

    • காந்திபுரத்தில் நடந்த காளிபூஜையில் கலந்து கொள்ள ராஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    களக்காடு:

    மாவடி, உடையடிதட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 39). தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் டோனாவூர் அருகே உள்ள காந்திபுரத்தில் நடந்த காளிபூஜையில் கலந்து கொள்ள தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை தசரா குழு பிறை அருகே நிறுத்தி விட்டு, காளி பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்ம நபர் திருடி சென்றதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி தொழிலாளியின் மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • பெண்ணின் பெற்றோர் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர்.
    • பொன்னுசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    தர்மபுரி மாவட்டம் கொல்லகொட்டகை என்ற ஊரைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 28). இவருக்கு திருமணம் நடந்து ஒரு மகன் உள்ளார்.

    இவர்கள் தற்போது கவுண்டம்பாளையம் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் வசித்து வருகின்றனர். பொன்னுசாமி கட்டிடத் தொழில் செய்து வருகிறார். தற்போது இவரது மனைவி கர்ப்பமாக இருப்பதால் தனது மகனுடன் ஊருக்கு சென்றுள்ளார்.

    தனியாக வசித்து வரும் இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு இடிகரை பகுதிக்கு கட்டிட வேலைக்கு சென்றார். அங்கு வேலை செய்யும் போது பக்கத்து வீட்டில் இருந்த 17 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. தனக்கு திருமணம் ஆனதை மறைத்து பொன்னுச்சாமி அந்த பெண்ணுடன் நெருங்கி பழகினார். திடீரென அந்த பெண்ணுடன் அவர் மாயமானார்.

    இதுபற்றி அந்த பெண்ணின் பெற்றோர் பெரியநாயக்கன் பாளையம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர்.

    புகாரில் தங்கள் மகளை காணவில்லை எனவும், பக்கத்து வீட்டில் கட்டிட வேலைக்கு வந்து சென்ற வாலிபர் அவரை கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்து இருந்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாயமான சிறுமியை பொன்னுசாமி திருமணம் செய்து கொண்டு பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை போலீசார் மீட்டனர்.

    சிறுமியை ஆசை காட்டி ஏமாற்றி திருமணம் செய்து குடும்பம் நடத்திய பொன்னுசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

    • தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்
    • போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை வெள்ளலூரில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு குப்பையை தரம் பிரித்து உரமாக பிரிக்கும் பணி நடந்து வருகிறது.இதற்காக ராட்சத எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    இங்கு கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சத்யா (வயது23) வேலை செய்து வருகிறார். இவர் இன்று காலை குப்பைகளை நசுக்கும் எந்திரத்துக்குள் சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த மற்றொரு பணியாளர், சத்யா உள்ளே இருப்பதை கவனிக்காமல் எந்திரத்தின் சுவிட்ச்சை ஆன் செய்ததார். கண் இமைக்கும் நேரத்தில் சத்யாவின் இரண்டு கால்களும் எந்திரத்துக்குள் சிக்கி நசுங்கியது.

    இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனைக் கேட்டவர்கள் உடனடியாக எந்திரத்தை அணைத்தனர். இதில் அவரது இரண்டு கால்களும் எந்திரத்துக்குள் சிக்கி தொடை வரை நசுங்கி சிதைந்தது.

    உடனடியாக அவர்கள் இதுகுறித்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் உயிருக்கு போ ராடிய சத்யாவை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக சாய்பாபா காலனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • லெனின்சிங் தனது மனைவி அனிதாவிடம் கடைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.
    • பல்வேறு இடங்களில் தேடியும் லெனின்சிங் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மாயநேரியை சேர்ந்தவர் லெனின்சிங் (வயது 32). தொழிலாளி. கடந்த 17-ந் தேதி இவர் தனது மனைவி அனிதாவிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் லெனின்சிங் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர் விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான லெனின்சிங்கை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கோதைசேரியை சேர்ந்த அருண்குமார் , குமாரிடம் செலவுக்கு பணம் கேட்டார்.
    • அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி, மிரட்டி அவரிடமிருந்த ரூ.300-ஐ பறித்து சென்றார்.

    களக்காடு :

    திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 45). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கோதைசேரி விலக்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோதைசேரியை சேர்ந்த அருண்குமார் (23), குமாரிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி, மிரட்டி அவரிடமிருந்த ரூ.300-ஐ பறித்து சென்றார். இதுபற்றி குமார் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அருண்குமாரை கைது செய்தனர்.

    • மிக்கேல் போஸ்கோ அங்குள்ள மிக்கேல் அதிதூதர் கெபியில் மண்ணை அள்ளி போட்டுள்ளார்.
    • ஆத்திரம் அடைந்த ஜெபஷ்டின், மிக்கேல் போஸ்கோவை கம்பால் தாக்கினார்.

