என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே தொழிலாளி மீது தாக்குதல்- அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு
- பெருமாள் தனது மாமியார் ராசம்மாளுக்கு ரூ.4 லட்சம் கடனாக கொடுத்தார்.
- சங்கரபாண்டி, சேர்மதுரை ஆகியோர் பெருமாளை சரமாரியாக தாக்கினர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே மூன்றடைப்பை அடுத்துள்ள மாயநேரியை சேர்ந்தவர் பெருமாள் (வயது35). தொழிலாளி. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது மாமியார் ராசம்மாளுக்கு ரூ.4 லட்சம் கடனாக கொடுத்தார்.
தற்போது பெருமாள் புதியதாக வீடு கட்டி வருவதால், மாமியார் ராசம்மாளிடம் சென்று கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவில் மாயநேரியில் உள்ள சுடலை கோவில் அருகே பெருமாள் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ராசம்மாளின் மகன்கள் சங்கரபாண்டி (40), சேர்மதுரை (35) ஆகியோர் எங்களது தாயாரிடம் எப்படி பணத்தை கேட்கலாம் என்று கூறி பெருமாளிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த சங்கரபாண்டியும், அவரது தம்பி சேர்மதுரையும் சேர்ந்து மைத்துனரான பெருமாளை முள் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பெருமாள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சங்கரபாண்டி, சேர்மதுரையை தேடி வருகின்றனர்.