    களக்காடு:

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள உள்வாய் நாகல்குளத்தை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் மிக்கேல் போஸ்கோ (வயது 29). தொழிலாளி. இவர் சம்பவ த்தன்று அங்குள்ள மிக்கேல் அதிதூதர் கெபியில் மண்ணை அள்ளி போட்டுள்ளார். இதைப்பார்த்த அதே ஊரை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சேசுமிக்கேல் மகன் ஜெபஷ்டின் (25), மிக்கேல் போஸ்கோவை கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெபஷ்டின், மிக்கேல் போஸ்கோவை கம்பால் தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டார்.

    இதுபற்றி மூலை க்கரைப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இதுதொடர்பாக ஜெபஷ்டினை தேடி வருகின்றனர்.

    • ராஜேந்திரன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது.
    • தனது வீட்டு கதவை உட்புறமாக தாளிட்டுக் கொண்டு கேஸ் சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    அவினாசி,ஜூலை.16-

    அவினாசியை அடுத்து அணைப்புதூர் எருமைக்காடு தோட்டம்கணபதிசாமி காம்பவுண்டில் வசிப்பவர் ராஜேந்திரன் (வயது 38). இவரும் இவரது மனைவியும் அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர் .இவர்களுக்கு திருமணம் ஆகி 19 ஆண்டு ஆகிறது. இவர்களது மகள் கோவையில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது மனைவி தனது மகளைப் பார்க்க கோவைக்கு சென்று விட்டார். ராஜேந்திரன் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ராஜேந்திரன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது. எனவே வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே பார்த்தபோது ராஜேந்திரன் தீக்காயங்களுடன் கருகிய நிலையில் கிடந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.விசாரணையில் ராஜேந்திரன் தனது வீட்டு கதவை உட்புறமாக தாளிட்டுக் கொண்டு கேஸ் சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் அவரது கழுத்தில் நைலான் கயிறு சுற்றி இருந்தது. இது குறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

    • குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி மேட்டூரில் நடைபெற்றது.
    • ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் 120-க் கும் மேற்பட்ட வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டனர்.

    சேலம்:

    தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி மேட்டூரில் நடைபெற்றது. சேலம் மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் தலைமை தாங்கி பேசினார்.

    அவர் பேசுகையில், இன்றைய நவீன காலத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி வருமானம் சம்பாதிப்பது குழந்தைகளின் பெற்றோருக்கும், வேலை அளிப்பவர்களுக்கும், சமதாயத்துக்கும் நல்லது அல்ல. எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம், வேலைக்கு அல்ல என்ற குறிக்கோளுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றார்.

    குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் முறை தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல் குறித்து இணை இயக்குனர் (பொறுப்பு) தினகரன், கொத்தடிமை தொழிலாளர் முறை அகற்றுதல் சட்டம் குறித்து உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி, ஆள் கடத்தல் மற்றும் இளம் சிறார் நீதி, சட்டம் குறித்து சேலம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரி, வெளிமாநில தொழிலாளர் சட்டம் குறித்து சுகாதார கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் ஆகியோர் பேசினர்.

    இந்த பயிற்சியில் ஓசூர் இணை இயக்குனர் சபீனா, துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் 120-க் கும் மேற்பட்ட வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டனர்.

    • குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
    • குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற என்னால் இயன்றவற்றை செய்வேன்.

    கும்பகோணம்:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். இந்திய அரசமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை . எனவே 14 வயதுக்கு ட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன்.

    குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் . குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

    தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற என்னால் இயன்றவற்றை செய்வேன் என உறுதியளிக்கிறேன் என போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    இதில் பொது மேலாளர் முகமது நாசர், முதுநிலை துணை மேலாளர் கோவிந்தராஜன், முதன்மை தணிக்கை அலுவலர் சிவகுமார் மற்றும் துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக தங்களை பதிவு செய்து பயனடைந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் ஒன்றியம் சித்தூர் ஊராட்சிக்குட்பட்ட வன்னிவயல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசித்ரா நவநீதகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் குண சேகரன்,கிராம நிர்வாக அலுவலர் காமேஸ்வரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டு இந்த சிறப்பு முகாமினை துவக்கி வைத்தனர்.

    இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட பதிவு செய்யாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக தங்களை பதிவு செய்து பயனடைந்தனர்.

    சாயர்புரம் அருகே உள்ள குமாரபுரத்தில் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள குமாரபுரத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது 54). இவரது மனைவி சரோஜினி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 

    ஆபிரகாம் தோட்டத்திற்கு பூச்சி மருந்து அடிக்கும் கூலி வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் காலில் அடிபட்டு காயத்தால் அவதிப்பட்டு வந்தார். 

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் மதுவில் விஷம் கலந்து குடித்தார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸில் அழைத்து சென்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் மோகன் ராஜ் சாயர்புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×